என் மலர்
நீங்கள் தேடியது "பணம் வைத்து"
- 8 பேர் கொண்ட கும்பல் சீட்டு வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
தாளவாடி சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி தலைமையிலான போலீசார் தாளவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தாளவாடி அடுத்த கெட்டவாடி கிரிஜம்மா தோப்பு அருகே உள்ள சமுதாய கூட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் சீட்டு வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த விஷ்கண்டா (32), சதீஷ் (23), சிவராஜ் (28), ராஜேஷ் (38), கோபி (57), கணேசா (33), மகேஷ் (31), மாதேவப்பா (63) ஆகியோர் என தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ரூ.24 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
- ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள சவண்டப்பூர், ஆண்டிகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35), முருகன் (28), சி.ஆறுமுகம் (56), சண்முகம் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் 52 மற்றும் பணம் ரூ. 570 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
- தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
ஈரோடு:
தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தாளவாடி அடுத்த சீமாச்சிகளி என்ற இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த நஞ்சைய்யா (60). சிதம்ஆலப்பா (50), கல்வீரப்பா (52), மாதேஷ் (37) ஆகியோர் என்பது தெரிவந்தது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூ. 7000, சீட்டு கட்டு, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி திரு.வி.க. தெருவில் உள்ள பெருமாள் கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக சிவகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனா்.
இதில் அவர்கள் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த கார்த்தி (38), பாரதி தெருவை சேர்ந்த வாசுதேவன் (49), விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோ (49), லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சுகராஜ் (37), காந்திஜி தெருவை சேர்ந்த அருணாச்சலம் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டு, ரூ.2,480 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
- 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
- போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மணல் மேடு பகுதியில் சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்த 3 பேர் தப்பியோட முயன்றனர்.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (28), காசிபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்த ராமலிங்கம் (56) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் 3 பேரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், பணம் ரூ.130 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- காந்தி நகரில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
- காந்தி நகரில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
ஈரோடு,
சித்தோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சித்தோடு அடுத்த செங்குந்தபுரம் காந்தி நகரில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். சித்தோடு போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (68), கோவிந்தராஜ் (60), ரஞ்சித் குமார்(33), கோவிந்தன்(40), அபிமன்னன்(34), மணிகண்டன்(32), மூர்த்தி (50), குப்புசாமி (53), கார்த்தி (30) ஆகிய 9 பேர் என தெரிய வந்தது
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டு, பணம் ரூ.2500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
- சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கடத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அரசூர் ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது.
அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரசூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் (64), ஆறுமுகம்(64), சந்திரன் (65), சுந்தரம் (70), அன்பழகன் (58), செல்வன் (53), திருமூர்த்தி (52), குமரேசன் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலி இடத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
- போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, திருவேங்கடம்பாளையம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெருந்துறையில் இருந்து திருவேங்கடம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருவேங்கடம்பாளையத்தை சேர்ந்த அய்யாசாமி (55), பிரதீப் (27), சுந்தரமூர்த்தி (21), அஜித் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 52 சீட்டுகள், பணம் ரூ. 2,600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமை யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாளவாடி அடுத்த காரலவாடி பஸ் நிறுத்தம் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (45), குருசாமி (55), சாந்தப்பா (48), குருசாமி (40), சிவசங்கரா (42) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ. 700 பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
- சீட்டாட்டம் விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
- ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு அடுத்த சோளங்காபாளையம் பகுதியில் மலையம்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள், கணபதிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(39), காமராஜபுரத்தை சேர்ந்த பழனிசாமி(43), பி.கே.வலசு பகுதியை சேர்ந்த கோபி(38), கிளாம்பாடியை சேர்ந்த குமார்(50) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
- பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கால் பாளையம் அடுத்த வைர பாளையம் காவிரி கரை அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கவுதம் (30), மணி வண்ணன்(39), சுப்பிரமணி (30), மணிகண்டன்(38), செந்தில்குமார்(41), சக்திவேல்(48), சபரீஷ்(33), முத்து சபரிநாதன் (37) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக கரு ங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.7, 850 பணம் மற்றும் 5 மோட்டார் சைக்கி ள்கள் பறிமுதல் செய்ய ப்பட்டன.
- காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
- கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளை யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கருமாரியம்மன் கோவில் காவிரி கரையில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லட்சுமணன்(46), அருன் குமரன்(40), மணிகண்டன்(28), காட்டுராஜா(50), பிரபு (38), சரவணன்(48), குமார்(40), சேட்டு (50) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.6, 150 பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
- விளையாடி வந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
- அவர்களிடம் இருந்த ரூ.5,350 ரொக்க பணம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையிலான போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த அலாவுதீன்(45), கலைஞர் நகரை சேர்ந்த சபரி(25), பெரியசேமூரை சேர்ந்த சேகர்(50), பெரியமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பொன்னுசாமி(51), நாடார்மேட்டினை சேர்ந்த பாலகிருஷ்ணன்(41), மணல்மேட்டினை சேர்ந்த சண்முகம்(58) ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.5,350 ரொக்க பணம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.