search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர்"

    • காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
    • எஸ்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட ஆயதப் படை மைதானத்திலுள்ள நீத்தார் நினைவுத் தூணில், வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    ராணுவம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட காவல் படைகளில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்.21 ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆளிநர்கள் 63 குண்டுகள் முழங்க அங்குள்ள நீத்தார் நினைவு தூணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இவரைத் தொடர்ந்து, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், ஆய்வாளர பத்மநாபன், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காமராஜர், அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், மாவட்ட குற்ற ஆவணக் காப்பாளர் சுரேஷ் மற்றும் அரியலூர், கீழப்பழுவூர், கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    • 2-ம் நிலை காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், www.tnusrb.tn.gov.in

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 47 வயதுக்கு மிகாமல் உள்ள முன்னாள் ராணுவத்தினர் ராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் பணியில் உள்ள ராணுவத்தினர் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் விடுவிக்கப்படுபவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், www.tnusrb.tn.gov. என்ற இணையதள முகவரியில் 7.7.2022 முதல் 15.8.2022-க்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×