என் மலர்
நீங்கள் தேடியது "கள ஆய்வு"
- ரூ.133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விழுப்புரம்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு செய்து வருகிறார்.
இந்த ஆய்வின் போது முடிவுற்ற திட்டங்களையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களை விழுப்புரத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று மாலை திண்டிவனம் வந்தார். அங்கு அவருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சேகர், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்சியினர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வரவேற்றனர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் விழுப்புரம் வந்தார். 1987-ம் ஆண்டில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் போராட்டம் நடந்தது. குறிப்பாக 1987 செப்டம்பர் மாதத்தில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ரூ. 5.70 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இதன் அருகில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி முழுஉருவ சிலையுடன் ரூ. 4 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நூலகம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். ரூ. 133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விழாவுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவரிடம் மனுக்களை வழங்கினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகையையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் விழுப்புரம் டி.ஐ.ஜி. திஷாமிட்டல் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 20 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாற்றுக்கட்சியினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
- பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
கடலூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் வருகிறார்.
அந்த வகையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கடலூருக்கு வருகை தருகிறார்.
இதையொட்டி சென்னையில் இருந்து காலை 9.30 மணிக்கு காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 12.30 மணிக்கு புதுச்சேரிக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும், மாலை 4.30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் புறப்படுகிறார். பின்னர் மாலை 5.15 மணி அளவில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 44,689 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் வடலூர் வழியாக நெய்வேலி புறப்பட்டு செல்கிறார். அங்கு மாற்றுக்கட்சியினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.
இதையடுத்து நெய்வேலியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவில் தங்குகிறார். பின்னர் நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு நெய்வேலி விருந்தினர் மாளிகையில் இருந்து வேப்பூர் அருகே உள்ள திருப்பெயருக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 9.30 மணிக்கு நடக்கும் மாநில அளவிலான பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு வேப்பூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முன்னதாக புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லைகளில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் மேற்பார்வையில் கடலூர், நெய்வேலி, வேப்பூர் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே நேற்று மதியம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மித்தல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முதலமைச்சரின் வருகைக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அறிவுறுத்தினார்.
- வேளாண் துறையினர் விளக்கம் மற்றும் ஆய்வு நடத்துகின்றனர்.
- கூடுதல் மகசூல் பெறுதல், மானியம் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் காரிப் பருவ பயிராக நிலக்கடலை ஏறத்தாழ 6 ஆயிரம் ஹெக்டர், சோளப் பயிர் 5 ஆயிரம் எக்டர் என்ற அளவில் பயிரிடப்படுகிறது.திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி சுற்றுப்பகுதியில் மானாவாரி விவசாயிகள் இப்பயிர்களை பெருமளவு விதைக்கின்றனர். இதில் விளை நிலங்களின் பரப்பை அதிகரித்தல் மற்றும் கூடுதல் மகசூல் பெறும் முறை குறித்து வேளாண் துறையினர் விளக்கம் மற்றும் ஆய்வு நடத்துகின்றனர்.
இதில் புது ரகங்களை விதைப்பண்ணை அமைத்து சான்று விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் மற்றும் அலுவலர்கள் கள ஆய்வு செய்தனர்.அவ்வகையில் நெருப்பெரிச்சல் பகுதியில் நிலக்கடலை தரணி ஆதார நிலை விதைப் பண்ணை, செட்டிபாளையத்தில் சோளம் பயிருக்கான விதைப் பண்ணை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆய்வு செய்த அலுவலர்கள், கூடுதல் மகசூல் பெறுதல், மானியம் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.