search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பல்கள்"

    • மூன்று சிறிய படகுகள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
    • இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி களிர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று ஏமனில் உள்ள அல் ஹுதைதா கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    மூன்று சிறிய படகு மூலம் கப்பலை வழிமறித்துள்ளனர். இரண்டு படகில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்துள்ளனர். ஒரு படகில் மனிதார்கள் யாரும் இல்லை. ஆளில்லாத படகு கப்பல் மீது இரண்டு மூன்று முறை மோதியுள்ளது. பின்னர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது அநத் ஆளில்லாத படகு விலகிச் சென்றுள்ளனர்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்கள் உள்ள இரண்டு படகில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் இருந்து கப்பல் தப்பிவிட்டது.

    கப்பலில் இருந்து மாலுமிகள் உள்பட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நான்கு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு கப்பலை சிறைப்பிடித்தது. இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    • பாம்பன் ரெயில் பாலத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் நிறைவடைந்துள்ளது.
    • பழைய ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து விட்டதால் புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாரவதி கடல் பகுதியில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து, 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 106 ஆண்டுகள் கடந்த நிலையில் பழைய ரெயில் பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து விட்டதால் புதிய ரெயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி ரூ.535 கோடி மதிப்பிட்டடில் இரட்டை வழித்தடத்தில் புதிய ரெயில் பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது. கப்பல்கள் வந்து செல்லும் வகையில் உயர் தொழில்நுட்பத்துடன் மையப்பகுதியில் கப்பல்களுக்கு விழிவிடும் வகையில் உயர் மின் அழுத்தம் கொண்ட மோட்டர்கள் மூலம் மேல் நோக்கி தூக்கும் வகையில் மையப்பகுதி அமைக்கப்படுகிறது.

    பாம்பன் ரெயில் பாலத்தின் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் நிறைவடைந்துள்ளது. மற்றொரு பகுதியில் இருந்து மையப்பகுதியில் பொறுத்தப்படும் பாலம் வடிவமைக்கப்பட்டு தற்போது மையப்பகுதி அருகே கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மையப்பகுதியில் பொறுத்தப்படும் தூக்கு பாலம் பொறுத்துவதற்கு வசதியாக கடலில் ராட்சத இரும்பு மிதவையில் கிரேன் பொருத்தி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் காரணமாக தூக்குப்பாலம் கால்வாயில் கப்பல்கள் பெரிய படகுகள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னை, காக்கிநாடா, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதி துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களும், குஜராத், மும்பை, கோவா, கேரளா போன்ற மேற்கு பகுதி மாநில துறைமுகங்களுக்கு செல்லும் சிறிய ரக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் புதிய தூக்குப்பாலம் பொருத்தும் பணிகள் நிறைவடையும் வரை கால்வாய் வழித்தடத்தை பயன்படுத்த முடியாது என ரெயில் விகாஸ்நிகம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஹ்யூண்டாய் கம்பனி சமீபத்தில் டெக்சாஸில் இருந்து பனாமா கால்வாய் வழியே தென்கொரியாவுக்கு ஆள் இல்லாத ஒரு கப்பலை வெற்றிகரமாக அனுப்பி வெள்ளோட்டம் பார்த்தது.
    • இதனால் சம்பளம் மட்டும் மிச்சம் என இல்லை. ஏராளமான நன்மைகள். மனிதர்கள் போகமுடியாத குளிர் உள்ள பகுதிகளுக்கு கூட இக்கப்பல்கள் போகும்.

    டிரைவர் இல்லாத கார்கள், லாரிகள் சந்தையில் நுழைந்துள்ளன. அதேபோல் அதிகம் பேசப்படாத புரட்சி கடலில் நடந்துகொண்டுள்ளது. அதுதான் கேப்டனும், மாலுமிகளும் இல்லாத கப்பல்கள்.

    சில வாரங்களுக்கு முன்பு மே ப்ளவர் எனும் சரக்கு கப்பல் அட்லாண்டிக் கடலையே கடந்து கனடாவுக்குள் வெற்றிகரகமாக நுழைந்தது. கப்பலில் மருந்துக்கு கூட ஒரு ஆள் இல்லை. ஏ.ஐ உதவியுடன் கப்பல் இயக்கபட்டது.

    நார்வேயில் உரக்கம்பெனி ஒன்று துறைமுகத்துக்கும், தன் பாக்டரிக்கும் இடையே ஆள் இல்லாத கப்பலை உரம் கொன்டு போக பல ஆண்டுகளாக பயன்படுத்திக்கொண்டுள்ளது.

    ஹ்யூண்டாய் கம்பெனி சமீபத்தில் டெக்சாஸில் இருந்து பனாமா கால்வாய் வழியே தென்கொரியாவுக்கு ஆள் இல்லாத ஒரு கப்பலை வெற்றிகரமாக அனுப்பி வெள்ளோட்டம் பார்த்தது.

    இதனால் சம்பளம் மட்டும் மிச்சம் என இல்லை. ஏராளமான நன்மைகள். மனிதர்கள் போகமுடியாத குளிர் உள்ள பகுதிகளுக்கு கூட இக்கப்பல்கள் போகும். கப்பலை இயக்குவதிலும் கேப்டனை விட ஏ.ஐ சிறப்பாக செயல்பட்டு ஏராளமான எரிபொருளை மிச்சபடுத்துகிறதாம். மாலுமிகளுக்கு எடுக்கவேண்டிய இன்சூரன்சு, பொருட்களை ஏற்றி, இறக்குவதில் அவர்களுக்கு அடிபட்டால் கொடுக்கும் நட்ட ஈடு எல்லாம் மிச்சம்.

    மேலும் ஆள் இல்லாத கப்பலை எத்தனை மெதுவாகவும் செலுத்தி எரிபொருளை மிச்சபடுத்தலாம். ஆட்கள் இருந்தால் ஒவ்வொரு நாளுக்கும் சம்பளம் கூடுதலாக கொடுக்க வேண்டும்.

    அடுத்த சில ஆண்டுகளில் உலக சரக்கு கப்பல் போக்குவரத்து முழுக்க ஆள் இல்லாத கப்பல்கள் மூலம் தான் நடைபெறும் என்கிறார்கள்.

    எதாவது மரைன் எஞ்சினியரின் மாதிரி கோர்ஸ்கள் படிப்பது என்றால் இதை மனதில் கொள்ளவும்.

    -நியாண்டர் செல்வன்

    ×