என் மலர்
நீங்கள் தேடியது "தருமபுரி"
- தருமபுரி சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார் பணியிட மாற்றம்.
- காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம் பணியிட மாற்றம்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராக பணியாற்றி வந்த சரவணன், தருமபுரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், தருமபுரியில் தாசில்தார் ஜெய செல்வன் பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சண்முக சுந்தரம் தருமபுரி தாசில்தாராகவும், தருமபுரி சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார், நல்லம்பள்ளி தாசில்தாராகவும், தருமபுரி ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லட்சுமி பென்னாகரம் தாசில்தாராகவும்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ரஜினி பாலக்கோடு தாசில்தாராகவும், காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோவிந்தராஜ் காரிமங்கலம் தாசில்தாராகவும், தருமபுரி ஆதிதிராவிட நல தனி தாசில்தாராக வள்ளி பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாராகவும், நல்லம்பள்ளி தாசில்தார் பார்வதி, தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தராகவும், பென்னாகரம் தாசில்தார் சுகுமார் , காரிமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம்,
பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ் தருமபுரி ஆதிதிராவிட நல தனித் தாசில்தாராகவும், பாப்பிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மில்லர் , தருமபுரி தனி தாசில்தாராகவும் அங்கு பணியாற்றி வந்த பிரசன்ன மூர்த்தி, தருமபுரி ஆலய நிலங்கள் தனி தாசில்தாராகவும் பணியிடமாற்றம்செய்து இவர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
- அலுலலக ஊழியர் அருள் என்பவரை திருப்புளியால் தாக்கியுள்ளார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எம்.ஒட்டப்பட்டி பகுதியில் 1998-ம் ஆண்டு முதல் ஒட்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் இடத்தினை பெருமாள் என்பவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தானமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெருமாள் மற்றும் அவரின் சகோதரர் முனியப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தினை சுமார் 20 வருடத்திற்கு முன்பு இரண்டாக பிரித்து விவசா யம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முனியப்பன் மகன் தொழிலாளியான மணி என்பவர் அடிக்கடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்து இது தன் தந்தைக்கு சொந்தமான இடம், காலி செய்து கொடுங்கள் என அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து மதிகோண் பாளையம் போலீசார் மணியை அழைத்து சமதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்ற மணி என்பவர் இன்னும் நீங்கள் காலி செய்யவில்லையா என அலுலலக ஊழியர் அருள் என்பவரை திருப்புளியால் தாக்கியுள்ளார்.

உடனடியாக அருள் என்பவர் அவரை தள்ளி விட்டு வெளியே சென்றதையடுத்து அருகே இருந்தவர்களும் மணியை தடுக்க முற்பட்ட போது அவர்களையும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கி உள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களும் மணியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் அலுவலக ஊழியர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று மணியும், கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தன்னை தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து தொழிலாளி ஒருவர் ஊழியர்களை கத்தியால் சரமாரியாக தாக்கிய சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கர்நாடகாவில் இருந்து 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு.
- ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
தருமபுரி:
கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கபினி கிருஷ்ணராஜ் சார் ஆகிய இரு அணைகளில் இருந்து நேற்று 1 லட்சம் கனஅடிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வரை 56 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 62 ஆயிரம் கன அடியாகவும் தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரித்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 11-வது நாளாக தடை நீடித்து வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளதாலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.
- 20 கி.மீ சென்று மதுபானங்களை வாங்க வேண்டி உள்ளதாக மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுபான கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி பொதுமக்கள் போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் தங்கள் பகுதியில் மதுபானக் கடை வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், தரம்புரியில் உள்ள நலப்பரம் பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராம மக்கள் தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தங்கள் பகுதியில் இருந்து 20 கி.மீ சென்றுதான் மதுபானங்களை வாங்க வேண்டி உள்ளதாக மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஆதனூர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
- எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள ஆதனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஆதனூர் பகுதியில் 'டாஸ்மாக்' மதுக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
பொதுவாக மதுக்கடை வேண்டாம், இருக்கும் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரியும் தான் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மதுக்கடை வேண்டும் என பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தர்மபுரியில் டாஸ்மாக் வேண்டும் என பெண்கள் போராடிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போராட்டம் நடத்திய பெண்கள் கூறுகையில்,
எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என தெரியாமல் சென்றோம். தலைக்கு ரூ.300 கொடுத்து போராட்டத்திற்கு அழைத்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பின்னரே போராட்டம் குறித்து தெரிந்தது. போராட்டத்திற்கு அழைத்து சென்றவர்கள் கூறியதை பேட்டியில் கூறினோம் என்று தெரிவித்தனர்.
- பள்ளி மாணவிகளுடன் பள்ளி நடைமுறை பற்றி அமைச்சர் கலந்துரையாடினார்.
