என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தருமபுரி"
- பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
- பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை.
மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், "மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
- பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
- ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.
இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், நேற்று பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
- மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை
- பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.
பட்டியல் பிரிவைச் சேர்ந்த பாஞ்சாலை என்கிற மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்டதால் அடுத்த பேருந்து நிலையம் வரை நடந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை
இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
- சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
- ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது. விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீ பரவியதில் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று, மீட்பு பணியிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
- கடலூர் மாவட்டம், காடாம் புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய வேண்டும்.
- தருமபுரி கலெக்டர் அலுவலக வளா கத்தில் தருமபுரி நிலஅளவை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி,
கடலூர் மாவட்டம், காடாம் புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய கோரி தருமபுரி கலெக்டர் அலுவலக வளா கத்தில் தருமபுரி நிலஅளவை அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்க டேசன் தலைமை தாங்கி னார். கோட்ட தலைவர் சங்கீதா அனை வரையும் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் தவமுனி முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் சுருளிநாதன், செயலாளர் பிரபு, பொருளாளர் முருகன், அரூர் கோட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாநில செயலாளர் கல்பனா, துணை செயலாளர் பழனிய்ம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரூர் கோட்ட செயலாளர் சின்னராசு நன்றி கூறினார்.
- தருமபுரியில் கே.பி.அன்பழகன் தலைமையில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ. அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி,
மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று அ.தி.மு.க. சார்பில் தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கி யுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும், அறிவிக்கப் பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி யும், இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவபிரசாகம், நகர செயலாளர் பூக்கடை ரவி உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பேசினார்.
- பொதுபல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த மையங்க–ளில் திரளான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
சேலம்:
மத்திய பல்கலைக்–கழகங்கள்-44, மாநில பல்கலைக்–கழகங்கள்- 12, நிகர்நிலை பல்கலைக்– கழகங்கள்- 11, தனியார் பல்கலைக்கழகங்கள்-19 ஆகியவற்றில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான 2022-2023 -ம் ஆண்டு முதல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி.) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பிளஸ்-2 முடித்து உயர்படிப்புக்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகள் பலர் விண்ணப்பித்தனர்.
இதனை தொடர்ந்து பொது பல்கலைக்கழக இளநிலை நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் 500 நகரங்களில் தொடங்கியது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த மையங்க–ளில் திரளான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். காலையில் தாள்-1 தேர்வு 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வரையிலும், மாலையில் தாள்-2 தேர்வு 3 மணி நேரம் 45 நிமிடங்கள் வரையிலும் நடைபெற்றது. அதாவது தாள்-1 தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து தாள்-2 தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 6.45 மணி வரை நடைபெற்றது.
இன்று முதல் தொடர்ந்து பொதுபல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்