என் மலர்
நீங்கள் தேடியது "சூரரைப்போற்று"
- இயக்குனர் சுதா கொங்கரா ‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சூரரைப்போற்று இந்தி ரீமேக் போஸ்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. டைட்டில் வெளியாகும் முன்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
We are ready for take off! ✈️
— Akshay Kumar (@akshaykumar) March 21, 2023
Production No. 27 (Untitled) releases in theatres worldwide on 1st September, 2023. #RadhikaMadan@SirPareshRawal@Sudha_Kongara #Jyotika@Suriya_offl @vikramix @rajsekarpandian @Abundantia_Ent@2D_ENTPVTLTD@CaptGopinath@sikhyaent@gvprakash pic.twitter.com/OW9NjKkmAy
- இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப்போற்று' இந்தி ரீமேக் உருவாகி வருகிறது.
- இதில், மாறன் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சூரரைப்போற்று படக்குழு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Recorded @MikaSingh for #sooraraipottru Hindi song … lyrics by @manojmuntashir … @Sudha_Kongara @akshaykumar @Abundantia_Ent @rajsekarpandian … lots of dhols on the wayyyyyy ??? pic.twitter.com/MA0YsLx8bZ
— G.V.Prakash Kumar (@gvprakash) May 30, 2023
- சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப்போற்று' இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை சுதா கொங்கரா தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காடி வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கராவின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுதா கொங்கரா.. சூரைப் போற்று இந்தி ரீமேக்கில் நீங்க நிகழ்த்தியுள்ள மேஜிக்கை இந்த உலகம் காண காத்திருக்கேன்! அந்த படம் பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைக்கும்! இதையடுத்து, உங்களோட அடுத்த தமிழ்ப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழில் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
- இவர் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பெற்றார்.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'வணங்கான்' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷ்
சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்றார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

ஜி.வி.பிரகாஷ்
அந்த புகைப்படத்திற்கான கமெண்டில் மாணவி ஒருவர் "நான் கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வருகிறேன். இந்த மாதம் என்னுடைய தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வுக் கட்டணம் தொடர்பான விவரங்களை அனுப்பியிருக்கிறேன்" என உதவி கேட்டுள்ளார்.
இந்த கமெண்டை படித்த ஜிவி பிரகாஷ் 'பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு விட்டது" என்று பதிலளித்துள்ளார். இந்த செயலுக்காக ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
#houseofsause #vierphotography pic.twitter.com/Bh1SEcPsxB
— G.V.Prakash Kumar (@gvprakash) October 2, 2022
- 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெற்றது.
- இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.
இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

சூரரைப்போற்று
இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

திரௌபதி முர்மு - சூர்யா
இதையடுத்து 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சூரரை போற்றுக்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார்.

திரௌபதி முர்மு - ஜோதிகா
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா பேசியதாவது, "இந்திய அரசாங்கத்திற்கும் ஜூரிக்கும் என் நன்றி. என் மனதில் நிறைய உணர்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நான் நன்றி சொல்ல நிறைய பேர் உள்ளனர். உண்மையிலேயே மறக்க முடியாத தருணம்" என்று பேசினார்.
- 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெற்றது.
- இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.
இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

திரௌபதி முர்மு - சூர்யா
இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

திரௌபதி முர்மு - ஜோதிகா
இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சூரரை போற்றுக்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெறவுள்ளது.
- இவ்விழாவில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார்.
இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.இந்நிலையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் விருது வாங்குவதற்காக டெல்லி சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.
- 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.
2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.

தேசிய திரைப்பட விருது வென்ற அனைவருக்கும் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல் வாழ்த்துக் கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ரஜினி பதிவில், தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப்போற்று பட இயக்குனர் மற்றும் விருது பெறும் திரையுலக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என்று பதிவிட்டுள்ளார்.

கமல் பதிவில், சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்க செய்துள்ளது தமிழ் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கமல் பதிவிட்டுள்ளார்.
#NationalFilmAwards தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும் @Suriya_offl , சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்
— Rajinikanth (@rajinikanth) July 23, 2022
- சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
- தேசிய விருது கிடைத்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
'சூரரைப்போற்று' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றது குறித்து நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள். 'சூரரைப் போற்று' திரைப்படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா, ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ். அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது.
மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் அஜய் தேவ்கான், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குனர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லட்சுமி பிரியா சந்திரமவுலி, இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் 58-வது தேசிய விருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும். இந்த தேசியவிருது அங்கீகாரம். நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனமார்ந்த நன்றி!
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2022
Overwhelmed!! #SooraraiPottru pic.twitter.com/fxGycj7h4Y
- 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன
- 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

சூரரைப் போற்று
இதில் சிறந்த நடிகராக சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரரைப்போற்று படத்திற்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.