- முதலமைச்சர் காலை உணவு திட்டப் பணியாளர்களுடன் உரையாடி, உணவின் தரத்தையும் ஆய்வுசெய்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர், ஜி.கே.மணி ஆகியோர் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட குள்ளனூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு திறன்மிகு வகுப்பறைகளையும் பார்வையிட்டனர்.
அப்போது பள்ளி மாணவிகளுடன் பள்ளி நடைமுறை பற்றி அமைச்சர் கலந்துரையாடினார்.
தொடர்ந்து முதலமைச்சர் காலை உணவு தயாராவதில் தாமதம் என்பதை அறிந்து அது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
அப்போது அந்த பள்ளியில் மின்சார நீர் ஏற்றும் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் கசிந்துள்ளது.
இதனை அறிந்த ஆசிரியர்களும், பணியாளர்களும் காலையில் அதனை பழுது பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பழுது பார்த்து கொண்டிருந்த பணியாளர்களிடம் 'இனிமேல் இது போன்ற மின் கசிவு ஏற்படாத வகையில் சீரமைக்குமாறு அமைச்சர் கேட்டு கொண்டார்.
தொடர்ந்து முதலமைச்சர் காலை உணவு திட்டப் பணியாளர்களுடன் உரையாடி, உணவின் தரத்தையும் ஆய்வுசெய்தார். பின்னர் அமைச்சர் அங்கிருந்து வேறு ஒரு அரசு பள்ளியை ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றுவிட்டார்.
- தருமபுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது.
- முதன்மைக் கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்.
தருமபுரி:
ஆசிரியர்களை தகாத வார்த்தையால் பேசும் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவை கண்டித்து தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட தலைவர் ஆசிரியர் ஆறுமுகம் கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வின்போது, ஆசிரியர்களை ஒருமையில் பேசுவது, ஆசிரியர்களின் பிறப்பை தவறாக பேசுவது, அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு தேவையான அரசு வழங்கப்பட்டுள்ள தற்செயல் விடுப்புகளை கணக்கிட்டு அதிக தற்செயல் விடுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்களை தனியாக அழைத்து ஒருமையில் திட்டி வருகிறார்.
பல்வேறு ஆசிரியர்களின் வேதனை தெரிவித்ததன் காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், முதன்மைக் கல்வி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் நள்ளிரவில் காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கிருஷ்ணகிரி அணையில் 21.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- அத்திவாசிய பொருட்கள் வாங்க முடியாமல பொதுமக்கள் தவித்தனர்.
தருமபுரி:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக பெஞ்சல் புயல் உருவாகி தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் நகர பகுதியில் நேற்று அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. வெயிலே தெரியாமல் காலை முதல மதியம் வரை குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. மதியம் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது.
இந்த மழை இரவு விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்ததால், அத்திவாசிய பொருட்கள் கூட வாங்க வெளிவர முடியாமல பொதுமக்கள் தவித்தனர்.

நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், 4ரோடு, பச்சையம்மன் கோவில் தெரு, சேலம் மெயின்ரோடு, மதிக்கோண்பாளையம், முகமதுஅலி கிளப்ரோடு, குமாரசாமிப்பேட்டை, மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையால் தருமபுரி நகரில் கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு இருந்த புளியமரம் இன்று காலை சாய்ந்து விழுந்தது.
இதில் அந்த தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மரம் விழுந்ததால் வண்டியின் முன்பு சேதமாகி இருந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.
மரம் சாய்ந்து விழுந்தால் தருமபுரி நகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டது. உடனே பேரிடர் மீட்பு படையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காரிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, அடிலம், அனுமந்தபுரம், பொம்மஅள்ளி, கெரகோடஅள்ளி, நாகணம்பட்டி, திண்டல், தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதியில் இரவு தொடங்கி காலை வரை பலத்த மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், பெரும்பாலை, பாலக்கோடு, அரூர், கம்பை நல்லூர், பாப்பிரெட்டிப் பட்டி, தொப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை வரை கனமழை கொட்டியது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், பொதுமக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:
தருமபுரி-30மி.மீ, பாலக்கோடு-15மி.மீ, மாரண்டல்-6மி.மீ, பென்னாகரம்- 12 மி.மீ, ஒகேனக்கல்- 3 மி.மீ, அரூர்- 91.4 மி.மீ, பாப்பிரெட்டிப் பட்டி-75மி.மீ, மொரப்பூர்- 86 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 318.4 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெஞ்சல் புயல் எதிரொலியால் இரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்தது.
இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், லண்டன்பேட்டை, சேலம் மெயின்ரோடு, பெங்களூரு சாலை, சப்-ஜெயில் ரோடு மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
இதேபோன்று மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பாம்பாறு, பாரூர், கிருஷ்ணகிரி டேம், உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்தது.
