என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருமகனை"

    • மருமகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரும் தலைமறை வாகினார்.
    • போலீசார் வீட்டில் உள்ளே இருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்கா ர்த்திக் (29). இவர் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ், துளசியம்மா ஆகியோரின் மகள் ஜோதி என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்துக்கு முன்பு திரு மணம் செய்து கொண்டார்.

    இவர்களது திருமணம் பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்க வில்லை. கடந்த மாதம் விக்னேஷ் கார்த்திக் கேரளா வுக்கு வேலைக்காக சென்று ள்ளார். மீண்டும் தனது சொந்த ஊரான திகனாரை கிராமத்துக்கு வந்துள்ளார்.

    அப்பொழுது விக்னே ஷ்கார்த்தியின் மாமனார் பால்ராஜ் மற்றும் மாமியார் துளசிம்மா, சிறுவன் என 3 பேர் சேர்ந்து விக்னேஷ்கார்த்தியின் வீட்டுக்குள் நுழைந்து விக்னேஷின் முகத்தில் மாமியார் மிளகாய் பொடியை தூவி உள்ளார்.

    பின்னர் மாமனார் பால்ராஜ் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் விக்னேஷ் கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதில் விக்னேஷ்கா ர்த்தியின் கை, கால், வயிற்று பகுதி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மைசூர் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மருமகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரும் தலைமறை வாகினார்.அவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் 2 தனிபடைகள் அமைத்து தேடிவந்தனர்.

    அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்திக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் 3 பேரும் தாளவாடி அடுத்த தர்மாபுரம் கிராமத்தில் தனது வீட்டுக்கு வந்துள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் தாளவாடி போலீ சார்க்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவயிடத்திக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் வீட்டை சுற்றி வளைத்து வீட்டில் உள்ளே இருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    தாக்குதலுக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் சத்தியமங்கலம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மருமகன் மாமனார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாமனார் மருமகனை கல்லால் தாக்கினார்.
    • இது குறித்து மருமகன் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி காந்திநகர் புதுகாலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (39).பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி அருணா. இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அண்ணாதுரை மனைவி வீட்டுக்கு வந்தார். தனது இளைய மகன் லிங்கேஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் மணியன் (55) மனைவியை வைத்து குடும்பம் நடத்த தெரியவில்லை. எதற்கு என் பேரனுடன் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அண்ணாதுரையை மணியன் கல்லால் தாக்கியுள்ளார். இது குறித்து அண்ணாதுரை புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணியனை கைது செய்தனர். பின்னர் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×