என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குன்னூர்-"
- அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.
- தடுப்புச் சுவரில் மோதி அதிர்ஷ்டவசமாக நின்றதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது
ஊட்டி,
கும்பகோணத்தில் இருந்து 2 சிறுவா்கள் உட்பட 5 போ், காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அதன்பிறகு அவர்கள் மீண்டும் கும்பகோணம் திரும்பிக் கொண்டு இருந்தனா். குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, 10-வது கொண்டை ஊசி வளைவில் கார் வந்தது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் இருந்த 5 போ் படுகாயம் அடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 5 பேரையும் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஊட்டியில் இருந்த திரும்பிய காரில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் அந்த வாகனம் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானது. அப்போது தடுப்புச் சுவரில் மோதி அதிர்ஷ்டவசமாக நின்றதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது என்பது தெரியவந்து உள்ளது.
- சப்-கலெக்டர் தகவல்
- அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .
ஊட்டி
குன்னூரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம் தனியார் கல்லூரியில் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும், உடனடியாக மின்சாரத் துறை, மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் குழுக்கள் அமைத்து ஏதாவது சம்பவங்கள் நடந்ததால் எவ்வாறு தெரிவிப்பது என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இது குறித்து சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி கூறியதாவது:-
குன்னூரில் 15 இடங்கள் மற்றும் கோத்தகிரியில் 25 இடங்களில் அபாயகரமான இடங்களாக கண்டு அறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக குன்னூர் எம்.ஜி.ஆர்.நகர், கன்னிமாரியம்மன் கோவில், பர்லியார் மற்றும் கோத்தகிரி பகுதியில் உள்ள கட்டபெட்டு பாரதிநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகள் அபாயகரமானது.
மேலும் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வடக்கிழக்கு பருவ மழை சமயத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனை கண்காணிக்க குன்னுார் பகுதியில் 750 நபர்களையும், கோத்தகிரி பகுதியில் 713 நபர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் 1077 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் குன்னூர் வட்டாச்சியர் சிவக்குமார், கோத்தகிரி வட்டாச்சியர் காயத்திரி, அரசு அதிகாரிகள், பொது நல அமைப்புகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்