என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை கிரிக்கெட்"
- 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
- எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம்.
இஸ்லாமாபாத்:
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் போட்டி பட்டியலை வெளியிட்டார்.
இதில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் இடம் குறித்தோ, போட்டி அட்டவணை பற்றியோ தெரிவிக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என்று கூறிய ஜெய்ஷா போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி டுவிட்டரில் கூறியதாவது:-
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 2023-24-ம் ஆண்டுக்கான கட்டமைப்பு மற்றும் போட்டி பட்டியலை ஒரு தலைபட்சமாக வழங்கிய ஜெய்ஷாவுக்கு நன்றி. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
அதில் நீங்கள் இருக்கின்ற வேளையில் எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம். விரைவான பதில் பாராட்டப்படும் என்று கிண்டல் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஸ் ராஜா கூறும் போது, ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால் இந்தியாவில் நடத்தும் 50 ஓவர் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை (ஒருநாள் போட்டி) செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
- பாகிஸ்தானில் இருந்து போட்டி மாற்றப்பட்டால் கத்தாரில் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
பக்ரைன்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதுவரை 15 போட்டிகள் நடை பெற்றுள்ளன. இந்தியா அதிகபட்சமாக 7 முறையும், இலங்கை 6 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.
2016-ம் ஆண்டில் இருந்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி என மாறி மாறி ஆசிய கோப்பை நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடந்தது.
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை (ஒருநாள் போட்டி) செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய்ஷா அறிவித்து இருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் இன்று நடக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்தக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் ஆசிய கோப்பை போட்டி குறித்து முடிவு செய்யும்ம். பாகிஸ்தானில் போட்டி நடக்குமா? அல்லது பொதுவான இடத்துக்கு மாற்றப்படுமா? என்று தெரிய வரும்.
சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்திய கத்தார் ஆசிய கோப்பை போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தானில் இருந்து போட்டி மாற்றப்பட்டால் கத்தாரில் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
- இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டத்தின்போது இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
பஹ்ரைனில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் இடம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பஹ்ரைனில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறினால், அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று, பாகிஸ்தான் கிரிக்கட் வாரிய தலைவர் நஜம் சேதி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டங்கள் நடக்கும்போது, இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என ஜெய் ஷா கூறியிருந்தார்.
- ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது.
பஹ்ரைன்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் அல்லது அக்டோபரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.
இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய் ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகியவற்றில் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஆசிய கோப்பை போட்டி குறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது. கடந்த ஆசிய கோப்பை போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா பாகிஸ்தானுக்கு வராவிட்டால் உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
- ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம்.
சென்னை:
6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.
இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.
போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு நாம் செல்லாவிட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்படி நடப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆசிய கோப்பை தொடரை அங்கு நடத்தக்கூடாது என நாம் சொல்லும் போது அவர்களும் நமது இடத்துக்கு வரமாட்டோம் என்று சொல்வார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்.
ஆசிய கோப்பை இலங்கைக்கு மாற்றப்படலாம். இது 50 ஓவர் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னிலையாக இருக்கலாம். துபாயில் பல தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்துள்ளது. இதனால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கூறியது.
இவ்விவகாரம் தொடர்பாக நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தில் முடிவு எதுவும் செய்யப்படவில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.
ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி மோதும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த போட்டியையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இடம் மாற்றம் குறித்து அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என பிசிசிஐ தெரிவித்தது.
- நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
பாகிஸ்தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய தீர்மானித்திருந்த போது இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் அணியை மிரட்டினார் என ஷாஹித் அப்ரிடி சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆசிய நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டி இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெற வேண்டுமென விரும்புகிறது.
ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஷாஹித் அப்ரிடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சில வருடங்களுக்கு முன்பு இந்திய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியை இந்தியர் ஒருவர் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். ஆனாலும் நாங்கள் இந்தியா சென்று விளையாடினோம். மேலும், ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடிவு செய்தால், அவர்கள் மீது பாகிஸ்தான் மிகுந்த கவனம் செலுத்தும் என உறுதியளிக்கிறேன்.
நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இதற்கு முன், மும்பையைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் எங்களை மிரட்டினார். அதை எங்கள் அரசு பொறுப்பாக ஏற்று பாகிஸ்தான் அணி இந்தியா சென்றது. எனவே மிரட்டல்கள் எங்கள் உறவை சிதைக்கக்கூடாது.
