என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனல்மின் நிலையம்"

    • குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் பணிகளை புறக்கணித்து அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று காலை முதல் தொடங்கினர். இரவு தொடர்ந்த போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை உள்ளிட்ட அனல் மின் நிலையங்கள் மற்றும் மின்சார விநியோக பிரிவில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகள் ஆன ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மாதம் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ரசீது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் காத்திருப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக கோடைகாலத்தில் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

    • அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகள் இன்று இயங்கவில்லை.
    • மற்ற 3 அலகுகள் இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகள் இன்று இயங்கவில்லை. இதனால் அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 420 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    எனினும் மற்ற 3 அலகுகள் இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அனல்மின் நிலைய அதிகாரி களிடம் கேட்டபோது காற்றாலை மூலம் தற்போது அதிகளவு மின்சாரம் கிடைத்து வருவதால் அனல்மின் நிலையத்தின் 2 அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    • முதற்கட்டமாக 660 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட இரு அலகு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • கப்பலில் உள்ள நிலக்கரியை, அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு உயர் மட்டஇரும்பு பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, காலன் குடி யிருப்பு கிராம பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியர் நிலங்கள் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    3 கட்டங்களாக அனல்மின்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 660 மெகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட இரு அலகு மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த இரு கட்டங்களில் 660 மெகா வாட் கொண்ட அனல்மின்நிலையங்கள் அமைக்கபடவுள்ளது. மேலும் அனல்மின்நிலைய வளாகத்தைச் சுற்றி சுமார் 25 அடி உயரத்திற்கு மேல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான பணி யாளர்களுடன் கட்டிடங்கள் கட்டும் பணி இரவு பகலாகநடந்து வருகிறது.

    அருகில் உள்ள தருவை குளத்து தண்ணீர்அனல்மின் நிலையத்தின் உள்ளே வரமுடியாத அளவுக்கு உறுதியான சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குபகுதியையொட்டி கல்லா மொழி கடற்கரை பகுதியிலிருந்து பலஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும் பணியும், சுமார் 1.50கோடிடன் நிலக்கரி கையாளும் வகையில் நிலக்கரி இறங்கு தளம் அமைப்பதற்கான துறை முகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக இரவு, பகலாக நடந்து வருகிறது.

    கடற்கரையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு கடல் உள்ளே நிலக்கரி கொண்டு வரும் கப்பலை நிறுத்திவிட்டு, கப்பலில் உள்ள நிலக்கரியை, உயர்மட்ட ராட்சச பாலம் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு உயர் மட்டஇரும்பு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.

    கப்பலில் கொண்டு வரப்படும் நிலக் கரியைராட்சத கன்வெயர் மூலம் கடலில் இருந்து அனல்மின்நிலையத்திற்கு நேரடியாககொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    இது பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தென்மண்ட லத்தில் பல்வேறு பாதுகாப்பு வசதியுடன், நவீனமாடலில் கூடுதல் சக்தி கொண்ட அனல்மின் நிலையம் உடன்குடியில் உருவாக்கப்படுகிறது.

    கடற்கரை வழியாக வரும் நிலக்கரியை கடலில் இருந்து நேரடி கொண்டு வரும் உயர்மட்ட கம்பிபாலம் பணி முடிந்தவுடன் முதலில் முதல் மின் அலகு மின்சாரம் உற்பத்தி தொடங்கும். இதனால் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

    ×