search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிநீக்கம்"

    • வங்கியின் ஊழியர் ஒருவருடன் நேடைன் அன் கொண்டிருந்த வரம்பு மீறிய நெருக்கமான தொடர்பே அவரது பணிநீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது
    • மேசனுக்கு தங்களின் உறவு காரணமாகத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்க பரிந்துரைத்துள்ளார்

    ராயல் பேங் ஆப் கனடா 

    உலகம் முழுவதிலும் 2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய சர்வதேச வங்கியான ராயல் பேங் ஆப் கனடாவில் [Royal Bank of Canada] சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அதாவது ராயல் பேங் ஆப் கனடா வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இருந்து வந்த நேடைன் அன் [Nadine Ahn] கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

     

    காதல் உறவு 

    வங்கியின் ஊழியர் ஒருவருடன் நேடைன் அன் கொண்டிருந்த வரம்பு மீறிய நெருக்கமான தொடர்பே அவரது பணிநீக்கத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில் நேடைன் தொடர்பிலிருந்த மேசன் என்ற அந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

    வழக்கு 

    மேலும் இதுதொடர்பாக நேற்று [ஆகஸ்ட் 23] நீதிமாறத்திலும் ராயல் பேங் ஆப் கனடா வங்கி வழக்குத் தொடர்ந்துள்ளது. தனது அறிக்கையில் ராயல் பேங் ஆப் கனடா கூறியதாவது, வங்கியின் விதிகளை மீறி தலைமை நிதி அதிகாரியாக இருந்த நேடைன் ஆன் தனக்குக் கீழ் வேலை செய்துவந்த மேசனுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக உறவு வைத்துள்ளார். ப்ராஜெக்ட் கென் என்ற திட்டத்தில் நேடைன் ஆன் மேற்பார்வையில் பணியாற்றிவந்த மேசனுக்கு தங்களின் உறவு காரணமாகத் தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்து வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உட்படச் சிறப்புச் சலுகைகளை வாங்கிக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

     

    நஷ்டஈடு 

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள நேடைன் ஆன், தங்கள் இருவருக்கும் இடையில் எந்தவிதமான காதல் உறவும் இல்லை என்றும் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வங்கி மக்கள் மத்தியில் தனது பெயருக்கு வெளிப்படையாகக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆன் மற்றும் மேசன் ஆகிய இருவரும் வங்கியிடம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

    • செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் டெல் முதலீடு செய்யவுள்ளது.
    • கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL நிறுவனம் பணிநீக்கம் செய்தது.

    அமெரிக்காவைச் சேர்ந்த கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான DELL, அதன் சேல்ஸ் பிரிவிலிருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

    செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இத்தனை பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது.
    • அடுத்த ஆண்டு 10 பில்லியன் டாலர்கள் சேமிக்கும்.

    இன்டெல் நிறுவனம் தொழில்நுட்ப துறையின் சிப் உற்பத்தியில் தனது போட்டியாளர்களான என்விடியா (NVIDIA) மற்றும் ஏஎம்டி (AMD) உள்ளிட்டவைகளுடனான போட்டியை பலப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    உலகம் முழுக்க தங்களது அலவலகங்களில் பணியாற்றி வருவோரில் 15 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக இன்டெல் அறிவித்து இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கை காரணமாக இண்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களில் 15 ஆயிரம் பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளது. இதனை இன்டெல் கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேட் கெல்சிங்கர் அனுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் இன்டெல் நிறுவனம் அடுத்த ஆண்டு 10 பில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் சுமாராக ரூ. 8.28 லட்சம் கோடியை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    பணி நீக்கம் தவிர்த்து நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எதிர்பார்த்த வருவாய் இல்லாதது, ஏஐ துறையில் முழுமையான பலன்களை அடையாமல் இருப்பது, செலவீனங்கள் அதிகளவில் இருப்பது உள்ளிட்டவை இன்டெல் பணிநீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

    • மாலத்தீவில்இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்
    • அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

    இந்தியப் பெருங்கடலில் அமைத்துள்ள தீவு நாடான மாலத்தீவில், மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபாராக பதவியேற்பட்டார். மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முய்சு சீன ஆதரவாளராக பார்க்கப்படுகிறார்.

