என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்தனூர் அணை"

    • 9 ஷட்டர்கள் வழியாக பாய்கிறது
    • ஆற்று வெள்ளத்தில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    தற்போது அணையில் 116.30 அடி அளவிற்கு அதாவது 6 ஆயிரத்து 722 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழையாலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 240 கன அடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது.

    அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்பகுதியில் உள்ள 9 ஷட்டர்கள் வழியாக 3,440 கன அடி தண் ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் சீறிப்பாய்ந்து விழுவதை சுற்றுலா பயணிகள் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    இதனால் தென்பென்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டி தீர்த்ததால், தாழ்வானப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    ஜவ்வாது மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குப்பநத்தம் அணைக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    அதிகாலை 2 மணியளவில் விநாடிக்கு வந்த 1,500 கனஅடி தண்ணீரும், செய்யாற்றில் வெளியேற்றப்பட்டன. இதனால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உள்ளது. அணைக்கு 5,930 கனஅடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 5,150 கனஅடியும், கால்வாயில் விநாடிக்கு 200 கனஅடியும் என மொத்தம் விநாடிக்கு 5,350 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

    தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது. அணையில் 52.726 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    அணையில் இருந்து விநாடிக்கு 66 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 157 ஏரிகள் நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பின.

    நேற்று ஒரே நாளில் மேலும் 17 ஏரிகள் நிரம்பியுள்ளன. மொத்தம் 174 ஏரிகள், 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது.

    • சாத்தனூர் அணையை தூர்வார நிதி ஒதுக்கப்படும்
    • பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது சாத்தனூா் அணையின் நீர்மட்டம் 118.55 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிரவலப்படி அணையின் தற்போதைய கொள்ளளவு 7220 மில்லியன் கன அடியாக உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் சாத்தனூா் அணையில் இருந்து மாா்ச் முதல் வாரத்தில் விவசாய பாசனத்திற்க்காக இடது மற்றும் வலது புற கால்வாய்களின் வழியே தண்ணீா் திறந்து விடப்படும்.அதன் படி விவசாய பாசனத்திற்கு சாத்தனூா் அணையில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் இடது மற்றும் அது பல கால்வாய்களில் தண்ணீரை திறந்து வைத்தார். அவர் கூறுகையில்:-

    இந்த நிதியாண்டில் சாத்தனூர் அணையை தூர்வார பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.

    கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

    விவசாய பாசனத்திற்க்காக தொடந்து 90 நாட்கள் இடது புற கால்வாயில் 350 கன அடி தண்ணீரும் மற்றும் வலது புற கால்வாயில் 220 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்தனர்.

    • வினாடிக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
    • ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 210 கனஅடி நீர்வரத்து உள்ளது.

    தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதை அடுத்து தென்பெண்ணை யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 108.20 அடியாக உள்ளது.

    அணைக்கு விநாடிக்கு 210 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 7,321 மில்லியன் கனஅடி உள்ள அணையின் கொள்ளளவு மழையின் காரணமாக தற்போது 5,099 அடியாக உள்ளது.

    தென்பெண்ணை யாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள ஆற்றங்கரையோர கிராம மக்கள், எச்சரிக்கை யுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    தென்பெண்ணை யாற்றில் நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றைக் கடந்து அழைத்து செல்லவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • தாசில்தார்களுக்கு நீர்வளத் துறையினர் கடிதம்

    திருவண்ணாமலை:

    தென்பெண்ணையாறு நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று பிற்பகல் பிற்பகல் 2 மணி நிலவரப்படி விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

    இதனால்,119 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 114 அடியை எட்டியது. அணையில் 6200 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.இதனால், பெண்ணையாற்று கரையோரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாசில்தார்களுக்கு நீர்வளத் துறையினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியுள்ளது. 119 அடி உயரத்தில் 5 அடி மட்டும் குறைவாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து ஏற்படும்போது, முழுமையாக திறந்துவிடப்படும்.

    எனவே, சேதம் மற்றும் இழப்பு ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சாத்தனூர் அணை அதிகாரி தெரிவித்துள்ளதாவது:-

    அணைக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்வரத்து திடீரென அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனால், அணை யின் நீர்மட்டம் கிடுகிடுவென 117 அடியை எட்டிவிடும்.

