என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமாநல்லூர்"

    • ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
    • குண்டம் திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாந ல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து க்காளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா, கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (8-ந்தேதி) செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கு கின்றனர். மேலும் நாளை மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.

    குண்டம் இறங்கவும், தேரோட்டத்தில் பங்கேற்கவும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி கூடுதல் எஸ்.பி.,க்கள் 2 பேர் தலைமையில், 3 டி.எஸ்.பி.,க்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 32 சப்-இன்ஸ்பெக்டர்கள், 158 போலீசார், 80 ஆயுதப்படை போலீசார், 200 ஊர் காவல் படையினர், 50 டிராபிக் வார்டன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் கோவில் வளாக த்தில் புறக்காவல் நிலையம் மற்றும் 2 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது.பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    60 இடங்களில் மொபைல் டாய்லெட், 9 இடங்களில் குடிநீர் வசதி, பக்தர்கள் குண்டம் இறங்கு வதை பார்க்க 2 இடங்களில் எல்.இ.டி., திரை, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு, குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க 20 ஷவர் கொண்ட அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெருமால்லூரில் இன்று மதியம் 1 மணி முதல் நாளை இரவு 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கோபியில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்கள் குன்னத்தூர் பாலம் சர்வீஸ் ரோடு வழியாக ஸ்தூபி வரை வந்து, அங்கிருந்து கணக்கம்பாளையம் வாவிபாளையம், பூலுவப்பட்டி வழியாக திருப்பூருக்கு செல்ல வேண்டும்.

    சேலம், ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்தூபி பிரிவு அருகே வந்து பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் வலசுபாளையம் பிரிவு சர்வீஸ் ரோடு சென்று தேசிய நெடுஞ்சாலை அடைந்து கோவை செல்ல வேண்டும்.

    திருப்பூரில் இருந்து கோபி, ஈரோடு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பூலுவப்பட்டி சிக்னல் வழியாக நெருப்பெரிச்சல், வாவிபாளையம் வழியாக சென்று கணக்கபாளையம் பிரிவு ஸ்தூபி அருகே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு வலசு பாளையம் வழியாக சர்வீஸ் ரோடு சென்று தேசிய நெடுஞ்சாலை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும் வேண்டும்.

    கோவையில் இருந்து ஈரோடு செல்லும் வாகனங்கள் குன்னத்தூர் பாலம் அருகே வந்து பாலத்தின் கீழ் பயணிகளை இறக்கி விட்டு தேசிய நெடுஞ்சாலை அடைந்து செல்ல வேண்டும். மேலும் பயணிகள் வசதிக்காக குண்டம் திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    குண்டம் திருவிழா முடிந்து ஸ்தூபியில் இருந்து திருப்பூர், கோபி, ஈரோடு செல்லும் பக்தர்கள் ஸ்தூபியில் இருந்து பஸ்களில் ஏறி செல்லலாம். இதற்காக ஸ்தூபி பகுதியில் சிறப்பு பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.

    இதேபோல் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பக்தர்களின் வசதிக்கேற்பதாகவும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கோபி, ஈேராடு பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஸ்தூபி அருகே கணக்கம்பாளையம் ரோடு பகுதியில் நிறுத்த தனியார் இடத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூரில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பெருமாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரிலும், காளியம்மன் கோவில் அருகிலும், காதி கிராப்ட் வளாகத்திலும் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களது குழந்தைகள் அணிந்து வரும் விலையுயர்ந்த ஆபரணங்கள், பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பொதுமக்களின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக அவசர உதவி எண் 100 தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • குண்டம் திருவிழா பங்குனி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
    • சாம்பல் மேடுகள் பெருமாநல்லூர் பகுதிகளில் காணப்படுகின்றன.

    பெருமாநல்லூரில் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா பங்குனி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்விழா நெடுங்காலமாக தொடர்ந்து நடைபெறுவதை தமிழ் உலகம் அறியும்.

    அவ்விழாவில் பல்வேறு குடிமக்களும் தங்கள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப உரிய சடங்குகளை செய்து வழிபடுகின்றனர். இக்குண்டம் திருவிழாத் தோன்றிய வரலாற்றை நாம் அறிந்து கொள்வோம்.

    பழங்காலத்தில், இன்றைய பெருமாநல்லூர் என்ற இத்தலம் அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு நிலப்பகுதியாக இருந்தது. எனினும் இப்பகுதி நீர்வளமும் நிலவளமும் மிக்கதாக இருந்ததால் சிறந்த வயல் நிலங்களை உருவாக்க தகுதியுடையதாக விளங்கியது.

    இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் கால்நடைகளை மேய்த்த வண்ணம் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தனர். பொதுவாக கொங்கு நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்கள் அனைவரும் வேட்டையாடுதலையும் கால்நடைகளை மேய்த்தலையும் முதன்மை தொழில்களாக கொண்டிருந்ததால் புதிய மேய்ச்சல் நிலங்களைத்தேடி அடிக்கடி இடம் மாறினர்.

    புதிய மேய்ச்சல் நிலங்களை தேடி புறப்படும்போது அவர்கள் முன்பு வாழ்ந்த இடத்தில் சேர்த்து குவித்து வைத்த சாணம், குப்பை ஆகியவற்றை தீ மூட்டி விடுவர். அவை எரிந்து தணிந்து நல்ல தணலாக இருக்கும் போது அவற்றின் மீது ஆடு, மாடுகளை குறுக்கும் நெடுக்குமாக ஓடவிடுவர். அவ்வாறு கால்நடைகள் தீயை மிதித்துச் செல்லுவதால் அவற்றை பற்றியுள்ள நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.

    இதனை அவர்கள் ஓர் இயற்கை மருத்துவ முறையாக கையாண்டனர். இடம்பெயர்ந்த பின்னர் அத்தீயானது சில நாட்கள் நீடித்து நின்று அணைந்து மழை, வெயிலால் மக்கி சாம்பல் மேடுகளாக ஆகிவிடும்.

    இத்தகைய சாம்பல் மேடுகள் பெருமாநல்லூர் பகுதியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. சான்றாக கோவில்பாளையத்திற்கு அருகில் சர்க்கார்சாமக்குளம் என்று வழங்கப்படுகின்ற பழமையான சாம்பல் குளத்தை கூறலாம்.


    பெருமாநல்லூருக்கும், குன்னத்தூருக்கும் இடையிலும், சுற்றுப்புறத்திலும் சாம்பல் மேடுகள் இருந்தன. கால வளர்ச்சியில் அவர்களின் நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்து நிலையான குடியிருப்புகள் ஆங்காங்கு தோன்றின.

    இத்தகைய குடியிருப்புக்கள் பெரும்பாலும் மரத்தடிகளிலேயே அமைந்தன. கொங்கு நாட்டில் உள்ள ஆலத்தூர், ஊஞ்சலூர், புளியம்பட்டி போன்ற ஊர்கள் மரங்களின் கீழ் அமைந்த குடியிருப்புக்களை நினைவூட்டு கின்றன.

    அவ்வாறு அமைந்த குடியிருப்புக்களின் மத்தியில் ஒரு பொது இடமாக ஒரு மன்றத்தை ஏற்படுத்தி அங்கு தம் கால்நடைகளை அடைத்து வைத்தனர். 'பட்டி, தொட்டி, தொழுவம்' போன்ற சிறப்பு விகுதி பெற்று பல்வேறு ஊர்கள் இருப்பது தெரிந்ததே.

    புதிய, நிலையான குடியிருப்பில் வாழ்ந்த காலத்திலும், அவர்கள் 2 சாணத்திற்கு தீமூட்டி கால்நடைகளை அதன் மீது நடக்க வைத்து மருத்துவம் செய்யும் வழக்கம் தொடர்ந்தது.

    அவர்கள் ஏற்படுத்தியிருந்த மன்றத்தில் பெண் தெய்வத்தை முதலில் ஒரு கல்லாகவும், பிற்காலத்தில் துர்க்கை சிலையாகவும் எழுந்தருளச் செய்தனர். காட்டு விலங்குகளாலும், இயற்கை சீற்றங்களாலும் பிற பகைவர்களாலும் ஏற்படும் அச்சத்தை போக்கும் பேராற்றல் மிக்கவள் துர்க்கை என்னும் காளி தேவியே என்று பெரிதும் நம்பினார்கள்.

    எனவே, காளிதேவியின் உருவத்தில் கண்டோர் அச்சம் கொள்ளும் வகையில் எட்டுக்கரங்கள் அமைத்து, அக்கரங்களில் பல ஆயுதங்களை ஏந்தி காட்சி தருபவளாக சிலை வடித்து வணங்கினர்.