    இந்நிலையில் அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் மூலம் பில்லி சூனியம் வைக்க முயன்றதாக அவரது கட்சியைச் சேர்த்த 2 அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    மாலத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் சேர்ந்து அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி சூனியம் வைக்க முயன்றதால் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

     

    முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலேவில் மேயர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே நகர சபை உறுப்பினர்களாக ஷாம்னாஸ் சலீம் மற்றும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் அவருடன் பணியாற்றிய நிலையில் தற்போது அவர்கள் இவ்வாறு செய்ததற்கான காரணம் தெரியாவரவில்லை. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் 7 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அதிபர் முய்சு சமீபத்தில் இந்திய பிராமராக மோடி பதிவேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது.
    • இண்டீட் நிறுவனம் தனது 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

    உலகின் முன்னணி வேலை வாய்ப்பு இணைய தளமான இண்டீட்(Indeed) நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் தங்கள் நிறுவனத்தின் 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக இண்டீட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

    கடந்த ஆண்டு 2,200 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது பாலின பாகுபாடு
    • 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    • முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம்.
    • போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்க கார்ப்பரேட்களில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் Nike, 2024 ஆண்டை ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் துவங்கியுள்ளது.

    கடந்த மாதத்தில் மட்டும் 82 ஆயிரத்து 307 பேரை பணிநீ்கம் செய்வதாக அறிவித்து இருந்தது. இது அதற்கும் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம் ஆகும். இதோடு 2009 நிதி நெருக்கடி துவங்கியதில் இருந்து ஜனவரி மாத வாக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பணிநீக்க நடவடிக்கையாக அமைந்தது.

    பெருந்தொற்று காலக்கட்டத்தில் அதிகளவில் ஆட்களை பணியமர்த்தியது மற்றும் வேறு பிரிவுகளில் முதலீடு செய்வது உள்ளிட்டவைகளை பணிநீக்கத்திற்கு காரணமாக Nike நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் Nike Inc. நிறுவனம் 2 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. பணிநீக்கத்தால் செலவீனங்களை குறைப்பதன் மூலம் சரிந்து வரும் விற்பனை மற்றும் போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்த முறை ஆட்குறைப்பு நடவடிக்கையில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    தற்போதைய அறிவிப்பின் மூலம் மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர். இதில் பாதிக்கப்படுவதில் பெரும்பாலானோர் ஆக்டிவிஷன் ப்லிசர்ட்-இல் பணியாற்றுவோர் ஆவர்.

     


    ப்லிசர்ட் தலைவர் மைக் யபரா மற்றும் டிசைன் பிரிவின் மூத்த அலுவலர் ஆலென் ஆதெம் ஆகியோரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். இதோடு ப்லிசர்ட் ஏற்கனவே அறிவித்து இருந்த கேம் ஒன்றும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருக்கிறது.

    சமீபத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 621 கோடி ரூபாய்க்கு ஆக்டிவிஷன் ப்லிசர்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் கேமிங் பிரிவில் அதிக கவனம் செலுத்தவும், கேமிங்கில் முன்னணியில் உள்ள சோனியை எதிர்கொள்ளவும் திட்டமிட்டது.

    • 1 வருடத்திற்கும் மேலாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன
    • திறன் அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் கீழே உள்ளவர்கள் நீக்கப்படுவார்கள்

    2020 கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கிய பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் மோசமடைவதால் உலகெங்கிலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இணையவழி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

    அதனால் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக அத்துறையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரூவை மையமாக கொண்டு செயல்படும் பிரபல இணையதள வர்த்தக நிறுவனம், ஃப்ளிப்கார்ட் (Flipkart).

    2007ல் புத்தகங்களை இணையவழியில் விற்பதற்காக தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட், பிறகு நுகர்வோர் மின்னணு சாதனங்கள், நவீன ஆடைகள், அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து, பெரும் லாபம் ஈட்டி வந்தது.

