search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவீந்திர ஜடேஜா"

    • ஜடேஜாவிபதிவில் ரசிகர்கள் தளபதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
    • இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

    அந்த பதிவில், "ஹலோ மை சென்னை ஃபேமிலி எல்லாரும் எப்படி இருக்கீங்க" என்று பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில் ரசிகர்கள் தளபதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    • ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், தனது கணவர் ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்ததை ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

    பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பாஜக உறுப்பினர் ஆகியுள்ளார். கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக உறுப்பினர் சந்தா புதுப்பிக்கப்பட்ட நிலையில், கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.



    கடந்த 2019 ஆம் ஆண்டு ரிவாபா ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்தார். பிறகு 2022 ஆம் ஆண்டு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்தார். 

    • ஜடேஜா ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
    • இந்த பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், ஜடேஜா எடுத்த செல்பியில் டோனி இருப்பதைப் போல எடிட் செய்த புகைப்படத்தை பகிர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், "தல தளபதி வயலில் இருந்தால் எப்படி இருக்கும், சும்மா ஒரு கற்பனைக்கு" என்று சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை.
    • பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார்.

    புதுடெல்லி:

    உலக அளவில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடி காட்டி வருகிறார்.

    ஆனால், சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார். பீல்டிங்கிலும் தடுமாறி வருகிறார் என்பது இந்திய அணிக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரவீந்திர ஜடேஜா, இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார்.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை.

    அக்சர் பட்டேல் சிறப்பாக பேட்டிங் செய்வதால் ஜடேஜாவின் இடத்தைப் பிடித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனவே இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    டி20 போட்டியில் ஜடேஜா ஓய்வை அறிவித்து விட்டதால், இனி ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைப்பது கஷ்டம்தான். ரவிச்சந்திரன் அஸ்வின் போல டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

    • ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
    • கோலி வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்

    டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

    அதில், இந்தியாவின் முன்னணி ஆல் ரவுண்டராக இருந்த ஜடேஜா 45 புள்ளிகளுடன் 85 ஆவது இடத்தை நிறைவு செய்துள்ளார்.

    அதே சமயம் ஜடேஜாவை முந்தி 49 புள்ளிகளுடன் 78 ஆவது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    டி20 கிரிக்கெட்டில் நிறைய ரன்களை எடுத்துள்ள கோலி வெறும் 2.4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    • விராட் கோலி, ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
    • டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது என்றார் ஜடேஜா.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நன்றி நிறைந்த இதயத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுகிறேன். ஒரு வலிமையான குதிரை துள்ளிக் குதிப்பதைபோல, எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக் கோப்பையில் கோப்பையை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகிவிட்டது. இது எனது உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    சென்னை:

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதில் தர்மசாலாவில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். அப்போட்டியில் 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

    அதன் வாயிலாக உலகிலேயே தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற முத்தையா முரளிதரனின் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைத்தார். அத்துடன் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100-வது போட்டியிலும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரராக சாதனை படைத்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் 500 சாதனை விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் கொண்ட சிறப்பு பரிசு, செங்கோல் மற்றும் 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    மேலும் அந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு அஸ்வினை பாராட்டி பேசினார்கள். அதே நிகழ்ச்சியில் அஸ்வினுடைய பவுலிங் பார்ட்னரான ரவீந்திர ஜடேஜா காணொளியில் வந்து வாழ்த்தி பேசினார். அந்த காணொளியில் ரவீந்திர ஜடேஜா பேசியது பின்வருமாறு:-

    "ஹாய் ஆஷ் அண்ணா. 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக உங்களுடைய பங்கு அபாரமானதாகும். நீங்கள் தொடர்ந்து நிறைய விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப்போல் ஒரு ஜாம்பவானாக வர முடியும். நாங்கள் ஒரு பெயரையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நான் ரவி இந்திரன். நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன் மீசை வைக்காதவன் சந்திரன்" என்று கலகலப்பாக பேசினார்.

    அதாவது தில்லு முல்லு திரைப்படத்தில் மீசை வைத்த கேரக்டரில் வரும் ரஜினிகாந்த் இந்திரனாகவும் மீசை வைக்காத கேரக்டரில் வரும் ரஜினி சந்திரனாகவும் இருப்பார்கள். அதே ஸ்டைலில் மீசை வைக்காத அஸ்வின் சந்திரனாகவும் மீசை வைத்த ஜடேஜா இந்திரனாகவும் இந்திய அணியில் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருவதாக ரவீந்திர ஜடேஜா வித்தியாசமாக பாராட்டினார். குறிப்பாக அதை ஜடேஜா தமிழில் பேசி அஸ்வினை பாராட்டியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    • சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் மோதுகின்றன.
    • புகைப்படம், வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றன.

