search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெட்பிலிக்ஸ்"

    • பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி.
    • ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி

    தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 2001-ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.

    இவையனைத்தும் எஸ்.எஸ்.ராஜமவுலியை சாதாரண இயக்குனராகவே அடையாளப்படுத்தியது. ஆனால், 2012-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நான் ஈ' திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

    இதன் வெற்றியைக் கணக்கில் வைத்த ராஜமவுலி இனிமேல் குறைந்த பட்ஜெட்டில் கமர்சியல் கதைகளை இயக்கவே கூடாது என்கிற முடிவில் 3 ஆண்டுகள் கடின உழைப்பால் 2015-ம் ஆண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்த பாகுபலி திரைப்படத்துடன் வந்தார். உலகளவிலும் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என வியக்கும் அளவுக்கு அதன் கதாபாத்திர வடிவமைப்புகளும் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் பேசப்பட்டன. இதன் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வெளியாகி உலகளவில் ரூ.1850 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ரூ.1350 கோடி வரை வசூலித்து ராஜமவுலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.

    இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்கிய பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதனை, ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். மேலும், இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.

    இந்த ஆவணப்படத்தில் ராஜமவுலியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும், திரைத்துறை வாழ்க்கை குறித்தும் பேச இருக்கிறது. பிரபல இயக்குனர்களான ஜேம்ஸ் காமரூன், ஜோ ரஸ்ஸோ மற்றும் கரன் ஜோஹர் இவரைப் பற்றி பேசியுள்ளனர்.

    ராஜமவுலியின் திரைத்துறை நண்பர்களான பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராணா தகுபதி மற்றும் ராம் சரண் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜமவுலி தற்பொழுது வெளியாகி கோடிகளை அள்ளும் கல்கி 2898 ஏ.டி திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

    மேலும் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு மாபெரும் படைப்பை அடுத்து இயக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
    • இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

    அமீர்கானின் மகன் ஜுனைத் கான் 'மகராஜ்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். யாஷ் ராஜ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

    சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியுள்ள இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்படத்திற்கு பஜ்ரங் தளம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜூன் 3 ஆம் தேதி படத்தின் தயாரிப்பாளர் யாஷ் ராஜ் மற்றும் ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் ஆகியவற்றிற்கு பஜ்ரங் தளம் கடிதம் எழுதியுள்ளது.

    அக்கடிதத்தில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், எனவே படத்தை ரிலீஸுக்கு முன்பு எங்களுக்கு காட்ட வேண்டும் என்று பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது.

    அதே நேரத்தில், பஜ்ரங் தளத்தின் தலைவர் கவுதம் ரவ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பையில் உள்ள யாஷ் ராஜ் அலுவலகம் முன் பஜ்ரங் தள உறுப்பினர்களுடன் போராட்டம் நடத்திய வீடியோவை பகிர்ந்துள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி.
    • இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது.

    ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் விஷ்வல்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத்.

    இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகியது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்த நெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. சீரிஸ் வெளியாகி மக்களிடையே நல்லம் வரவேற்பை பெற்றது. 

    சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது. 43 நாடுகளில் ஹீரமண்டி தொடர் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

    இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹீரமண்டி சீசன் -2 வை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளார். லாஹுரில் இருந்து வெளியேறிய பெண் திரைத்துறை உலகத்திற்கு வருகிறாள். லாஹூர் பிரிவினைக்கு பிறகு பஸாரில் உள்ள பெரும்பாலான பெண்கள் மும்பை மற்றும் கொல்கத்தா திரைத்துறைக்குதான் வந்தடந்தனர், இங்கு நவாபுகளுக்கான ஆடிய பெண்கள் திரைத்துறையில் தயாரிப்பாளர்களுக்காக ஆடினார்கள் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் அதை மையமாக வைத்து ஹீரமண்டி சீசன் 2 வை இயக்கவுள்ளதாக சஞ்சய் கூறியுள்ளார். இதனால் ஹீரமண்டி தொடரின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெப் சீரிஸ் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.
    • 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருக்கிறது.

    பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர், ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார் என்ற இணைய தொடர் மூலம் ஓ.டி.டி. தளத்திற்கு அறிமுகமானார். இவர் இயக்கத்தில் உருவான "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்" சீரிசில் சோனாக்ஷி சின்கா, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சீகல், ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக், அதித்தி ராவ் ஹைதாரி மற்றும் பலர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

    சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றிய கதையம்சம் கொண்ட தொடராக ஹீரமண்டி உருவாகி இருக்கிறது. விலை உயர்ந்த நகைகளில் துவங்கி, ஆடம்பர செட் என இந்த வெப் சீரிஸ் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.

     


    இந்த நிலையில், ஹீரமண்டி வெப் சீரிசில் பிரபலங்கள் வாங்கிய சம்பலம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ஹீரமண்டி வெப் சீரிசில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஹீரமண்டி வெப் சீரிஸ் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ரூ. 60 இல் இருந்து ரூ. 70 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து சோனாக்ஷி சின்காவுக்கு ரூ. 2 கோடியும், மனிஷா கொய்ராலா மற்றும் ரிச்சா சத்தா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடியும், அதித்தி ராவுக்கு ரூ. 1.5 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதே போன்று சஞ்சிதா ஷேக் ரூ. 40 லட்சமும், ஷார்மின் சீகல் ரூ. 30 லட்சமும், வாலி முகமது ரூ. 75 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'இடி மின்னல் காதல்' திரைப்படம். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
    • ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது டியர் திரைப்படம்.

    ஏப்ரல் 5 ஆம் தேதி பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் "தி ஃபேமிலி ஸ்டார்". இத்திரைப்படம் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

    மார்ச் 29 ஆம் தேதி மாலிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொனலகட்டா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்து வெளியாகியது 'டில்லு ஸ்கொயர்' திரைப்படம். படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாகத்தை போலவே இத்திரைப்படமும் வெற்றியடைந்தது. படம் இதுவரை 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

     

    பாஸ்கல் வெடிமுத்து இயக்கத்தில் திரவ் , எம்.எஸ் பாஸ்கர் மற்றும் இஸ்மத் பானு நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியான் திரைப்படம் 'வெப்பம் குளிர் மழை'. கிராமத்து பின்னணியில் ஒரு குழந்தையின்மை தம்பதிகள் படும் கஷ்டத்தை கூறும் கதையாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி, பாவ்யா, யாஸ்மின் பொன்னப்பா, ராதா ரவி மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகியது 'இடி மின்னல் காதல்' திரைப்படம். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகியது டியர் திரைப்படம். குறட்டை விடும் மனைவியும் அதனால்  கஷ்டப்படும் கணவனின் பற்றிய கதையாகும். வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
    • பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி

    ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் கண்ணோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத். இவர் இயக்கும் எல்லாப்படங்களிலும் ஒரு பிரமாண்ட நடனப் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.

    இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

    ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை பயணத்தை மிகவும் உணர்ச்சிகரமாக எடுத்து இருப்பார். இத்திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இவரே இசையமைக்கவும் செய்து இருந்தார்.

    அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் மே 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

    சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
    • இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இதுவே மிக அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது என சொல்லப்படுகிறது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை விட இரண்டு மடங்கு தொகைக்கு 'அமரன்' விற்பனையாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது

    1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓடிடி தளங்களில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
    • புதுப்படங்கள் கூட தற்போது நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

    கொரோனா லாக்டவுன் சமயத்தில் அசுர வளர்ச்சி கண்ட ஒரே பிசினஸ் என்றால் அது ஓடிடி தளங்கள் மட்டும் தான். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு பொழுதைக்கழிக்க பெரிதும் உதவியாக இருந்தன இந்த ஓடிடி தளங்கள். தற்போது புதுப்படங்கள் கூட நேரடியாக இந்த ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

    ஓடிடி தளங்களில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்களும் இதில் இருப்பதனால் மக்கள் விரும்பி பார்க்கும் தளமாகவும் நெட்பிலிக்ஸ் இருந்து வருகிறது. இருப்பினும் அந்நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


    பயனர்கள் தங்களின் பாஸ்வோர்டை பிறருக்கு பகிர்ந்து உதவ முடியாத படி பாதுகாப்பு அம்சத்தை அந்நிறுவனம் அதிகரித்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அடுத்த காலாண்டில் இதனை சரிசெய்ய மைரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை நெட்பிலிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அது அந்நிறுவனத்துக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    ×