என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி"

    • இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.
    • துண்டால் கழுத்தை நெரித்து கொலை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் என்ற சிவா (வயது41). பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரும் முத்துக்கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (43) என்பவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் நண்பர் கேட்டுக்கொண்டதால் பரமசிவம் மோகன்ராஜுக்கு தள்ளு வண்டியில் பிரியாணி கடை வைத்துக் கொடுத்துள்ளார். இவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிப்காட் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று பரமசிவன் வீட்டில் அனை வரும் வெளியூர் சென்றிருந்த தால் மாலை வரை இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், துண்டால் பரமசிவத்தின் கழுத்தை நெரித்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.

    இரவில் வீடு திரும்பிய பரமசிவத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் பரமசிவம் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அவரை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுதிர், சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர்.

    • நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில், நடத்தையில் சந்தேகம் அடைந்து, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    ராணிப்பேட்டை நவல்பூர் தியாகி மாணிக்க நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சுலைமான் (வயது 35). அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மும்தாஜ் (38). இவர்களுக்கு திருமணம் ஆகி சுமார் 17 ஆண்டுகள் ஆகிறது. 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் மனைவி மும்தாஜ் நடத்தையின் மீது சுலைமானுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து நேற்று இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுலைமான் ஷூ லேசால் மும்தாஜின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து மும்தாஜின் தம்பி ஆசிம் ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×