என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மட்டன் சமையல்"

    • ஆட்டு கறியில் பல வகையான உணவுகளை செய்யலாம்.
    • இன்று ஆட்டுக் குடலில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஆட்டுக் குடல் - அரை கிலோ

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்

    மஞ்சள்த்தூள் - சிறிதளவு

    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய்,

    தண்ணீர் - தேவைக்கேற்ப

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில், குடலை நன்றாக வாசனை வராத அளவு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுத்து இஞ்சி, பெருஞ்சீரகத்தை தட்டி வைக்கவும்.

    மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம் இஞ்சியை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்த வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் கழுவிய குடல், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம் 1 டீஸ்பூன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 15 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    கடைசியாக சிறிது கொத்தமல்லி, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான ஆட்டுக் குடல் சூப் ரெடி

    • இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    ஈரல் - 500 கிராம்

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    பச்சை மிளகாய் - 2

    வர மிளகாய் - 5

    மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை - இரண்டு கொத்து

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஈரல் கலவையை சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொழுது தான் ஈரல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும்.

    பின்னர் மீதமுள்ள மிளகு தூளை தூவி கரண்டி போட்டு கிளற வேண்டும்.

    எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

    கடைசியாக அதன் மீது கொத்தமல்லித்தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.

    • மதுரை கறி தோசை மிகவும் பிரபலம்.
    • இந்த தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    கீமா மசாலா செய்ய

    மட்டன் கீமா - கால் கிலோ

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    சீரகம் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    கரம் மசாலா - அரை டீஸ்பூன்

    கல் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    கரி தோசை செய்ய:

    தோசை மாவு

    மட்டன் கீமா மசாலா

    கொத்துமல்லி இலை

    எண்ணெய்

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, கல் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து குழைய வதக்கவும்.

    இந்தக் கலவையில் மட்டன் கொத்துக்கறி சேர்த்து நன்கு கிளறவும்.

    இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கடாயை மூடி வேக வைக்கவும்.

    20 நிமிடம் கழித்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி எடுத்து வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றவும்.

    அடுத்து மட்டன் கீமா மசாலாவை தோசையின் மேல் பரப்பி விடவும் இதன் மேல் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து மறுபுறம் திருப்பி விடவும்.

    மறுபுறம் மசாலா நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூடான மற்றும் சுவையான மதுரை ஸ்டைல் கறி தோசை தயார்

    • மட்டன் நல்லி எலும்பு வறுவல் ஒரு சூப்பரான உணவாகும்
    • எலும்பு பிரியர்களுக்கு இது ஒரு சிறப்பான டிஷ்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் எலும்பு - முக்கால் கிலோ

    வெங்காயம் - 250 கிராம்

    தக்காளி - 150 கிராம்

    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    பெருஞ்சீரகம் தூள் - ½ டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன்

    கருப்பு மிளகு தூள் - ½ டீஸ்பூன்

    தேங்காய் பால் - அரை கப் கெட்டியானது

    உப்பு - தேவைக்கேற்ப

    தாளிப்பு

    கடுகு - அரை டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை

    காய்ந்த மிளகாய் - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    குக்கரில் சுத்தம் செய்த மட்டன் எலும்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரை வேக விடவும். எலும்புகள் நன்கு வேகவைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், பெருஞ்சீரகம் தூள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் போது, ​​மட்டன் எலும்பை வேக வைத்த நீருடன் சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை அடுப்பை மிதான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

    அடுத்து அதில் தேங்காய் பால் சேர்க்கவும்.

    எண்ணெய் பிரிந்து, தண்ணீர் வற்றி திக்கான தொக்கும் பதம் வந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெயை சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து வறுத்த எலும்புகளுடன் சேர்க்கவும்.

    நன்றாக கலந்து சாதம், ரொட்டி அல்லது தோசையுடன் பரிமாறவும்!

    இப்போது சூப்பரான மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல் ரெடி.

    • கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
    • சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள் :

    சீரக சம்பா அரிசி - 4 கப்

    மட்டன் - அரை கிலோ

    இஞ்சி, பூண்டு - 4 ஸ்பூன்

    பெரிய வெங்காயம் - 4

    தக்காளி - 3

    பச்சை மிளகாய் - 4

    மிளகாய் தூள் 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

    தேங்காய் - ஒரு மூடி

    தயிர் - அரை கப்

    லெமன் - 1

    புதினா - ஒரு கட்டு

    கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு

    நெய் - அரை கப்

    எண்ணெய் - அரை கப்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கிராம்பு - 3

    பட்டை - 3 சிறிய துண்டு

    ஏலக்காய் - 3

    பிரிஞ்சி இலை - ஒன்று

    சோம்பு - ஒரு ஸ்பூன்

    செய்முறை :

    * மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.

    * குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

    * இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

    * ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.

    * பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.

    * சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.

    • தோசை, இடியாப்பம், இட்லிக்கு சூப்பராக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வேக வைக்க :

    ஆட்டுக்கால் - 4

    வெங்காயம் - 3

    தக்காளி - 2

    பச்சை மிளக்காய் - 4

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி

    மிளகு தூள் - 2 தேக்கரண்டி

    தனியாத்தூள் - 2 மேசைகரண்டி

    உப்பு - தே. அளவு

    தேங்காய் - அரை மூடி

    தாளிக்க :

    எண்ணெய்

    பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி

    கொத்தமல்லி - ஒரு கொத்து

    புதினா - சிறிதளவு

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்.