    காலப் போக்கில் அப்பெண் தெய்வத்தின் முன்னுள்ள மன்றத்தில் ஆடு, மாடுகளைத் தீயில் நடக்க வைத்தது போல தாங்களும் அத்தீயின் மீது நடந்து அதனை தெய்வத்தைப் போற்றும் சமயச்சடங்காக மாற்றிக் கொண்டனர்.

    இம்முறையில் தோன்றியதுதான் துர்க்கை கோவிலின் முன்னுள்ள 'குண்டம் மிதித்தல்' என்னும் சமயச்சடங்காகும். கால்நடை மருத்துவம் என்னும் தீ மிதிக்கும் பழக்கம், பிற்காலத்தில் குண்டம் மிதித்தலாகிய சமயச்சடங்காக மாறியது.

    • 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
    • திறந்த வெளியில் 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது.

    'குண்டத்து காளியம்மன் கோவில்' மக்களால் 'கொண்டத்து காளியம்மன் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வீற்றிருக்கும் இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். பெருமாநல்லூரின் வடமேற்கு பகுதியில் வடக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது.


    மதில் சுவர்களுடன் கருவறை, முன் மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையில் காளியம்மன் அமர்ந்த நிலையில் 8 கைகளுடன் காட்சி தருகிறார். வலது பக்க கைகளில் முறையே வேல், உடுக்கை, கத்தி, பட்டாக்கத்தி உள்ளன. இடப்பக்கம் மேல் கை விரிச்ச நிலையில் பிஸ்மய முத்திரையாக உள்ளது.

    ஏனைய கைகளில் சாட்டை, கபாலம் ஆகியன அமைந்துள்ளன. கோபத்தை வெளிப்படுத்தும் முகம், அக்கினி சுவாலையை காட்டும் தலைமுடி ஆகியவை சிறப்பாக உள்ளன. எதிரில் சிங்க வாகனம், பலி பீடம் ஆகியவை உள்ளன. விநாயகர், காளியம்மன் ஆகியோருக்கு செப்புத் திருமேனிகள் உள்ளன.


    வலப்புறத்தில் விநாயகர் உருவமும், கோவில் கருவறை மேற்கில் செல்வ விநாயகர் உருவமும் உள்ளன. குண்டத்துக் காளியம்மன் கோவிலில் இரு வாயில்களிலும் துவாரபாலக உருவங்கள் சுதையால் செய்யப்பட்டவை உள்ளன. வெளியே நீட்டிய கோரப்பற்கள், பிதுங்கிய கண்கள், ஆயுதங்கள் முதலியவை அச்சுறுத்தும் வகையில் உள்ளன.

    முன்வாயிலில் பெண், ஆண் என இரு துவாரபாலகர் பேருருவங்கள் உள்ளன. அவற்றை நீலி, நீல கண்டன் என அழைக்கின்றனர். உள் வாயிலில் இரு பெண் துவாரபாலகி உருவங்கள் உள்ளன. இடாகினி, மோகினி என இவற்றை மக்கள் அழைக்கின்றனர். கோவில் பிரகாரத்தில் அம்மனின் இடப்பக்கத்தில் முத்துக்குமாரசாமி சன்னதி உள்ளது.


    கோவிலின் முன் திறந்த வெளியில் 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது. பங்குனி மாதம் பண்ணாரி அம்மன் திருவிழா நடைபெறும் நாட்களை ஒட்டி சில நாட்களுக்கு முன் பின்னாக இக்கோவிலில் விழா நடைபெற்று வருகின்றது.

    இப்பகுதியில் விழாவை ஒட்டி நடைபெறும் குண்டம் திருவிழா மிகப்புகழ் வாய்ந்தது. பக்தி சிரத்தையுடன் குண்டம் இறங்குவது கண் கொள்ளாக் காட்சியாகும். குண்டத்தை ஒட்டியே அம்மனுக்குக் குண்டத்து காளியம்மன் எனப்பெயர் ஏற்பட்டது.

    தீமிதி விழாவாகிய குண்டம் இறங்குவது மிகப்பழங்காலம் தொட்டே உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று வந்துள்ளது. கால்நடைகளை தீ மிதிக்கச்செய்வதும் சில இடங்களில் நடைபெற்றுள்ளது.