    அப்போது நீர்வரத்து தொடர்ந்தால், 11 கண் மதகுகள் வழியாக, தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். எனவே, 114 அடியை எட்டியுள்ள நிலையில், கரையோர கிராமங்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ள அபாய எச்சரிக்கை

    தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

    மேலும், தென்பெண்ணை ஆற்றில் கால்நடைகளை குளிக்க வைக்கவும், மற்றும் துணி களை துவைக்கவும் கூடாது. இதேபோல், ஆற்றை கடந்து செல்லும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கும்.

    திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    4 மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

    • சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு
    • ஆற்றைக் கடக்க வேண்டாம் என அறிவுரை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அதன் மொத்த கொள்ளளவான 119 அடியில் 116.55 அடியை எட்டியுள்ளது.

    இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக நேற்றும் வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.தற்போது மழை காரணமாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து 1,250 கனஅடியாக உள்ளது.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-

    கடந்த 1958-ம் ஆண்டு கட்டப்பட்ட அணையின் நீர்மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக 119 அடியை எட்டியது.

    கடந்தாண்டு செய்யப்பட்ட அணையின் மறு சீரமைப்பிற்குப் பிறகு இது சாத்தியமாகியுள்ளது.முன்னதாக 99 அடி வரை மட்டுமே நீரை சேமிக்க முடியும்.

    தற்போது அணையின் கொள்ளளவான 7.32 டி.எம்.சி. யில் நேற்று 7.22 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது.

    இந்த அணையில் இருந்து 88 குளங்களுக்கு நீர் அளிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படும் வரை சாத்தனூர் அணையில் இருந்து ஆற்றில் நீர் தொடர்ந்து வெளி யேற்றப்படும்.

    இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 36 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றைக் கடக்க வேண்டாம் என அப்பகுதி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.
    • மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகளை சாத்தனூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.

    சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.

    அணையில் இருந்து இன்று காலை 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 4 மாவட்டங்களின் அணையின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.

    இதனால் அணையில் இருந்து சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது.
    • திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    வேங்கிகால்:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது. இன்று காலை சாத்தனூர் அணைக்கு 36 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் பரலான மழை பெய்தது.

    திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது.

    • சாத்தனூர் அணை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.
    • அரசின் துரித நடவடிக்கைகளால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சென்னை:

    சாத்தனூர் அணை நிலை குறித்து உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    சாத்தனூர் அணை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. முன்னறிவிப்பின்றி 1.68 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதாக கூறுவது பொய். அரசின் துரித நடவடிக்கைகளால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சிலர் மனசாட்சியைத் துறந்துவிட்டு புரட்டுகளை பரப்பி வருகின்றனர்.

    நீர் வரத்தை முன்கூட்டியே கணித்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

    • சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.
    • புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

    புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    புயலின் தாக்கத்தை வானிலை மையமே கணிக்க முடியாமல்தான் இருந்துள்ளது.

    சென்னையில் கனமழை பெய்த நிலையில், 12 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    சென்னையில் கடந்த காலங்களில் 13 செ.மீ மழைக்கே 3 நாட்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில், தற்போது மழை பெய்த 12 மணி நேரங்களில் இயல்பு நிலைக்குச் சென்னை திரும்பியுள்ளது.

    இதற்கு முதலமைச்சரின் போர்க்கால மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.

    சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முன் 5 முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. படிப்படியாகத்தான் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    உரிய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதால்தான் இன்று உயிர்ச்சேதங்கள் இல்லை

    தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல்வேறு உயிர்கள்

    எடப்பாடி பழனிசாமி வாய்ச்சவடால் விடாமல், ஒன்றிய அரசிடம் இருந்து அரசு கேட்ட நிவாரணத்தை வாங்கித் தரட்டும்.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏற்பட்டுள்ள சேதங்கள் இரு நாட்களில் சரிசெய்யப்படும்.

    திருவண்ணாமலையில் வழக்கம்போல் கார்த்திகை மகா தீபத்திருவிழா நடைபெறும் என தெரிவித்தார்.

    • சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்திருந்தால், மக்கள் பாதிப்பை சந்தித்திருக்க மாட்டார்கள்.
    • செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். ஆனால் சாத்தனூர் என்பது மிகப் பெரிய அணை.

