என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிமுத்தாறு அணை"

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே மலைகள் உள்ளது.
    • சபாநாயகர் அப்பாவு, "இதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும்" என கூறினார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசும்போது, "நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே மலைகள் உள்ளது. எனவே இங்கு சுரங்க பாதைகள் அமைத்து இரு அணைகளையும் ஒன்றாக ஆக்கினால் நெல்லை மாவட்ட மக்களுக்கு மேலும் பயன் உள்ளதாக இருக்கும்" என கோரிக்கை விடுத்தார்.

    அவருக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "இதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும்" என கூறினார்.

    உடனே நயினார் நாகேந்திரன் அதற்கு "நான் அனுமதி வாங்கி தருகிறேன்" என்று தெரிவித்தார்.

    • மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது.
    • கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மழை குறைந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணி முத்தாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. நேற்று மழை குறைந்த நிலையிலும் தொடர் நீர்வரத்தால் இன்றும் அணைகள் நீர்இருப்பு அதிகரித்துள்ளது.

    143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 91.70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 105 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 861 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பாபநாசத்தில் 80 அடியும், மணிமுத்தாறில் 102.05 அடியும், சேர்வலாறில் 67.39 அடியும் நீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மாநகரில் மழை எதுவும் பெய்யவில்லை. புறநகரில் களக்காடு, அம்பையில் பரவலாக மழை பெய்தது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 4 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகதியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கொடுமுடியாறு அணையில் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வானம் பார்த்த பூமியான சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகிரியில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் 3.50 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சி நிலவியது. ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதேநேரம் தூத்துக்குடி மாநகர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களாக பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 122 அடியை எட்டிய நிலையில் இன்று 3/4 அடி உயர்ந்து 122.70 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் அணை நீர்மட்டம் 123 அடியை எட்டிவிடும். 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 134.81 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 135.83 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 910 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை பகுதியில் 31 மில்லிமீட்டரும், பாபநாசம் அணை பகுதியில் 23 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது.

    மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. ஊத்து எஸ்டேட் பகுதியில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    காக்காச்சி பகுதியில் 19 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அங்கு தலா 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 5.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதி மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் தொடர்மழையால் அடவி நயினார் அணையை தவிர மற்ற அணைகள் நிரம்பி விட்டன.

    இதனால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு வானம் மேக மூட்டமாக காட்சியளிக்கிறது.

    சிற்றாறு கால்வாய் மூலமாக குற்றாலத்தில் இருந்து வரும் தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களை நிரப்பி வருகிறது.

    பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தில் குற்றாலம் நீர்வரத்து குளங்கள் நிரம்பி விட்ட நிலையில் தற்போது ஆலங்குளம், மாறாந்தை பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    சாத்தான்குளம், கயத்தாறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. குலசேக ரன்பட்டினத்தில் 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னை-குருவாயூர், திருச்சி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கோவை ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருதால் ஒருசில இடங்களில் ரெயில்களை இயக்க முடியாத அளவிற்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து ரெயில்கள் சென்னைக்கு இயக்க முடியவில்லை.

    இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு மேல் ரெயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    எழும்பூரில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு கொல்லம் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 3 மணிக்கு நெல்லைக்கு புறப்படக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.

    அதே போல மாலை 4.05 மணிக்கு புறப்படக்கூடிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்தாகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து எழும்பூருக்கு வரவில்லை. அதனால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 21 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    பாபநாசத்தில் அதிகபட்சமாக 58 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 38 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 24 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 26.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாநகர் பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அங்கு 28 மில்லிமீட்டர் மழை பதிவானது. பாளையில் 2 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் லேசான சாரல் அடித்தது. களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கரைகளில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், ராமநதியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறில் 1 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. இன்று காலை வரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாவூர்சத்திரம், சுரண்டை, வி.கே.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு இதமான காற்றும் வீசியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து சில இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. களக்காடு பகுதியில் 2.8 மில்லிமீட்டரும், கன்னடியன் பகுதியில் 1.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணை பகுதிகளிலும் நேற்று மாலையில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று பகலில் சுமார் 350 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் இன்று காலை 2649 கனஅடி நீர் வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 102 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று காலை 104.10 அடியாக இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 113 அடியாக இருந்த நிலையில் நீர் வரத்து அதிகரிப்பால் இன்று ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 120.44 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர் மட்டம் 2 அடி அதிகரித்து 40 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு இதமான காற்றும் வீசியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடையம் அருகே உள்ள கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராமநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 11 மில்லிமீட்டரும், கடனா அணையில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேலும் அடவிநயினார் அணை பகுதியில் அதிகபட்சமாக 37 மில்லிமீட்டரும், குண்டாறில் 31 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 76 அடியை எட்டியுள்ளது. கடனா அணை நீர்மட்டம் 55.30 அடியாகவும், கருப்பாநதி அணை 47.73 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணையில் 95.75 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி நகர் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே நகர் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, ஆய்க்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடியில் நேற்று மாநகர பகுதியில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ததோடு ஆலங்கட்டி மழையும் பெய்தது. மாநகர பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. கீழ அரசடி பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது.
    • விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சேர்வலாறு, பாபநாசம் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் திடீர் மழையால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,102 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1004 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேர்வலாறு அணை பகுதியில் 7 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. பாபநாசத்தில் 108.70 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் நேற்று 114 அடி நீர் இருந்த நிலையில், இன்று சுமார் 2 அடி வரை அதிகரித்து 116.89 அடி நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது.