    விரதம் இருந்து குளித்து ஈரத்துணியுடன் வேப்பிலையை கையில் ஏந்தி தீ மிதிப்பதே மரபாகும். மன ஒருமைப்பாடு, தெய்வத்திற்கு அஞ்சும் நிலை, எண்ண சிதறல் ஏற்படாமை ஆகியன சிறப்புறுகின்றன. நாகரீக வளர்ச்சி ஏற்பட்டபோது மன ஒருமைப்பாட்டை வளர செய்வது யோக நிலையில் குண்டலினி சக்தி எனப்பெயர் பெற்றது.

    குண்டு, குண்டம், குண்டலம், குண்டலி, குண்டலினி என்றவாறு இச்சொல்லை சிந்திப்பது பொருள் விளக்கத்துக்கு துணை செய்யும். இவை முறையே ஆழம், நீர் நிலை, ஓம குண்டம், வட்டம், பாம்பு எனப்பொருள் உடையன" என்று ஆய்வாளர்கள் கருதுவதால் குண்டத்திற்கும் குண்டலினி சக்திக்கும் தொடர்பு உண்டு என்பது புலனாகிறது.

    • 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களும்,40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் கலந்து கொள்கிறார்கள்.
    • போட்டி காலை 6 மணி அளவில் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. 

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வள்ளுவன் மராத்தான் போட்டி வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. போட்டி காலை 6 மணி அளவில் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களும்,40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை உணவு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாநல்லூர் ரோட்டரி சங்கம் மற்றும் சுகன் சுதா மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

    • திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது
    • இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவினை முன்னிட்டு சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது.இதில் பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.இவர்கள் இதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்றவர்களின் விவரம்:- சிலம்பம் போட்டியில் எம். சத்யா (தங்கம்), மோகனா (தங்கம்), காவியா (வெள்ளி) ஆகியோர் வென்றுள்ளனர் . இதேபோல் டேக்வாண்டோ பிரிவில்14 ,17 ,19 வயதுக்குட்பட்ட போட்டியில் பி .வர்ணா (வெண்கலம்),எம்.சுதர்சனா (வெள்ளி),சுபினயா (வெண்கலம்),ஆர். பௌத்ரி (வெண்கலம்),ஜி. கௌசல்யா (வெள்ளி), சினேகா (வெள்ளி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தாதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர். போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்த சரவணமுத்துக்கு பள்ளியின் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு போக்குவரத்து காவல் நிலையம் அருகில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதனை பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோட்டரி சங்கம், திருப்பூர் தி ஐ பவுண்டேஷன் ஆகியன இணைந்து நடத்தியது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட காவல்துறை, அவிநாசி காவல் உட்கோட்டம், பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.

    • பெருமாநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை)மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அவினாசி:

    அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பெருமாநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை)மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லகட்டிபாளையம், கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெருமாநல்லூர் மற்றும் செங்கப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மாலை சுமார் பலத்த மழை பெய்தது.
    • கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் அடுத்துள்ள பெருமாநல்லூர் மற்றும் செங்கப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3.30 மணி முதல் 4.30 மணி வரை பலத்த மழை பெய்தது.

    இதனால் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், பாண்டியன் நகர், பூலுவபட்டி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது பெய்துள்ள மழையினால் பூமி குளிர்ந்து, இதமான குளிர் காற்று வீசியது. இதனால் இந்த பகுதியில் குளிர்ச்சி நிலவியது. விவசாயிகள் வைகாசி பட்ட சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். 

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர் :

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- பெருமாநல்லூர், பழங்கரை துணைமின்நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம்கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஓ.ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதிநகர், துரைசாமிநகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், முல்லைநகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளிலும், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பெரிச்சல்,செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர குண்டம் இறங்கினர்.

     மேலும் சிலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர். மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்கின்றனர். இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • பெருமாநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    பெருமாநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 19-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மொய்யாண்டம்பாளையம், லட்சுமி காா்டன், அப்பியா பாளையம், ஆண்டிபாளையம், வாரணாசிபாளையம், பெருமாநல்லூா், குன்னத்தூா் சாலை, கணக்கம்பாளையம், கஸ்தூரிபாய் நகா், கூத்தம்பாளையம் பிரிவு, கூத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நாளை 14-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பழங்கரை,பெருமாநல்லூர் ஆகிய துைண மின்நிலையங்களில் நாளை 14-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம்நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ராஜன்நகர், ஆர்.டி.ஓ.ஆபிஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம்,வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிப்பாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி,நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமிநகர், முல்லைநகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளிலும்,

    பெருமாநல்லூர், கணக்கம்பாளையம்,காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன்நகர்,எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×