என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாராட்டு சான்றிதழ்"
- 25 செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
- தனியார் பள்ளியில் நடைபெற்றது.
கோத்தகிரி,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் நீலகிரி மண்டல மையம் உறுப்பு கல்லூரி சார்பில், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோத்தகிரி வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார். செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பேராசிரியர் அம்பேத் ஆகியோர் பேசினர். தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த 25 செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் ஆலோசகர் ஜெபராஜ் நன்றி கூறினார்.
- விழுப்புரத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
- முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்த பிரதான் மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் சேவையினை சிறப்பான முறையில் மேற்கொண்டனர்.
விழுப்புரம்:
தேசிய மருத்துவர் தினத்தினை யொட்டி மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் மருத்து வர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்த பிரதான் மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் சேவை யி னை சிறப்பான முறையில் மேற்கொண்ட மரகதம் மருத்து மனையின் மருத்து வர் தியாகராஜன் மற்றும் விழுப்புரம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் பணிபுரியும் டாக்டர் கவாஸ்கர் ஆகியோரை கவுர வித்து பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முண்டி யம்பாக்கம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி, துணை முதல்வர் சங்கீதா, இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) பொற்கொடி, நிலைய மருத்துவ அலுவலர் (பொ) வெங்கடேசன், விழுப்புரம் நலப்பணிகள் இணை இயக்குநர், அலுவலக தேசிய நலக்குழும ஒருங்கிணைப்பு அலுவலர் ரகுநாத், விழுப்புரம் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவ லக நிருவாக அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட காப்பீட்டுத் திட்ட மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் இளங்கோவன் மற்றும் மாவட்ட காப்பீட்டுத் திட்ட விஜிலன்ஸ் அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்