    50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 15.50 அடியாகவும், கொடுமுடியாறு அணையில் 28 அடியும், நம்பியாறு அணை நீர்மட்டம் 13 அடியாகவும் இருக்கிறது. அணை பகுதிகளில் இந்த ஆண்டு பரவலாக பெய்த மழை காரணமாக நீர் இருப்பு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனால் நெல் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலையில் இருந்தே நகர் பகுதி மற்றும் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் வானில் கருமேகம் திரண்டு காணப்பட்டது. தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. குறிப்பாக செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அங்கு 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தென்காசி நகர் பகுதி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, கடையம், சிவகிரி, கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதோடு, இதமான காற்றும் வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக குண்டாறு அணை பகுதியில் நேற்று அதிகாலையில் தொடங்கி மதியம் வரையிலும் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 41 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    குண்டாறு அணை ஏற்கனவே மாதக்கணக்கில் நிரம்பி வழிவதால், அணைக்கு வரும் 48 கனஅடி நீரும் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது. அந்த அணையில் 60 அடி நீர் இருப்பு உள்ளது. 84 அடி கொண்டராமநதி அணை நீர்மட்டம் 65 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினாரில் 109.50 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 36 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    குற்றாலம் மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளம் நீடிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு அவ்வப்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது தடை விதிக்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மெயினருவி, ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகள், மலைப்பிரதேசங்கள், புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

    புறநகரில் சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதமான காற்றும் வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. மாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக களக்காடு மலைப்பகுதியில் பெய்த மழையால் தலையணையில் நீர் வரத்து அதிகரித்தது. அங்கு அதிகபட்சமாக 27.40 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நேற்று ஆயுதபூஜை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகாமாக இருந்தது. மாநகரில் மழை பெய்யவில்லை. எனினும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

    அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேர்வலாறில் 27 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 14 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் அங்கு 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு நேற்று முன்தினம் 430 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மலைப்பகுதியில் நேற்று பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை வினாடிக்கு 552 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 94.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 106.33 அடி நீர் இருப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதி யில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கனமழை பெய்தது. நாலுமுக்கில் 29 மில்லிமீட்டரும், ஊத்தில் 26 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. காக்காசியில் 19 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அங்கு 31 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 55.50 அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 46 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 49.87 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அங்கு முகாமிட்டு குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடம்பூரில் அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறில் 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. சூரன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.

    • மாநகரில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
    • தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு 1,504 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,375 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை நீர்மட்டம் 84.25 அடி நீர் இருப்பு உள்ளது. இன்று காலை நிலவரப்படி அந்த அணை பகுதியில் 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மற்றொரு பிரதான அணையான 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு நேற்று காலை வரை குறைவான நீர்வரத்து இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1,375 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 67 அடியை எட்டியுள்ளது. அங்கு 30.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 82.47 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 17 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகுதியில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கன்னடியன் கால்வாய் பகுதியில் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாநகரில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    தொடர்ந்து காலையில் சாரல் மழை பரவலாக பெய்தது. அதன்பின்னர் வெயில் அடிப்பதும், மழை சாரலாக பெய்வதுமாக இருந்து வந்தது. பாளையில் 11.4 மில்லிமீட்டரும், நெல்லையில் 7.4 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தை பொறுத்தவரை பரவலாக கனமழை பெய்தது.