    சென்னை:

    சட்டசபையில் இன்று துணை பட்ஜெட் மீதான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி (அ.தி.மு.க.) பேசினார்.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை மையம் அறிவித்து இருந்தும் அதனை முறையாக மக்களிடம் கொண்டு சேர்த்து இருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

    உணவு-குடிநீர் கோரி மக்கள் போராட்டமும் நடந்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்தபோது குற்றம்சாட்டிய தி.மு.க., சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்திருந்தால், மக்கள் பாதிப்பை சந்தித்திருக்க மாட்டார்கள்.

    எனவே இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்:- 5 முறை எச்சரிக்கை கொடுத்த பிறகே சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டோம். ஒவ்வொரு முறை தண்ணீர் திறக்கும் போதும் லட்சகணக்கான மக்களுக்கு தகவல் தெரிவித்த பின்பு தண்ணீரை திறந்தோம்.

    முதலமைச்சர் இதனை கண்காணித்து கொண்டே இருந்தார். ஆனால் நீங்கள் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டது போல் நடைபெறவில்லை.

    எடப்பாடி பழனிசாமி:- சாத்தனூர் அணையில் நீங்கள் தண்ணீர் திறக்கும்போது அதிகாலை 2.45 மணிக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு கால் மணிநேரத்தில் சாத்தனூர் அணையை திறந்துவிட்டு இருக்கிறீர்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால்தான் பாதிப்பு என்று தவறான தகவல் தெரிவிக்கிறீர்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் உள்ளன. கனமழை காரணமாக அங்கிருந்து வரும் உபரி தண்ணீர் அடையாறு ஆற்றில் சென்றதால் தான் பாதிப்பு ஏற்பட்டது.

    அடையாறு ஆற்றில் 1 லட்சம் கனஅடி நீர் செல்லக்கூடிய அளவுக்கு வழிபாதை இருக்கிறது. கனமழை பெய்து கொண்டிருந்தால் என்ன செய்ய முடியும்?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:- செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதால்தான் பாதிப்பு என்று சொல்கிறோம். இந்திய கணக்காயர் அறிக்கையில் கூட செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்டதை குறிப்பிட்டுள்ளார்கள். அதனை விட என்ன சாட்சி வேண்டும்?

    எடப்பாடி பழனிசாமி:- செம்பரம்பாக்கம் ஏரியில் 29 ஆயிரம் கனஅடி தான் திறக்க முடியும். ஆனால் சாத்தனூர் என்பது மிகப் பெரிய அணை. அதனை சொல்லாமல் திறந்து விட்டீர்கள். செம்பரம்பாக்கம் ஏரி குடிநீருக்காக கட்டப்பட்ட ஏரி. அதில் 29 ஆயிரம் கனஅடி திறந்து விட்டபோது எப்படி பாதிப்பு ஏற்படும்? இதன் கீழே உள்ள 100 ஏரிகள் நிரம்பி உபரி தண்ணீரும், அடையாற்றுக்கு சென்றதால்தான் பாதிப்பு ஏற்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எவ்வளவு அடி என்பது பிரச்சனை இல்லை. திறப்பதற்கு யாரிடம் அனுமதி வாங்குவது என்பதுதான் பிரச்சனை. அதனால்தான் வேறு வழியின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டீர்கள். இதை நான் சொல்லவில்லை. உங்கள் ஆட்சியின்போது தாக்கல் செய்த ஆடிட் ரிபோர்ட் சொல்கிறது.

    இது மனித தவறின் காரணமாக ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. (அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் சவால்விட்டு பேசினார்கள்).

    அமைச்சர் தா.மோ.அன்பரசன்:- செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். 100 ஏரி எங்கே இருக்கிறது? நாங்கள் இந்த ஏரிக்கு அருகில்தான் வசிக்கிறோம். இந்த ஏரிக்கு ஆதனூரில் இருந்து தண்ணீர் வருகிறது. யாருக்கும் தெரியாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டீர்கள். அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது. 100 ஏரிகள் இருப்பதாக சொன்னீர்கள். செம்பரம்பாக்கம் ஏரியை பற்றி எங்களுக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் வந்து பார்த்தால் தானே உங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.

    ×