என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்பிணம்"

    • உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் அருகே தொட்டி பகுதியில் விவசாயி ஒருவரது கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது
    • இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கள்ளக்குறிச்சி:

     உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் அருகே தொட்டி பகுதியில் விவசாயி ஒருவரது கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் பாதுகாப்பு மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறந்த நிலையில் மிகுந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் திம்மரசநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலருக்கு புகார் அளித்தனர்.

    இதுகுறித்து வி.ஏ.ஓ தேவி ஆண்டிபட்டி போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்துகிடந்த ஆண்சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் 45 வயது மதிக்கத்தக்க ஆண்சடலம் என்பதும், அவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    கருப்பூர் ரெயில் நிலையத்துக்கும் மேக்னசைட் ரெயில் நிலையத்திற்கு இடையே ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் காபி கலர் பேண்ட், சிமெண்ட் கலர் கோடு போட்ட அரைக்கை சட்டை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×