என் மலர்
நீங்கள் தேடியது "பொது விடுமுறை"
- புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும்.
- வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசுத்துறையினருக்கு வழக்கமான வார விடுமுறை தினமாகும்.
மஸ்கட்:
இஸ்லாமியநாட்காட்டியின் முதல் மாதம் 'முகரம்' மாதமாகும். நபித்தோழர் உமர் (ரழி), தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் இஸ்லாமியர் முதல் மாதமாக முகரம் மாதத்தை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்தார்கள்.
'ஹிஜ்ரி' ஆண்டு என்பது நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டதை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும். இஸ்லாமிய வருடப் பிறப்பு வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும்.
இதையொட்டி அமீரக மனிதவளம் மற்றும் அமீரகமயமாக்கல் துறை வெளியிட்ட அறிவிப்பில், "அமீரகத்தில் இஸ்லாமிய வருடப் பிறப்பை முன்னிட்டு வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறையாக இருக்கும்" என கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை தினம் ஆகும். இதனால் இந்த விடுமுறை காரணமாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பயன் இல்லை.
ஓமன் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஓமன் நாட்டில் இஸ்லாமிய வருடப் பிறப்பு வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசுத்துறையினருக்கு வழக்கமான வார விடுமுறை தினமாகும்.
இஸ்லாமிய வருடப்பிறப்பையொட்டி 7-ந்தேதி பொது விடுமுறை விடப்படுவதால் அரசுத்துறையினருக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அன்றைய தினம் ஒரு சில ஊழியர்களின் பணி மிகவும் அத்தியாவசியமாக கருதி அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டால், அதற்கேற்ப அவர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது அதனை ஈடு செய்யும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
- அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 10-ம் தேதியன்று மூடப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே அந்த தொகுதிக்கு 10-ம் தேதியன்று பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அந்த தொகுதிக்குள் உள்ள அரசு அலுவலகங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 10-ம் தேதியன்று மூடப்படும்.
மேலும், விழுப்புரம் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டங்களில் பணியாற்றும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு வாக்களிக்க வசதியாக, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் 10-ம் தேதியன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சத் பூஜை ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகை.
- சூரியக் கடவுளின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சத் பூஜை கொண்டாட்டத்திற்காக டெல்லியில் நவம்பர் 7-ந்தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் அதிஷி அறிவித்துள்ளார்.
டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்.
சத் பூஜை ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகை, பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. இது சூரியக் கடவுளின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
உண்ணாநோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட நான்கு நாள் சடங்குகள் மற்றும் மரபுகளின் கடுமையான வழக்கத்தை உள்ளடக்கியது.
இதுதொடர்பாக முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தள பதிவில், இந்த முடிவு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சத் பண்டிகைக்காக நவம்பர் 7-ந்தேதி விடுமுறை அறிவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . பூர்வாஞ்சலின் சகோதரிகள் விழாவை சிறப்பாக கொண்டாட முடியும். விடுமுறையை உறுதிப்படுத்தும் தனது கையொப்பமிடப்பட்ட உத்தரவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
- குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.
- அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2025ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என அரசு விடுமுறைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக் கிழமைகளுடன்" பின்வரும் நாட்களும், 2025- ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.
அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மற்றும் அக்டோபரில் தலா 4 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

- உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
- 7 உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு மட்டும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் ஒன்றியம், மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர், ஆலத்தூர் ஒன்றியம் பிலிமிசை கிராம ஊராட்சி வார்டு எண் 4 மற்றும் வேப்பந்தட்டை ஒன்றிய வி,களத்தூர் கிராம ஊராட்சி வார்டு எண் 7 உறுப்பினர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (9ம்தேதி.) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது .
இதன்காரணமாக தேர்தல் நடைபெறும் கிராம பகுதிகளுக்கு மட்டும் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்நாளில் மேற்கூறிய கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.