    விரைவில் ஐ.பி.எல். தொடர் துவங்க இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் அதற்கான பயிற்சியை துவங்கியுள்ளன. இது தொடர்பாக அந்தந்த அணிகள் சார்பில் புகைப்படம், வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.


     

    அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல். தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னை வந்தடைந்தார். இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    பதிவில் புகைப்படத்துடன் ரவீந்திர ஜடேஜாவை குறிக்கும் வகையில் 'ராஜா இங்கு கைப்பற்ற இருக்கிறார்,' என தலைப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் ரவீந்திர ஜடேஜாவின் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது.
    • இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஹர்ட்லி ஆகியோரை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா ரோகித், ஜடேஜா ஆகியோரின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றதுடன், 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸை ஜடேஜா அவுட் ஆக்கினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 281வது விக்கெட்டாக அமைந்தது.

    இந்நிலையில், ஜடேஜா சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகளை எடுத்த 5-வது இந்திய பவுலர் என்ற சாதனையை ஜடேஜா நிகழ்த்தியுள்ளார்.

    அனில் கும்ப்ளே 350 விக்கெட்டும், அஸ்வின் 347 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டும், கபில்தேவ் 219 விக்கெட்டும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டி முடிந்த பின்னர் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

    16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார்.

    கடைசி 2 பந்தில் 10 ரன் தேவை என்ற நிலையில், 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜடேஜாவை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

    அதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி. ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்

    இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை அணியின் கேப்டனாக டோனி 200-வது ஆட்டத்தில் பங்கேற்கிறார்.
    • ஐ.பி.எல். போட்டியில் எந்தவித ஸ்கோரும் போதுமானதாக இல்லை.

    இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெற்று டோனிக்கு பரிசளிப்போம் என்று சி.எஸ்.கே. அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை அணியின் கேப்டனாக டோனி 200-வது ஆட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது போல ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெறும் பட்சத்தில் அது டோனிக்கு சிறந்த பரிசாக இருக்கும்.

    ஐ.பி.எல். போட்டியில் எந்தவித ஸ்கோரும் போதுமானதாக இல்லை. சேப்பாக்கம் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளிலும் திறமை வாய்ந்த சுழற்பந்து வீரர்கள் உள்ளனர். இதனால் ஆட்டம இரு அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான மோதலாக இருக்கும்.

    இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார்.

    • லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார்.
    • இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை.

    இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் நாளை முதல் துவங்குகிறது. இந்த தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருக்கும் அவரிடம் தற்சமயத்தில் உலக அரங்கில் அசத்தும் டாப் 3 ஃபீல்டர்களை பெயரிடுமாறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் தான் தற்போதைய நிலையில் ஒரே சிறந்த ஃபீல்டராக இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    தற்போதைய நிலைமையில் ரவீந்திர ஜடேஜா மட்டும்தான் இருக்கிறார். பொதுவாக ஐபிஎல் துவங்கும் போது தான் அனைவரும் பீல்டிங் துறையில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை.


    மேலும் 50 ஓவர் கிரிக்கெட்டில் உங்களுக்கு போதுமான நேரம் இருக்கும். அதில் 6 -7 வீரர்கள் சுமாராக இருந்தாலும் பீல்டிங் துறையில் அசத்தும் 3 -4 வீரர்களை வைத்து வெற்றி காணலாம். ஆனால் ஐபிஎல் துவங்கிய 2008 முதல் பீல்டிங் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த 12 - 13 வருடங்களில் அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் ஒரு அணியில் இருக்கும் 2 - 3 ஃபீல்டர்களை பற்றி மட்டுமே பேசுவோம்.

    ஆனால் இப்போது அணியில் அனைவரும் மிகச் சிறந்த ஃபீல்டர்களாக இருக்க வேண்டும் என்ற வளர்ச்சியை நோக்கி வந்துள்ளோம். மேலும் பீல்டிங் துறையில் கவனம் செலுத்துவது அவ்வளவு கடினமானதல்ல. ஏனெனில் அது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய துறையாகும். தற்போது பேட்டிங், பவுலிங் போலவே பீல்டிங் பயிற்சியாளர்களும் தினம்தோறும் அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றி தங்களது வேலையை முடிக்கிறார்கள். இப்போது பீல்டிங் என்பது கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது என்று கூறினார்.

    ×