என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தின"

    • சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் சுதந்திர அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 11 முதல் 17 வரை சுதந்திர வாரமாக கொண்டாட தமிழகஉத்தரவிட்டு உள்ளது.
    • 5000 தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கிடம் இன்று வழங்கினார்கள்.

    நாமக்கல்:

    வீடுகளில் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் சுதந்திர அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 11 முதல் 17 வரை சுதந்திர வாரமாக கொண்டாட தமிழகஉத்தரவிட்டு உள்ளது.

    இதனையொட்டி நாளை முதல் 15-ந்ந்தேதி வரை 3 நாட்கள் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் குறைந்த விலையில் தரமான தேசிய கொடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    தனியார் கல்லூரிகள், அறக்கட்டளை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனிநபர்கள் மூலம் தேசியக்கொடிகள் பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியன் வங்கியின் உதவி பொது மேலாளர் சசிரேகா மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதிஷ்குமார் ஆகியோர் 5000 தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கிடம் இன்று வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் கலையரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள  ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் 60-வது ஜன்ம தின பூஜை ஆடி முதல் நாளான நேற்று நடைபெற்றது.
    • ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள  ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதா ஜியின் 60-வது ஜன்ம தின பூஜை ஆடி முதல் நாளான நேற்று நடைபெற்றது.

    புனித நீருடன் கலசங்கள் வைக்கப்பட்டு யாக வேள்விகளு டன் பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் உடன் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதாஜிக்கு பாத பூஜை உடன் கலச அபிஷேகம் செய்தனர். மதியம் மகேஸ்வர பூஜையுடன் விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதாஜி அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இந்த நிகழ்வில் பல நகரங்களில் இருந்து வந்திருந்த சாதுக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் அருளாசி வழங்கினார்கள்.

    ×