என் மலர்
நீங்கள் தேடியது "மெஞ்ஞானபுரம்"
- தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.
- கைதானவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்த தேரிப்பனை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி வசந்தா (வயது 70).
இவர்களது மகள் சபீதா, மகன் வினோத் ஆகியோர் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மற்றொரு மகனான விக்ராந்த் சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
விக்ராந்த் ஆனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயபால் இறந்துவிட்டதால் வசந்தா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று சபீதா தனது தாயாருக்கு போன் செய்தார். வெகுநேரமாகியும் வசந்தா அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அவர் தனது தம்பி விக்ராந்துக்கு போன் செய்து விபரத்தை கூறினார்.
உடனே விக்ராந்த் தேரிப்பனையில் உள்ள தனது உறவினர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பினார். அவர் வசந்தா வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.
அதே நேரம் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அதன்மூலம் வீட்டுக்கு சென்றபோது வசந்தா இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வசந்தா அணிந்திருந்த நகைகள் அறுத்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மகன் விக்ராந்த் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பி.க்கள் சுகுமார், மகேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் செல்வரதி (24) என்பவர் நேற்று வசந்தா வீடு அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடியதும், இதனால் அவரை வசந்தா கண்டித்ததும் தெரியவந்தது.
எனவே இந்த விரோதத்தில் செல்வரதி வசந்தாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர். இதைத்தொடர்ந்து செல்வரதியை போலீசார் தேடியபோது அவர் கணவர் ஊரான மீரான்குளத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் செல்வரதியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் வசந்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு வசந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி வந்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் செல்வரதியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே நகைக்காக சிறுவனை கடத்தி கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக ஒரு வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலையில் செல்வரதியுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்டீபன் ராஜ் சவாரிக்காக பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடிக்கு சென்றார்.
- திருச்செந்தூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஸ்டீபன் ராஜை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திருச்செந்தூர்:
உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன் விளையை ேசர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( வயது 40). இவர் பரமன்குறிச்சியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
நேற்று மாலை இவர் சவாரிக்காக பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடிக்கு சென்றார். தண்டுபத்து பகுதியில் சென்றபோது நாய் ஒன்று குறுக்கே சாடியது. இதனால் ஸ்டீபன் ராஜ் திடீரென பிரேக் போட்டதும் எதிர் பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஸ்டீபன் ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருச்செந்தூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆண்டு விழாவிற்கு சங்க தலைவர் ராஜபிரபு தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் சங்க புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் ராஜபிரபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் நாடார் முன்னிலை வகித்தார்.மெஞ்ஞானபுரம் வியா பாரிகள் சங்கசெயலாளர் செல்வின் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியன் வங்கி மேலாளர் குட்வின்ராய், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் காசிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் சங்க புதிய கட்டிடம் கட்டுவது எனவும், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தகுந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி கொடுத்தால் அங்கு செல்வார்கள்.அவ்வாறின்றி கடைகளை மாநகராட்சி அகற்றினால் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
பொருளாளர் பெரிய சாமி நன்றி கூறினார். கூட்டத்தில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.