search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாஜ்வாதி"

    • ஹெலிகாப்டர் பார்ட் பார்ட்டாக டிரக்கில் திருடிச் செல்லப்பட்டதாக ரவீந்திர் சிங் என்ற பைலட் போலீசில் புகார் அளித்திருந்தார்
    • பாஜக அரசு குறிப்பிட்ட சமூகங்களை குறி வைத்து என்கவுண்டர் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்

    உத்தரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டரே திருடுபோன சம்பவம் அம்மாநில அரசியலில் கவனம் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் தங்களது SAR ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பார்ட் பார்ட்டாக டிரக்கில் திருடிச் செல்லப்பட்டதாக ரவீந்திர் சிங் என்ற பைலட் போலீசில் புகார் அளித்திருந்தார். தன்னை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் ஹெலிகாப்டரை திருடியதாக ரவீந்தர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

    ஹெலிகாப்டரே திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டது இணையத்திலும் பேசுபொருளான நிலையில் இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பாஜக அரசை விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    'உத்தரப் பிரதேசத்தில் இதுவரை கொலை, திருட்டு, மோசடி,பலாத்காரம் உள்ளிட்டவை மூலம் குற்றவாளிகள் பாஜக அரசின் சட்டம் ஒழுங்கை தான் பார்ட் பார்ட்டாக ஆக பிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஹெலிகாப்டரையும் பார்ட் பார்ட்டாக பிரித்து திருடிச் சென்றுள்ளனர். இது விமான நிலைய பாதுகாப்பை கேள்விக்குறி ஆகியுள்ளது என்று விமர்சித்துள்ளார்.

    இதற்கு பதிலளித்த உ.பி போலீஸ், திருடுபோன ஹெலிகாப்டர், விமான நிலையத்தில் வைத்து திருடு போகவில்லை எனவும் SAR ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனம் அந்த ஹெலிகாப்டரை வாங்கி டிரக்கில் கொண்டு செல்லும்போது திருடு போனதாக புகார் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக உ.பியில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் சமீபத்தில் போலீஸ் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த அகிலேஷ் யாதவ், பாஜக அரசு குறிப்பிட்ட சமூகங்களை குறி வைத்து என்கவுண்டர் செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 'சமாஜ்வாதி கட்சியினர் சிகப்புத் தொப்பி அணிகின்றனர். ஆனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் கருப்பாக உள்ளது'
    • 'குறைத்தபட்சம் எங்களின் தலையில் முடி உள்ளது, நாங்கள் தொப்பி அணிகிறோம்'

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் பெற்ற வெற்றி அம்மாநில அரசியலிலும் பாஜகவுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் கான்பூர் நகரில் கடந்த வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசுகையில், சமாஜ்வாதி கட்சியினர் சிகப்புத் தொப்பி அணிகின்றனர். ஆனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் கருப்பாக உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

     

     

    இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சிகப்பு என்பது உணர்வுகளின் நிறம். கடவுள் துர்கையின் நிறம். ஆனால் தற்போது அவர்கள் [பாஜக] நமது தொப்பியைக் கிண்டலடித்து வருகின்றனர். எங்களது தொப்பியைக் கிண்டலடிப்பதற்கு முன் அவர்களுக்கே முதலில் தொப்பி தேவைப்படுகிறது. எங்களின் செயல்கள் நல்லவிதமாக உள்ளன. குறைத்தபட்சம் எங்களின் தலையில் முடி உள்ளது, நாங்கள் தொப்பி அணிகிறோம். முடி இல்லாதவர்கள்தான் முதலில் தொப்பி அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் உ.பி முதல்வர் யோகி ஆதித்தநாத்தை அகிலேஷ்யாதவ் மறைமுகமாகச் சாடியுள்ளார். 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்தார் அகிலேஷ் யாதவ்
    • கடைகளில் உரிமையாளர் பெயர் குறிப்பிடுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்றார்.

     இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நடந்துமுடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனவர் ஆவார். இந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக வெற்றியை பதிவு செய்து பாஜகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது சமாஜ்வாதி கட்சி.

     

    அகிலேஷ் யாதவின் குடும்பத்திலிருந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் என 5 பேர் எம்.பியாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட்  கூட்டத்தொடரில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ளார்.

     

    நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு, உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள கடைகளில் உரிமையாளர்களின் பெயர்களை குறிப்பிட பாஜக அரசு இட்ட உத்தரவு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர இருந்த தடையை நீக்கியது உள்ளிட்டவற்றை சாடிய அகிலேஷ் யாதவ், கடைகளில் உரிமையாளர் பெயர் குறிப்பிடுவதற்கு  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் பிரிவினை அரசியலை மக்கள் ஏற்கனவே புறக்கணித்து விட்டனர். விரைவில் அணைந்துபோவதற்கு முன் விளக்கு விட்டு விட்டு எரிந்து மினுங்குவதுபோல், இப்போது அவர்கள் [பாஜக] விட்டுவிட்டு  மினுங்கியபடி எரிந்துகொண்டிருக்கின்றனர். எனவேதான் அதுபோன்ற உத்தரவுகளை  பிறப்பித்து வருகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.

    • ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத்தில் சமாஜ்வாதியிடம் பாஜக தோல்வி அடைந்தது.
    • அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்கு எப்போதும் துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாறே ஆதாரம்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களில் வென்றுள்ளது.

    பாஜக தனிப் பெரும்பான்மையை இழந்துள்ளதால் கூட்டணி காட்சிகளை நம்பியே மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் ஏமாற்றம் அடைந்ததாகக் 'ராமாயணம்' டிவி தொடரில் லக்ஷ்மணனாக நடித்த சுனில் லஹேரி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத்தில் சமாஜ்வாதியிடம் பாஜக தோல்வி அடைந்ததையடுத்து, ராமாணந்தின் 'ராமாயணம்' டிவி தொடரில் லஷ்மணனாக நடித்த சுனில் லஹேரி ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், முதலில், வாக்குப்பதிவு மிகவும் குறைவாக இருந்தது, பின்னர் இப்படிப்பட்ட ஒரு முடிவு. நான் தொடர்ந்து மக்களை வாக்களிக்க வற்புறுத்தினேன், ஆனால் யாரும் அதனை பொருட்படுத்தவில்லை. இப்போது கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. ஆனால் இந்த கூட்டணி அரசால் 5 வருடங்கள் சிரமமின்றி இயங்க முடியுமா?

    வனவாசம் சென்று வந்த சீதையை சந்தேகப்பட்ட அயோத்தியை சேர்ந்த அதே மக்கள்தான் இவர்கள் என்பதை மறந்துவிட்டோம். கடவுளையே மறுப்பவர்களை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? சுயநலவாதிகள். அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்கு எப்போதும் துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாறே ஆதாரம்.

    ராமரைக் கூடாரத்திலிருந்து வெளியே எடுத்து வந்து பிரமாண்ட கோவிலில் கட்டியர்களுக்கு எப்படி உங்களால் துரோகம் செய்ய முடிந்தது. இந்தியா உங்களை ஒருபோதும் மன்னிக்காது.

    கங்கனா ரனாவத், மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார், இரண்டாவதாக, மீரட்டில் எனது மூத்த சகோதரர் அருண் கோவில் வெற்றி பெற்றுள்ளார். இருவரையும் நான் வாழ்த்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ராமாயண தொடரில் லஹேரியுடன் இணைந்து ராமராக நடித்த அருண் கோவில் பாஜக சார்பில் மீரட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ராமர் படத்துடன் மீரட்டில் பிரச்சாரம் செய்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி பல இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
    • பகுஜன் சமாஜ் 2024 தேர்தலில் வெறும் 9.39 சதவீத வாக்கையே பெற்றுள்ளது.

     பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி பல இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு 37 தொகுதிகளில் சமாஜ்வாதியும் 6 தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக கூட்டணி 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் 16 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற காரணமாக பகுஜன் சமாஜ் கட்சி அமைந்துள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

    அக்பர்பூர், அலிகார், அம்ரோஹா, பான்ஸ்கான், பதோஹி, பிஜ்னோர், தியோரியா, ஃபரூக்காபாத், ஃபதேபூர் சிக்ரி, ஹர்தோய், மீரட், மிர்சாபூர், மிஸ்ரிக், புல்பூர், ஷாஜஹான்பூர், உன்னாவ் ஆகிய 16 தொகுதிகளில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றி வித்தியாசத்தை விட பகுஜன் சமாஜ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது

    இந்த 16 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வென்றிருந்தால் பாஜக 226 இடங்களையும் பாஜக கூட்டணியாக 278 இடங்களையும் தான் வென்றிருக்கும்.

    2014 மற்றும் 2019 தேர்தல்களில் முறையே 19.77% மற்றும் 19.42% வாக்குகள் பெற்ற பகுஜன் சமாஜ் 2024 தேர்தலில் வெறும் 9.39 சதவீத வாக்கையே பெற்றுள்ளது.

    கடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வென்ற பகுஜன் சமாஜ் இந்த தேர்தலில் ஒரு தொகுதியை கூட வெல்லவில்லை. கடந்த முறை 5 தொகுதிகளை வென்ற சமாஜ்வாதி இம்முறை 37 இடங்களில் வென்றுள்ளது.

    அலிகர் தொகுதியில் 15,647 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் சமாஜ்வாதி கட்சி தோற்ற நிலையில் அத்தொகுதியில் பகுஜன் சமாஜ் 1,23,929 வாக்குகள் பெற்றுள்ளது.

    அம்ரோகா தொகுதியில் 28,670 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் தோற்ற நிலையில் அத்தொகுதியில் பகுஜன் சமாஜ் 1,64,099 வாக்குகள் பெற்றுள்ளது.

