search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறு ஆய்வு"

    • நீட் தேர்வை மீண்டும் நடத்த வாய்ப்பு இல்லை.
    • இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    புதுடெல்லி:

    நீட் தோ்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சா்ச்சையானது.

    'நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது' என்று சில மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

    இதை மறுத்த என்.டி.ஏ., 'என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப் பட்ட சில மாற்றங்களாலும் தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் மதிப் பெண்கள் வழங்கப்பட்டது' என்று விளக்கம் அளித்தது.

    இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் மறு ஆய்வு செய்யப்படும் என என்.டி.ஏ. நேற்று அறிவித்தது.

    இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் என்.டி.ஏ. தலைவா் சுபோத் குமாா் சிங் கூறியதாவது:-

    நீட் தோ்வு எழுதியவா்க ளில் 1,500-க்கும் அதிகமான தோ்வா்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்க மத்திய பணியாளா் தோ்வாணைய (யு.பி.எஸ்.சி.) முன்னாள் தலைவா் தலைமையில் 4 போ் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது.

    கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, தோ்வின் தோ்ச்சிக்கான மதிப்பெண்ணில் எந்தவித தாக்கத்தை யும் ஏற்படுத்த வில்லை. மேலும், தோ்வு முடிவுகள் மறு ஆய்வு, இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறு தோ்வு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், "உயா்நிலைக் குழுவிடம் அறிக்கை கேட்டு இருக்கிறோம். என்றாலும் நீட் தேர்வை மீண்டும் நடத்த வாய்ப்பு இல்லை" என்றாா். மேலும், நீட் வினாத்தாள் கசிந்தது தொடா்பான புகாரை அவா் மறுத்தாா்.

    • கள்ளக்குறிச்சியில் பள்ளி பஸ்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ விபத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி பஸ் ஆய்வு முகாம் நடைபெற்றது. தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பள்ளி பஸ்களை ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களில்படிகள், அவசர கால கதவு, முதலுதவி பெட்டகம், தீயணைப்புகருவி, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 வகையான காரணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பேருந்தினை இயக்கி பார்த்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன.

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 490 பள்ளி பஸ்கள் உள்ளது. இதில் 326 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 24 பஸ்கள் மறுஆய்விற்கு உட்படுத்திடமாறு பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டது எனவும், மீதமுள்ள பஸ்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறினார். முன்னதாக தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ விபத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

    ×