என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயில்களில்"

    • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூரில் வல்லவ விநாயகர் கோவிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா காலபைரவருக்கு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்விகளுடன் பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டு கலசாபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மகா காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பஞ்ச கற்பூர தீபாராதனை சமர்ப்பிக்கப்பட்டது. அதேபோல் நஞ்சை இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பாண்டமங்கலம் பழைய காசி விஸ்வநாதர் கோவில் பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள சிவன் கோவில், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர்பாளையத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் ஆடிமாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×