என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தக வாசிப்பு"

    • புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்குகிறது என்று கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.
    • ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    மதுரை

    மதுரை பரவையில் உள்ள தனியார் அறிவியல் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை கலெக்டர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு இளைஞர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களது தனித்திறனை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இளைஞர்க ளின் ஆற்றல் மிக முக்கியமானதாகும்.

    அந்த வகையில் இளைஞர்களின் படைப்பாற்றலை மெருகேற்றிடவும், தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை அதிகரித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி உள்ளது.

    குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

    புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்கு கிறது. சமூக பொறுப்புணர்வு கொண்ட நபராக மேம் படுத்துகிறது. அதேபோல் இளைஞர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் பல்வேறு ஆளுமைகள், எழுத்தாளர்களுடன் நேரடியாக கலந்து ரையாடி தங்களது படைப்பாற்றலை மேம்படுத்திட வாய்ப்பளித்திடும் வகையில் இளைஞர்கள் இலக்கிய பயிற்சிப்பட்டறை, இலக்கியத்திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில், சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது.
    • புத்தக கண்காட்சியானது முன்கூட்டியே வரும் டிசம்பர் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

    சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.

    தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

    1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

    அதன்படி, புத்தக கண்காட்சியானது முன்கூட்டியே வரும் டிசம்பர் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில், சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது.

    இதனை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    அதன்படி நந்தனம் ஆவின் பாலகம் அருகில் இருந்து ஒய்எம்சிஏ மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

    • ஒன்றை பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல.
    • சிந்திக்க துவங்கியதால் தான் இறைவன் உருவெடுத்தார்.

    திருப்பூர்:

    ரவுத்திரம் வாசகர் வட்டம் சார்பில், வாழ்வே ஒரு மந்திரம் நூல் அறிமுக விழா திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. இதில் இறைவன் இருப்பது எங்கே? எனும் தலைப்பில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசிய தாவது:-

    ஒன்றை பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல. அவற்றை வேண்டுபவர் வேண்டுமென்ற நேரத்தில் திருப்பி தருவது தான் வாழ்க்கை. இரு கலைகளையும், நிலைகளையும் கொண்டது வாழ்க்கை. நாம் பிறந்தது முதல் பெற்றோரிடம் பெறுகிறோம். அவர்கள் வாழ கடைசியாக நம்மால் இயன்றதை தருகிறோம். தரவேண்டும். அதுவே அறம்.சாகும் வரை ஒருவர் பெற்றுக்கொண்டு மட்டுமே இருந்தால் அவர் வாழ்வதில் அர்த்தமில்லை. எண்ணம், செயலில் அவரவர் பாதையில் பயணிக்க வேண்டும். சாதி, மதம், இனத்தால் நம் பிரிந்து நிற்கிறோம். ஆனால்தமிழ் மொழியால் நாம் இணைந்திருக்கிறோம். அனைவரும் மனிதர் என்பதை உணர்ந்திருக்கிறோம். 700 கோடி மக்களை ஒன்றாக இணைப்பது மொழி.மதத்துக்கும், ஆன்மிகத்துக்கும் உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ள வேண்டும். மதம் மனிதனை பிரிக்கும். ஆன்மிகம் அரவணைக்கும். நம் அறிவை வளர்க்க, புத்தக வாசிப்பும், தெரிந்து கொள்ளும் ஆர்வமும் வேண்டும்.

    உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் நம்மை காண்பதும், நம்மில் காண்பதும் தான் ஆன்மிகம். ஆதி மனிதனுக்கு வியப்பும், அச்சமும் ஏற்பட்ட விடை காண முடியாத சில கேள்விகள் தோன்றின. அப்போது, நம்மை மீறியும் ஒரு சக்தி இருக்கிறது என்பதை அவனே எண்ணத்தோன்றினான். அதுவே வேதங்களாகவும், உபநிடதங்களாகவும் மாறி கடவுள் உருவாக அடித்தளமாக அமைந்தது. சிந்திக்க துவங்கியதால் தான் இறைவன் உருவெடுத்தார்.இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

    ×