search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபிகா குமாரி"

    • வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை பஜன் கவுர் தோல்வி அடைந்தார்.
    • ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கத்தை தவறவிட்டார் மனு பாக்கர்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தையில் காலிறுதி சுற்றில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்துகொண்டார்.

    இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனை நாம் சு ஹியோனிடம் 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    ஏற்கனவே நடந்த வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை பஜன் கவுர் தோல்வி அடைந்தார். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் நூலிழையில் 3-வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    • இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
    • துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் நூலிழையில் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்துகொண்டார்.

    இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனையை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் நூலிழையில் 3-வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    • குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்றார்.
    • பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார்.

    பாரீஸ்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற கணக்கில் டச்சு வீராங்கனையை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    அடுத்த சுற்றில் தீபிகா குமாரி ஜெர்மன் வீராங்கனையை சந்திக்கிறார்.

    • சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதம்.
    • கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது.

    ராஞ்சி:

    சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதை தொடங்கி வைத்த இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் 75 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

    இந்த கலந்துரையாடலின் போது, சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய தீபிகா குமாரி, தற்போதைய நவீன வாழ்க்கையில் பெரும்பாலான மக்களிடம் பரவி உள்ள உணவு முறைகள், உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றார். 


    ஆரோக்கியமான உணவு மற்றும் கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது என்றார். இது குறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுமாறும் விளையாட்டு வீரர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    தமது குழந்தை பருவத்தில் பச்சை காய்கறிகள், சாலட்டுகளை தமது வழக்கமான உணவாக உட்கொண்டதாகவும் தீபிகா குமாரி தெரிவித்தார். சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சியின் பலன்கள் வரும் ஆண்டுகளில் தெரிய வரும் என்று வில்வித்தை வீரர் அதானு தாஸ் கூறினார்.

    ×