என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாரதா மாரியம்மன்"

    கோபிசெட்டிபாளையம் கடைவீதி சாரதா மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

    கோபிசெட்டிபாளையம் கடைவீதி சாரதா மாரியம்மன் கோவிலில் 26-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா, 1008 சங்காபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேக 12-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு கணபதி பூஜை 10 மணிக்கு லட்சார்சணை தொடங்கியது. பகல் 1 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழாவையொட்டி இன்று 10 தேதி காலை 8 மணிக்கு 1008 சங்குகள் பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11 மணியளவில் 1008 சங்க அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு லட்ச்சார்சனை நிறைவு பெற்றது.

    இதையொட்டி மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கோபி,கரட்டூர், மேட்டுவளவு, வெள்ளாளபாளையம், மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    ×