என் மலர்
நீங்கள் தேடியது "ராதிகா"
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா காலமானார்.
- இவருடைய மறைவுக்கு நடிகர் ரஜினி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ராதிகா பதிவிட்டிருப்பது, இதயம் நொறுங்கியதாக உணர்கிறேன். இன்று காலையில் தான் அவரிடம் போனில் பேசினே. இருவரும் சிரித்து, சண்டையிட்டு, சாப்பிட்டு பல விஷயங்களை பற்றிய் பேசியுள்ளோம், நாம் அனைவரும் அவரை மிஸ் செய்வோம்.

இயக்குனர் சேரன் பதிவிட்டிருப்பது, தாங்க முடியாத செய்தி... மனதை உலுக்கி எடுக்கிறது.. நான் பெற்ற உங்களின் அன்பு மறக்க முடியாதது.... போய்வாருங்கள் மாமா....
நடிகர் கவுதம் கார்த்திக், இதற்கு பிறகு மனோபாலா சார் நம்முடன் இருக்கமாட்டார் என்ற செய்தி இதயத்தை உடைக்கிறது. அவருடன் பணிபுரிந்தது மிகவும் சந்தோஷம். கண்டிப்பாக உங்களை மிஸ் செய்வேன். அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தனர்.
மேலும் இளையராஜா, பாராதிராஜா வீடியோ பதிவின் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணி அளவில் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ’சந்திரமுகி 2’.
- இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.

சந்திரமுகி 2 படக்குழு
லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். நேற்று 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு 'ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி..' என்ற தனது காமெடியை நடிகை ராதிகாவுடன் இணைந்து ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

சந்திரமுகி 2 படக்குழு
இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக புகைப்படங்கள் வெளியிட்டு நடிகை ராதிகா அறிவித்துள்ளார். மேலும், எனக்கு தங்க மோதிரம் மற்றும் விலையுயர்ந்த கடிகாரம் பரிசளித்த முதல் ஹீரோ ராகவா லாரன்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
It's a wrap #chandramukhi2 @LycaProductions wht a joy working with a director so thorough with his craft and vision #pvasu ? and thank you to this gem @offl_Lawrence who is the first hero who gifted me a gold ring and expensive watch, genuine affection ❤️❤️❤️❤️ pic.twitter.com/9WlBRBuKqH
— Radikaa Sarathkumar (@realradikaa) May 28, 2023
- ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’சந்திரமுகி 2’.
- விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு 'ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி..' என்ற தனது காமெடியை நடிகை ராதிகாவுடன் இணைந்து ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நடிகை ராதிகா தமிழ், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
- இவர் தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பூவரசம்பூ பூத்தாச்சு' பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த 'மீண்டும் ஒரு காதல் கதை' திரைப்படம் இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருதை வென்றது .

நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை குவித்துள்ள ராதிகா இன்றும் தன் நடிப்பு திறமையால் மிளிர்கிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா திரைத்துறையில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை அவர் தன் கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷ், நடிகை ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்துள்ளார். அதாவது, ராதிகா - சரத்குமார் தம்பதியின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்
- புதுச்சேரி தொகுதியில் நமசிவாயம் போட்டியிடுகிறார்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் ஏற்கனவே வெளியானது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.
இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில், விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா களம் காண்கிறார். புதுச்சேரி தொகுதியில் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
திருவள்ளூர் - பொன்.பாலகணபதி,சென்னை வடக்கு - பால் கனகராஜ், திருவண்ணாமலை - அஸ்வத்தாமன், நாமக்கல் - கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகின்றனர்.
திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி - வசந்தராஜன், கரூர் - செந்தில்நாதன், தென்காசி - ஜான்பாண்டியன், சிதம்பரம் - கார்திகேயனி, நாகப்பட்டினம் - எஸ்.ஜி.எம். ரமேஷ், தஞ்சாவூர் - முருகானந்தம் போட்டியிடுகின்றனர்.
திருச்சி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், மதுரை தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும், விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய விஜயதாரணிக்கு இந்த தேர்தலில் பாஜக வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
- மதுரையில் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான்
பாஜகவுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் சமகவை பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அதிரடியாக அறிவித்தார். மூன்றாவது முறை மோடியை பிரதமராக்குவதே லட்சியம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் களம் காண்கிறார்கள். இதனால் விருதுநகரில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வழிபாடு நடத்திய பிறகு ராதிகா சரத்குமார் தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது பேசிய ராதிகா, "வேலைவாய்ப்பு, இருப்பிடம் மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே நாங்கள் செயல்படுவோம். பிரதமர் மோடி நாட்டுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவற்றில் பல விஷயங்கள் இன்னும் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவில்லை. ஆகவே, மோடியின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வர நாங்கள் பாடுபடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான். சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல எனது மனைவி ராதிகாவை எம்.பி ஆக்குவேன். காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை, மோடி 3வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
- ஜப்பான் வீராங்கனையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.
- 50 கிலோ எடைப்பிரிவில் ஷிவானி பவார் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களம் காண்கிறார்.
சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம் கிர்கிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ராதிகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோநோகா ஒசாக்கியை எதிர்கொள்கிறார். 23 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த வருடம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். கடந்த வருடம் நடைபெற்ற சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் 2-வது இடம் பிடித்தார். கஜகஸ்தான், கிர்கிஸ்தான் வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
50 கிலோ எடைப்பிரிவில் ஷிவானி பவார் காலியுறுதியில் தோல்வியடைந்தார். ஆனால் அவரை வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதேபோல் 55 கிலோ எடைப்பிரிவில் தமன்னா 0-9 என தோல்வியடைந்த நிலையில், அவர் வீழ்த்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் பதக்கத்திற்கான போட்டியில் நீடிக்கிறார்.
அதேபோல் புஷ்பா யாதவ் (59 கிலோ), பிரியா (76 கிலோ) ஆகியோரும் தோல்வியடைந்தாலும் பதக்கப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களை வீழ்த்திய வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
- தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார்.
- இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார்.
பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது. டிரைலர் காட்சிகல் சமூக வலைத்தலங்களில் பரவி வருகிரது. சீரிசின் டிரைலரை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
- சிறைக்கு சென்று திரும்பிய பிறகும் திருந்தவில்லையா?
சென்னை:
சென்னையை சேர்ந்த தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கடந்த ஆண்டு சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தான் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார். இதையடுத்து சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சரத்குமார் பற்றியும் அவரது மனைவி ராதிகா பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியில் சேர்வது தொடர்பாக சரத்குமார், ராதிகாவிடம் பேசியதை குறிப்பிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இதற்கு ராதிகா எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். சிறைக்கு சென்று திரும்பிய பிறகும் திருந்தவில்லையா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் ராதிகா சார்பில் அவரது மேலாளர் நடேசன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக சரத்குமார் மற்றும் ராதிகா பற்றி அவதூறு கருத்தை கூறியுள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கைது நடவடிக்கை பாய் கிறது. அவர் மீது எந்தெந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது பற்றி சட்ட நிபுணர் களின் கருத்தை போலீசார் கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
- நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார்.
- விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார். இவரது கணவரான சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரக இருந்தார். எனினும், தேர்தலுக்கு முன் தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்து விட்டார்.
ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுகிறார். ஏற்கனவே அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவாக இருக்கும் மாணிக்க தாகூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தனது மனைவி ராதிகா விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என சரத்குமார் பராசக்தி அம்மன் கோவிலில் அங்கப்பிரதிஷ்டம் செய்தார். இவர் அங்கப்பிரதிஷ்டம் செய்யும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார்.
- தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்த வரலட்சுமி.
அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். அதைத்தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.