இந்தியா ஆசிய கோப்பைக்கு வர சம்மதித்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இது போர்கள் மற்றும் சண்டைகளின் தலைமுறை அல்ல. உறவுகள் நன்றாக இருக்க வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம்.
நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது நினைவிருக்கிறது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள அழகான உறவு.
என அப்ரிடி தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும் ஆசிய கிரிக்கெட் தலைவருமான ஜெய்ஷா தெரிவித்தார்.
- இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
துபாய்:
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடர் ஒருநாள் போட்டி முறையில் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும் ஆசிய கிரிக்கெட் தலைவருமான ஜெய்ஷா தெரிவித்தார். ஆசிய கோப்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டியை நடத்தாவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. சில நாட்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே கூட்டம் நடந்தது. இதில் ஆசிய கோப்பை போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா மோதும் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தாமல் பொதுவான இடத்தில் நடத்துவதற்கான யோசனை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்தவும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, இங்கிலாந்து, வங்காள தேசம், ஓமன் ஆகியவற்றில் ஏதாவது நாட்டில் இந்தியா- மோதும் போட்டிகள் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. பொதுவான இடம் பற்றிய முடிவு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த ஆட்டமும் பொதுவான இடத்திலேயே நடத்தப்படும். இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் நடைபெற உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து, இந்தியா மோதும் போட்டிக்கான பொதுவான இடம் குறித்து தேர்ந்தெடுக்கப்படலாம்.
- ஆசிய கோப்பையை பொதுவான இடமான இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் தான் நடைபெறும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால் இலங்கையில் நடைபெறுவதை அந்த நாடு ஏற்றுக் கொள்ளவில்லை.
கராச்சி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தப் போட்டியை பாகிஸ்தானில் நடத்தினால் பங்கேற்க மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்தது.
இதை தொடர்ந்து இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இதைதொடர்ந்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர்.
ஆசிய கோப்பையை பொதுவான இடமான இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆசிய கோப்பையை இலங்கையில் நடத்துவது என்று ஆசிய கவுன்சில் முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியானது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் தான் நடைபெறும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால் இலங்கையில் நடைபெறுவதை அந்த நாடு ஏற்றுக் கொள்ளவில்லை.
இதை தொடர்ந்து ஆசிய கோப்பையை புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜிம் சேதி சந்தித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்.
- ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
- ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றனர்.
பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இதையடுத்து இந்தியாவுடனான போட்டிகளை பொதுவான இடத்திலும், மற்ற நாடுகளின் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும் பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்தது.
அதன்படி ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன. 4 லீக் போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது.
- இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பது பாகிஸ்தானுக்கு பலன் தராது.
- இலங்கையில் அதிக ஆட்டங்களும், பாகிஸ்தானில் குறைவான ஆட்டங்களும் நடப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல.
லாகூர்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தியின் பரிந்துரைப்படி இந்த போட்டி தற்போது இரு நாடுகளில் நடத்தப்படுகிறது.
ஆகஸ்டு 31-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடத்தப்படுகிறது.
இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ள ஜாகா அஷ்ரப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பது பாகிஸ்தானுக்கு பலன் தராது. எனக்கும் இது பிடிக்கவில்லை.
ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் பாகிஸ்தானிடம் இருப்பதால் போட்டி முழுவதையும் பாகிஸ்தானிலேயே நடத்தும் வகையில் இன்னும் அதிக முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். அதுவும் இலங்கையில் அதிக ஆட்டங்களும், பாகிஸ்தானில் குறைவான ஆட்டங்களும் நடப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல.
ஆனால் ஆசிய கோப்பை போட்டி குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டதால் இனி அதை பின்பற்றிதான் ஆக வேண்டும். அதற்கு இடையூறு செய்ய மாட்டேன்' என்றார்.
- கேப்டன் பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
- ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் வங்காளதேச அணி கேப்டன் யார் என்பது குறித்து பிசிபி இன்னும் வரை அறிவிக்கவில்லை. அந்த பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இது குறித்து பிசிபி தலைவர் நஸ்முல் கூறியதாவது:-
இன்னும் சில நாட்களில் அணியை அறிவிப்போம். கேப்டனையும் அறிவிப்போம் என்றார். மேலும் ஷகிப்பை ஒருநாள் கேப்டனாக தேர்ந்தெடுப்பது எளிதான முடிவு என்றும் ஷகிப்பின் இறுதி முடிவுக்காக பிசிபி காத்திருக்கும் என்றும் கூறினார்.