என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்துவட்டி புகார்"

    • புலவன்பட்டி கட்ட பொம்மன் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் ரேவதி வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், வி.கே.புரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சிவந்திபுரம் அருகே உள்ள புலவன்பட்டி கட்ட பொம்மன் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 27) என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    அவருடன் சேர்ந்து அம்பை ஊர்காடு பகுதியை சேர்ந்த அசோக்ராஜா (30), வி.கே.புரம் கம்பலத்தார் தெருவை சேர்ந்த செல்வகுமார் (21), கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியபுரம் யாதவர் தெருவை சேர்ந்த சங்கர்ராஜா ஆகிய 3 பேர் நிதி நிறுவனம் நடத்தி கந்து வட்டி வசூலிப்பதாகவும், நிதி நிறுவனத்திற்கு உரிய அனுமதியை அவர்கள் பெறவில்லை எனவும் புகார்கள் எழுந்தது.

    இந்நிலையில் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற கூலி தொழிலாளியின் மனைவி ரேவதி என்பவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேசிடம் கடன் பெற்றுள்ளார்.

    அவர் கடன் தொகையை செலுத்த தாமதமானதால், கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் அவர் வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த ரேவதி வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் உரிய அனுமதியின்றி நிதி நிறுவனங்களை நடத்தியதாக கூறி சுரேஷ் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    • கந்துவட்டி புகாரின் பெயரில் நிதி நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை ஈடுப்பட்டனர்.
    • பணத்துக்கு மட்டும் கவிதா ரூ. 6 லட்சம் வட்டி கட்டி உள்ளார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கிரண்டி யாபுரத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 31). இவர் கடந்த 2018-ம் ஆண்டு திண்டிவனம்- செஞ்சி சாலையில் உள்ள நிதி நிறுவனத்தில் ரவி என்பவ ரிடம் ரூ. 7 லட்சம் கட ன்வாங்கி இருந்தார்.இந்த பணத்துக்கு மட்டும் கவிதா ரூ. 6 லட்சம் வட்டி கட்டி உள்ளார். ஆனார் கடந்த 1-ந் தேதி பணத்தை கேட்டு ரவி, கவிதாவை மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுபற்றி கவிதா கூடுதல் போலீஸ் சூப்பிர ண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் வெள்ளி மேடு போலீசார் இன்று நிதி நிறுவ னத்தில் அதிரடி சோதனைநடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    ×