    குறிப்பாக அம்பை, நாங்குநேரி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. களக்காட்டில் 15 மில்லி மீடடரும், அம்பையில் 26 மில்லிமீட்டரும், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டியில் தலா 16 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தென்காசியில் 7 மில்லிமீட்டரும், செங்கோட்டையில் 9 மில்லி மீட்டரும், ஆய்குடி யில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கடனா அணை பகுதியில் 23 மில்லிமீட்டரும், ராமநதியில் 15 மில்லிமீட்டரும், குண்டாறில் 12 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து புனித நீராடியதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்தது. இன்று காலையில் சில இடங்களில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் வெயிலும் அடித்தது. திருச்செந்தூரில் 39 மில்லிமீட்டரும், ஒட்டப்பிடாரம், காயல்பட்டினத்தில் தலா 36 மில்லிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.
    • பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த பரவலான மழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 23 அடி உயர்ந்தது. நேற்று பகலில் இருந்து மழை படிப்படியாக குறைந்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்தது.

    பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மழை குறைந்துவிட்டதால் அணைக்கு வரும் நீரின் அளவு 721 கனஅடியாக குறைந்து விட்டது. எனினும் நீர் வரத்தால் அந்த அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 ½ அடி உயர்ந்து 87 அடியை கடந்துள்ளது.

    இதேபோல் மணிமுத்தாறு அணை பகுதியில் நேற்று காலை வினாடிக்கு 1,797 கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 545 கனஅடியாக குறைந்தது. அந்த அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 104 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மாநகர், புறநகர், அணைபகுதிகள் என எங்கும் மழை பெய்யவில்லை. மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் லேசான சாரல் பெய்தது.

    இந்த மழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் 1 வாரத்திற்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    கடந்த 4 நாட்களாக மழை பெய்ததால் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து நாசமாகிவிட்டது.

    தென்காசி மாவட்டத்திலும் சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று மலைப்பகுதியில் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்தது. தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    அணைகளை பொறுத்தவரை தொடர் கனமழையால் கடனா, ராமநதி அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முதல் மழை குறைந்ததன் காரணமாக நீர்வரத்து சற்று குறைந்தது. நேற்று 61 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 65 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 52 அடியாக உள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் மழை இல்லாததால் குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது.
    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.

    நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் வறண்டுவிட்டன. மாவட்டத்தில் உள்ள சுமார் 1205 குளங்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் குளங்கள் முற்றிலுமாக வறண்டு மண் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. மேலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை காப்பாற்றுவதற்காக பயிரிட்டுள்ள பயிர்களும் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்பட 6 அணைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசத்தில் இன்று காலை நிலவரப்படி 92.90 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு தற்போது வினாடிக்கு 336 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    நெற்பயிர் சாகுபடி பணிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1104.75 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், கடுமையான வெயில் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    கடந்த 20-ந்தேதி அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்த நிலையில் கடந்த 7 நாட்களில் 7 அடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தினமும் சராசரியாக 1 அடி நீர் இருப்பு குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    கடந்த 21-ந்தேதி சேர்வலாறு அணை நீர்மட்டம் 102.30 அடியாக இருந்த நிலையில் தற்போது 95.40 அடியாக குறைந்துள்ளது. இதேபோல் மாவட்டத்தில் அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மழை இல்லாததால் குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துவிட்டது. மாவட்டத்தில் உள்ள ராமநதி, கடனா, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த அணைகளை நம்பி உள்ள விவசாய நிலங்களில் தற்போது பெரும்பாலான இடங்களில் நெல் அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டது. எனினும் நீர்மட்டம் குறைந்து வருவதால் குளங்கள் வறண்டு வருகின்றன. குண்டாறு அணை நீர்மட்டம் 18 அடியாக குறைந்துள்ளது.

    அணைகளில் நீர் இருப்பு குறைவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

    • தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று 78 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 86 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    பிரதான அணையான 142 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 17 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணையில் 5.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தலா 2 அடி உயர்ந்து வருகிறது. நேற்று 66.65 அடியாக இருந்த நிலையில் இன்றும் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து 68.85 அடியாக உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டமும் 3 அடி உயர்ந்து 84.75 அடியாக உள்ளது.

    மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டியில் 5 மில்லிமீட்டரும், அம்பை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய இடங்களில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 3-வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    அருவிகளில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதால் குளிக்க தடைவிதிப்பதும், அனுமதிப்பதுமாக உள்ளது. இன்று காலை அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் குளித்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே மற்ற அருவிகளை போல பழைய குற்றாலம் அருவியிலும் 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி மற்றும் அடவிநயினார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

    அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று 78 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 86 அடியாக உள்ளது. ராமநதி மற்றும் கடனா அணைகளின் நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 42.65 அடியாக உள்ளது.

    அணையில் இன்று காலை நிலவரப்படி 54 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 25 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    ×