என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ராமச்சந்திரன்"

    • புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
    • மழைக்கு இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    புயல் சென்னை ஓரமாக ஆந்திரா செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மின்சார கம்பங்கள், வயர்கள் செல்லும் இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு வரலாம் என்று கருதுவதால் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.

    தமிழகத்தை பொறுத்தவரை மழைக்கு இதுவரை 5 பேர் இறந்துள்ளார்கள். கால்நடைகள் 98 பலியாகி உள்ளது. 420 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது. மழைக்கு இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

    கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 121 நிவாரண முகாம்களும் 4 ஆயிரம் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 162 முகாம்கள் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரம் பேரை தங்கவைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. மழையோடு காற்றும் வீசும் என்று எதிர்பார்ப்பதால் மரக்கிளைகள் முறிந்து விழலாம். எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
    • டாக்டர்கள் அவரது உடல் நலனை கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

    தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டாக்டர்கள் அவரது உடல் நலனை கண்காணித்து வருகிறார்கள்.

    • ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
    • தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிவது குறித்து சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் சமயமூர்த்தி ஆகியோர் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரியில் சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சுற்றுலா துறை மேலாண்மை இயக்குனருடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது.

    ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து விடுகின்றனர்.

    ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா, பூங்காவை மட்டுமே கண்டுகளித்து செல்கின்றனர். இதனால் ஊட்டியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே மாவட்டம் முழுவதும் சுற்றுலாவை பரவலாக்கும் வகையில் குன்னூர், கோத்தகிரி, மைனாலா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா தலங்களை கண்டறிவது மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பதைக் கண்டறிந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

    தமிழ்நாட்டுக்கு 2022-2023-ம் ஆண்டில் 28 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 32 கோடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க, மருத்துவ சுற்றுலா உள்பட பிற சுற்றுலாக்களை பிரபலப்படுத்த உள்ளோம்.

    தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசிடம் சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.160 கோடி கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எல் அண்ட் டி நிறுவனம் மூலமாக ஆய்வு நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இன்று மாலை 5.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
    • புயல் உருவாவதை ஒட்டி சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    புயல் உருவாவதை ஒட்டி சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் போலீசார் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

    இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக்கால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    • தொடர்ந்து கோழிப்பாலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.
    • காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஆற்றங்கரையையும் ஆய்வு செய்தாா்.

    நீலகிரி மாவட்டம் கூடலூா், மங்குழி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அங்குள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அந்த பகுதியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் அந்த பகுதி மக்களுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்து, மாற்றுப்பாதையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, காலம்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஆற்றங்கரையையும் ஆய்வு செய்தாா். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அந்தக் குழுவினா் பாதிப்பு தகவல் கிடைத்தவுடன் எந்த நேரத்திலும் மீட்பு பணியை மேற்கொள்ள தயாா் நிலையில் உள்ளனா். கூடலூா் பகுதியில் கன மழை தொடர்வதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசுக்கு எடுத்துரைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றிய பள்ளி முகாமில் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கோழிப்பாலம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார்.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியா் சரவணகண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, வட்டாட்சியா் சித்தராஜ், கூடலூா் நகராட்சி ஆணையா் (பொ) காந்திராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, தி.மு.க. நகர செயலாளா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்

    • பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 530 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள் வீதம் 100 பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    ஊட்டி:

    தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

    விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 36 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 530 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் வீதம் 106 ஆசிரியர்கள், 2 பெற்றோர்கள் வீதம் 100 பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் உயர்கல்விக்காக ஊட்டி, கூடலூர் பகுதிகளில் அரசு கல்லூரிகள் உள்ளன. இங்கு 8 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். குன்னூர், கோத்தகிரி மாணவர்களின் நலன் கருதி குன்னூரில் அரசு கல்லூரி விரைவில் தொடங்கப்படும்.

    மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் டைடல்பார்க் அமைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல், ஊக்குவிப்பு, வங்கிகளின் கல்விக் கடன் குறித்தும், போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தயாா் செய்வது என்பது குறித்தும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த கல்வி, வணிகம் மற்றும் கணக்கு பதிவியல், சட்டம் ஆகியவை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநா்கள் மூலம் மாணவ, மாணவியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

    எனவே பிளஸ்-2 முடித்த மாணவா்கள் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சியில் கல்வி வல்லுநா்களால் தெரிவிக்கப்படும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முழுமையாக கவனித்து, தங்களது கனவினை நனவாக்கும் வகையில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், குன்னூா் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் மாயன், ராம்குமாா், சுனிதா நேரு, கீா்த்தனா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்ட கல்வி அலுவலா்கள் புனிதா அந்தோணியம்மாள், சுடலை மற்றும் கல்லூரிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறைத் தலைவா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

    ×