    * ஆட்டுக்காலை நன்றாக தேய்த்து கழுவி அதில் உள்ள அழுக்கு, முடியை எடுத்து விடவும்.

    * குக்கரில் ஆட்டுக்கால், நறுக்கிய முக்கால் பாகம் வெங்காயம், நான்கு மேசைகரண்டி இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, உப்பு தூள், மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு அனைத்தையும் போட்டு கிளறி நான்கு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் போட்டு பதினைந்து நிமிடம் அதிக தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வேகவைத்து இறக்கவும்.

    * விசில் போனதும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின் மீதம் உள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி மீதமுள்ள இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி, புதினா சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கவும்.

    * கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    * சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.

    * ஆட்டுக்காலில் கொழுப்பு அதிக இருக்கும். ஆகையால் எண்ணெய் கம்மியா ஊற்றினால் போதும்.

    * இதை இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான இருக்கும்.

    • ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும்.
    • இன்று ஆந்திரா ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    வெங்காயம் - 3

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

    வறுத்து அரைப்பதற்கு...

    கசகசா - 1 டீஸ்பூன்

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    மல்லி - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - 1 இன்ச்

    கிராம்பு - 2

    பச்சை ஏலக்காய் - 3

    செய்முறை:

    மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனைப் போட்டு, 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கசகசா, சோம்பு, மிளகு, மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மிளகாய் தூள் மற்றும் பாதி மிளகுத் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    பின் தக்காளி மற்றும் மட்டனை சேர்த்து, தீயை அதிகரித்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.

    அத்துடன் உப்பு, வறுத்து அரைத்த மசாலாப் பொடிகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கிளறி, வடிகட்டி வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    குழம்பானது கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, அதில் மிளகுத் தூளை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!!

    • இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஆட்டு தலை - 1

    தக்காளி - 2

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 2

    சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

    பட்டை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 2

    தனியா தூள் - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிது

    கொத்தமல்லி - சிறிது

    தேங்காய் துருவல் - 1 கப்.

    செய்முறை : 

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு தலை கறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்,

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    5 நிமிடம் வதக்கிய பின்னர் அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 6 விசில் போட்டு வேக விடவும். 

    குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். 

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பின்பு பரிமாறவும்.

    • மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் கொத்துக்கறி - அரை கிலோ

    முட்டை - 1

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - 2

    பூண்டு - 2

    துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    கச கசா - 1 டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 10

    வறுத்த பொட்டுக்கடலை - 1 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    கிராம்பு - 2

    கசகசா - 2 டீஸ்பூன்

    பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மட்டன் கொத்துகறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கசகசா மற்றும் முந்திரி பருப்பை போட்டு வறுக்கவும்.

    அது சற்று பொன்னிறமாக மாறியதும் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக வறுக்கவும். பின், இந்த கலவையில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்..

    பின், இந்த கலவையில் தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும், இதில் மட்டனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த மட்டன் விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டையை சேர்த்து விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின், அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி செய்து வைத்த மட்டன் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இதனை அப்படியே சூடாக பரிமாறவும். அவ்ளோ தான் சூடான சூப்பரான மட்டன் கோலா உருண்டை ரெடி.

    • காய்ச்சல், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை குடிக்கலாம்.
    • இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நல்லி எலும்பு - கால் கிலோ

    வெங்காயம் - 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

    சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் - 1/4 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க :

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்

    கொத்தமல்லி - கையளவு.

    மிளகு - தேவைக்கு ஏற்ப

    செய்முறை

    நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சிறிது கொத்தமல்லி தழை, மிளகு தூள், வெங்காயம், சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலந்து குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும்.

    இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    இப்போது காரசாரமான நல்லி எலும்பு ரசம் தயார்.

    • தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.
    • சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் மூளை - 5

    சின்ன வெங்காயம் - 200 கிராம்

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 2 டீஸ்பூன்

    சீரக தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு -தேவையான அளவு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    * மட்டன் மூளையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அதில் மட்டன் மூளையை போட்டு அதனுடன் 1/2 டீஸ்பூன், சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீரில் இருந்து எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    * தக்காளி குழைய வதங்கி எண்ணெய் பிரிந்தது வரும் போது அதில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து கலந்து, அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

    * தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் இதில் சிறிது அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மிளகு மசாலா தயார்.

    • இந்த கஞ்சியை செய்வது மிகவும் சுலபம்.
    • இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்

    வறுத்த சிறு பருப்பு - 1 கப்

    எலும்பில்லாத மட்டன் - அரை கிலோ

    பெ.வெங்காயம் - 3 (நறுக்கவும்)

    கேரட் - 4 (நறுக்கவும்)

    உருளைக்கிழங்கு - 2 (நறுக்கவும்)

    பட்டாணி - சிறிதளவு

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    மசாலா தூள் - தேவைக்கு

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    தக்காளி - 4 (நறுக்கவும்)

    பட்டை, ஏலக்காய் - சிறிதளவு

    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

    செய்முறை:

    அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் மட்டன், மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.

    பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.

    சுவையான மட்டன் கஞ்சி ரெடி.

    ×