என் மலர்
நீங்கள் தேடியது "காட்டெருமை புகுவதை அறியும் கருவி"
- கொடைக்கானலில் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் தற்போது புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
- காட்டெருமைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுவதை கண்டறிய உதவும் நவீன கருவியை கண்டறிந்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் தற்போது புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
அதில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுவதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையில் நவீன கருவியை கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து வீடுகள் மற்றும் தெருக்களில் வைக்கப்படும் குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறையும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையிலும் மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றையும் கண்டுபிடித்து மாணவிகள் அசத்தியுள்ளனர்.
இந்த செயலி மூலம் தனது பாதுகாவலருக்கு தான் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் அளிக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இருந்து தைவான் நாட்டிற்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் 4 மாதங்கள் 2 மாணவிகள் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளதாகவும்,
கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பள்ளி படிப்பை முடித்த மாணவிகள் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இணையலாம் எனவும் அவர்களுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழகத் துணை வேந்தர் வைதேகி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.