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை வென்றுள்ளது.
    • பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை பெற்றுள்ளதால் ஜூன் 8 ஆம் தேதி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    இந்நிலையில், 25 வயது 3 மாதங்கள் ஆன சமாஜ்வாதி வேட்பாளர் புஷ்பேந்திர சரோஜ், உ.பி.யின் கவுஷாம்பி தொகுதியில் பாஜக வேட்பாளரான வினோத் குமார் சோங்கரை சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

    இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் புஷ்பேந்திர சரோஜின் தந்தையான முன்னாள் அமைச்சர் இந்த்ரஜித் சரோஜ், 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வினோத் குமார் சோங்கரிடம் 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார்.

    கடந்த தேர்தலில் அப்பாவை தோற்கடித்த பாஜக வேட்பாளரை இந்த தேர்தலில் மகன் வீழ்த்தி பழி தீர்த்துள்ளார். 

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை வென்றுள்ளது.
    • உத்தரபிரதேசத்தில் பாஜக 33 இடங்களையும் வென்றுள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை பெற்றுள்ளதால் ஜூன் 8 ஆம் தேதி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களையும் பாஜக 36 இடங்களையும் வென்றுள்ளது.

    இந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 13 சட்டமன்ற உறுப்பினர்களும் 4 சட்டமேலவை உறுப்பினர்களும் போட்டியிட்டனர். அதில் 8 சட்டமனற உறுப்பினர்களும் 1 சட்டமேலவை உறுப்பினரும் வென்று எம்.பி.யாகி உள்ளனர்.

    இதனால் விரைவில் உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒருவர் இரண்டு பதிவுகளை வகிக்க முடியாததால் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி எம்.எல்.ஏ பதவியை அவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சமாஜ்வாதி எம்எல்ஏக்கள் அகிலேஷ் யாதவ் (கர்ஹால்), ஜியா உர் ரஹ்மான் (குந்தர்கி), லால்ஜி வர்மா (கடேஹாரி) ஆகியோர் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றனர்.

    பாஜக எம்எல்ஏக்கள் பிரவீன் படேல் (புல்பூர்), அதுல் கர்க் (காசியாபாத்), அனூப் பிரதான் (கைர்) ஆகியோர் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றனர்.

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் 234 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி தொகுதியில் பாஜக வேட்பாளர் சாகேத் மிஸ்ரா தோல்வியை தழுவியுள்ளார். சமாஜ்வாதி வேட்பாளர் ராம் சிரோமணி வர்மாவிடம் 76,673 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

    பாஜக வேட்பாளர் சாகேத் மிஸ்ரா ராமர் கோவில் கட்டுமானக் குழு தலைவருமான நிருபேந்திர மிஸ்ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை 54,56,7 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.

    அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டதால் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தியில் உள்ள பல தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 290 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்துள்ளார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 54,56,7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டதால் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் உள்ள தொகுதியையே பாஜக இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
    • ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணி கூறுகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பொதுமக்கள் உறுதி செய்துள்ளனர். நல்ல நோக்கங்கள், கொள்கைகள் காரணமாக 3-வது முறையாக பா.ஜ.க-தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

    ஐந்தாண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணி கூறுகிறது. அத்தகைய பிரதமர்களால் நாட்டை வலுப்படுத்த முடியுமா? தனது பதவியை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கும் ஒரு பிரதமரால் நாட்டை நடத்த முடியுமா?

    எனவே வலிமையான நாட்டை உருவாக்க வலிமையான பிரதமரை கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மகத்தான ஆதரவு கிடைத்து வருகிறது.

    இந்தியா கூட்டணி கட்சிகளை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வகுப்புவாத குணம் கொண்டவர்கள். மிகவும் சாதிவெறி உள்ளவர்கள் என்பதை அறிவார்கள். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பை மாற்ற இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

    உத்தர பிரதேச மக்கள் அரசியலை புரிந்து கொண்டுள்ளனர். எந்த அறிவாளியும் ஏற்கனவே வீழ்ச்சி அடைந்து வரும் கட்சியில் முதலீடு செய்யமாட்டார்.

    சட்டம்-ஒழுங்கும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்றுக்கொன்று எதிரானது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி அரசு வாக்கு வங்கியின் ஒரு பகுதியாக மாபியாக்களை எதிர்நோக்கியிருந்தது.

    ஆனால் யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமாஜ்வாடி கட்சிக்காக தங்கள் வாக்குகளை யாரும் வீணாக்க விரும்பவில்லை.

    சமாஜ்வாடி, காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அர்ப்பணித்துள்ளன. நான் ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து உழைக்கிறேன் என தெரிவித்தார்.

    • இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தொகுதியில் இளைஞர் ஒருவர் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 8 முறை வாக்களிக்கும் நபர் தான் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

    இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், தேர்தல் ஆணையமே இதை கொஞ்சம் பாருங்கள், இப்போதாவது கொஞ்சம் விழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.

    இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். அதில், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டிதான் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த வீடியோ தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த விவகாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தொகுதியில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 8 முறை வாக்களிக்கும் நபர் தான் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

    இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், தேர்தல் ஆணையமே இதை கொஞ்சம் பாருங்கள், இப்போதாவது கொஞ்சம் விழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.

    இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். அதில், "தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டிதான்" என்று தெரிவித்துள்ளார்.

    ×