என் மலர்
நீங்கள் தேடியது "தோட்டத்தில் புகுந்து"
- வனப்பகுதியில் இருந்து வந்த 10 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்த வாழையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
- யானைகளால் 2 ஏக்கர் வாழைகள், 10 தென்னை மரம் சேதமடைந்தது.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, மான், கரடி, யானை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன வில ங்குகள் வசித்து வருகின்றன.
இதில் உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேஷன்நகர் கிராமத்தை சேர்ந்தவர் வரதப்பன் (47). இவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் நேந்திரம்வாழை சாகுபடி செய்துள்ளார்.
நேற்று இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த 10 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்த வாழையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
இதைப்பார்த்த விவசாயி வரதப்பன் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து சப்தம் போட்டு யானைகளை துரத்தினர்.
ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் வாழையை தொடர்ந்து சேதபடுத்தியது. அதிகாலை 6 மணியளவில் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது. யானைகளால் 2 ஏக்கர் வாழைகள், 10 தென்னை மரம் சேதமடைந்தது.
இதனையடுத்து சேதம டைந்த விவசாய ப்பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமா கவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை திண்று மிதித்து சேதப்படுத்தியது.
- வனத்துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏரா ளமான வன விலங்கு கள் உள்ளன.
இந்த வனப்பகுதி களில் இருந்து உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது .
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (60). இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
இந்த நிலையில் இரவு 12 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை திண்று மிதித்து சேதப்படுத்தியது.
இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி திருமூர்த்தி ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதாரம் செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வனத்துறைக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் தகவல் அளித்தார்.
பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். ஆனால் யானைகள் வாழைகளை சேதப்படுத்தி கொண்டு இருந்தது. சுமார் 1 மணி நேரத்திக்கு பிறகு யானை வனப்பகுதிக்கு சென்றது.
இதில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300 வாழைகள் சேதம் ஆனது. கருப்பன் என்ற ஆட்கொல்லி யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வனப்பகுதியில் உள்ளது.
இந்த நிலையில் கும்கி யானை உள்ள பகுதியிலயே கருப்பன் யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வனத்துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.