தொடர்ந்த பெய்து வரும் மழையின் தாக்கம் காரணமாக, பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பம்பாறு அணையில் 95 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் 71 மி.மீ, போச்சம்பள்ளி தாலுகாவின் பெணுகொண்டபுரத்தில் 46.4 மி.மீ மற்றும் பாரூரில் 37.2 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் 21.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் பகுதிகளில் மழை குறைவாக பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
- கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை தடபுடலாக வரவேற்க, தி.மு.க.வினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
- உதயநிதி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி வருகை, வெள்ள பாதிப்புகளால் ரத்ததானது.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (5-ந் தேதி) கிருஷ்ணகிரி அருகே நடக்கும், தி.மு.க.வினர் இல்ல நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதாக இருந்தது. இதற்காக அவரை வரவேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.வினர் பேனர்கள், கொடி கம்பங்களுடன், சுவர் விளம்பரங்களை எழுதினர்.
உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியை தயார் செய்யும் பணியில், அரசு அலுவலர்களும் ஈடுபட்டு, அரசு சார்பில் முடிவுற்ற பணிகள், நடந்து வரும் பணிகள் குறித்து அறிக்கைகளும் கேட்கப்பட்டு இருந்தன.
தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை தடபுடலாக வரவேற்க, தி.மு.க.வினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் 'ஃபெஞ்சல்' புயலால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த, 4 நாளாக மழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மீட்பு பணிகள், வெள்ள பாதிப்புகளை கணக்கிடும் பணி, நிவாரணம் குறித்து அறிக்கைகள் சமர்பிக்கும் பணிகளில், அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், நாளை மறுநாள் (6-ந் தேதி) தருமபுரி மாவட்டத்திற்கும் வருகை தந்து நலத்திட்ட உதவிகள் வழங்க வாய்ப்பில்லை எனவும், பின்னர் அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- தகவலறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டுக்காரன் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் சில ஆசிரியர்கள் பள்ளியில் சரிவர பணியை செய்வதில்லை என்பது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. உடனே அந்த ஆசிரியர்களை வேறு இடத்திற்கு மாற்ற செய்ய வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சரிவர பணி செய்யாத ஆசிரியர்களை தவிர 3 ஆசிரியர்களை மட்டும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால், ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு மட்டும் மாணவர்கள் படிக்க யாரும் வரவில்லை. இதனால் பணியில் இருந்த ஆசிரி யர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பள்ளியின் முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டு வந்து திடீரென்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றல் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது அதிகாரியிடம் பெற்றோர்கள், 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
மேலும், பணியிடமாற்றம் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களையும் மீண்டும் இதே பள்ளியில் பணியமர்ந்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 3 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிந்துள்ளனர். முன்விரோதம் காரணமாகா மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனரா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன் (வயது38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும், இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். இவரது மனைவி பிரியா (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் முத்துராமனிடம் அதே பகுதியை சேர்ந்த துரை (40) என்பவர் பணம் வாங்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக வாங்கிய பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முத்துராமன் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனம் மற்றும் மனைவியின் மொபட்டையும் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர்.
இன்று காலை விடிந்ததும் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்திய முத்துராமனின் 2 இருசக்கர வாகனங்களும் மற்றும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகம் மனைவி பச்சையம்மாளின் இருசக்கர வாகனமும் தீயில் எரிந்து கருகிய நிலையில் இருந்தது.
இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் 3 வாகனங்களும் தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துராமன் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தபோது, மர்ம நபர்கள் முதலில் முத்துராமன் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
இதனால் அவர் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பச்சையம்மாளின் வாகனத்தின் மீதும் தீ பற்றி எரிந்ததால், 3 வாகனங்கள் எரிந்து முழுவதும் சேதமானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து முத்துராமன் போலீசாரிடம், புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோத காரணமாக? துரை என்பவர் முத்துராமனின் வாகனங்களுக்கு தீ வைத்தாரா? அல்லது முத்துராமனிடம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வேறு யாராவது மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முத்துராமன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன் (வயது38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவரது மனைவி பிரியா (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
முத்துராமன் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் மற்றும் மனைவியின் மொபட் ஆகியவற்றை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் எழுந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள், மொபட், சைக்கிள் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை தீயில் எரிந்து கிடந்தது. இதுகுறித்து முத்துராமன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்த துரை (வயது 40) என்பவர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மொபட் ஆகியவற்றுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் முத்துராமனின் மனைவி மகளிர் சுய உதவிகுழுவில் தலைவியாக உள்ளார். அவரிடம் துரை தனது குடும்பத்தினருக்கு கடன் உதவி ஏற்பாடு செய்து தருமாறு கூறினார்.
அதற்கு அவர், கடன் வாங்கி கொடுத்தால், திருப்பி செலுத்தமாட்டீர்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரத்தில் துரை, முத்து ராமனின் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கைதான துரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.