    இதே துறையில் உள்ள அமெரிக்காவை மையமாக கொண்ட புகழ் பெற்ற அமேசான் நிறுவனத்திற்கு ஃப்ளிப்கார்ட் போட்டியாக இயங்கி வருகிறது.

    2018ல் அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு முன்னணி மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை நிறுவனமான வால்மார்ட் (Walmart), ஃப்ளிப்கார்ட் நிறுவன பங்குகளில் 77 சதவீதத்தை விலைக்கு வாங்கியது.

    2022-23 நிதியாண்டில் ஃப்ளிப்கார்ட் ரூ.4,890 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக 2023 அக்டோபர் மாதம் தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், திறன் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தி அப்பட்டியலில் கீழே உள்ள சுமார் 7 சதவீதம் வரை பணியாளர்களை நீக்க ஃப்ளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.

    பணிநீக்க நடவடிக்கை வரும் ஏப்ரலில் நிறைவடையும்.

    புதியதாக பணியாளர்களை சேர்ப்பதை ஃப்ளிப்கார்ட் சில மாதங்களுக்கு முன்னரே நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் பேர் அமெரிக்காவில் பணி இழந்தனர்
    • அக்சென்சர் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது

    முன்னர் எந்த வருடங்களிலும் இல்லாத அளவு, கடந்த 2023ல் பல தனியார் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கூகுள், மைக்ரோசாஃப்ட், வெரிசான், காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களிலும், ஸ்டார்ட் அப் எனப்படும் புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களிலும் இந்த சூழல் நிலவியது.

    உலகம் முழுவதும் சுமார் 2.6 லட்சம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் வேலையிழந்தவர்கள். மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் (1.79 லட்சம் பேர்) அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

    16,400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இந்தியா 2-ஆம் இடத்தில் உள்ளது.

    13,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு ஜெர்மனி 3-ஆம் இடத்தில் உள்ளது.

    11,100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு சுவீடன் 4-ஆம் இடத்திலும், 9400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இங்கிலாந்து 5-ஆம் இடத்திலும் உள்ளது.

    இந்தியாவில், கடந்த 2023 டிசம்பர் மாதம் மட்டுமே 1000 பணியாளர்கள் பேடிஎம் (Paytm) நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    அமெரிக்க-அயர்லாந்து நாடுகளை மையமாக கொண்ட மென்பொருள் பெருநிறுவனமான அக்சென்சர் (Accenture) 19,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது.

    இணையதள கல்வி நிறுவனமான பைஜு'ஸ் (Byju's) சுமார் 4 ஆயிரம் பணியாளர்களையும், இணைய வணிக வர்த்தக நிறுவனமான அமேசான் 500 பணியாளர்களையும் நீக்கியது.

    கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தோன்றியுள்ள மந்தமான பொருளாதார சூழல், அதிகரிக்கும் விலைவாசியினால் மக்களிடம் சேமிப்பு குறைதல், தொழில்நுட்ப சேவைக்கான தேவை குறைவு, உலகளாவிய போர் சூழல், பணியாளர்களுக்கான கட்டுக்கடங்காத சம்பள உயர்வு உள்ளிட்ட பல காரணங்கள் நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை கூறப்படுகின்றன.

    உலகளாவிய பொருளாதார நிலைமை மேலும் சரிவடைந்தால், பணிநீக்கங்கள் இவ்வருடமும் தொடர்வது மட்டுமின்றி அதிகரிக்கலாம் என மனித வள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    • பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.
    • செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும்.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் தனது விற்பனை, பொறியியல் பிரிவுகளில் பணியாற்றி வந்த 100-க்கும் அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. நிர்வாக ரீதியிலான பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியதை அடுத்து பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.

    செலவீனங்களை குறைக்கும் நோக்கிலும், பணிகளை எளிமையாக்கும் நோக்கிலும் பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்த துவங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.

     


    முன்னதாக 2021-ம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் 500-இல் இருந்து 700 பேர் வரை பணிநீக்கம் செய்தது. அப்போது ஊழியர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என குற்றம்சாட்டி பணிநீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டது. 

    • இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

    சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.

    அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

    "நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    ×