search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயாறப்பர்"

    • இச்சங்காபிஷேகத்திற்காக பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து புனித நீரும், பல்வேறு புண்ணிய க்ஷேத்திரங்களிலிருந்து புனித மண்ணும் எடுத்து வரப்படுகிறது.
    • இச்சங்காபிஷேக புனித நீரை பிரசாதமாக பெற்று அருந்தும் பக்தர்களுக்கும் சகல பாவங்களும்நீங்குவதாகவும், சகல சௌபாக்கியங்களைப் பெறுவர்.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீஐயாறப்பர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு நாளை மாலை ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.

    மேலும், 28, 5 மற்றும் 12 ஆகிய மூன்று சோம வாரங்களிலும் ஸ்ரீ ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.இச் சங்காபிஷேகத்தின் போது ஆலய பிரசங்க மண்டபத்தில் ஸ்ரீ ருத்ர பாராயணம், ஸ்ரீ ருத்ர ஹோமம், வேத பாராயணம். திருமுறை இன்னிசை மற்றும் புனித நீர் கலச ஆராதனைகளும் நடக்கிறது.

    இச்சங்காபிஷேகத்திற்காக பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து புனித நீரும், பல்வேறு புண்ணிய க்ஷேத்திரங்களிலிருந்து புனித மண்ணும் எடுத்து வரப்படுகிறது.

    இவற்றுடன் பல மூலிகைகள், மருந்துப் பொருட்கள், பச்சிலைகள், தானியங்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் ஆகியவைகள் கலந்து, 1008 வெண்சங்குகளில் நிரப்பி, வேத பாராயணம் மற்றும் ஹோமம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும், இச்சங்காபிஷேக புனித நீரை பிரசாதமாக பெற்று அருந்தும் பக்தர்களுக்கும் சகல பாவங்களும்நீங்குவ தாகவும், சகல சௌபாக்கியங்களைப் பெறுவர் எனவும், அகால மரணம் எய்த மாட்டார் எனவும், 4446 நோய்களிலிருந்து விடுபடுவர் எனவும் புராணங்களும், வேதாகம ங்களும், திருமுறை களும் கூறுகின்றனஇச்சங்கா பிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர்கோயில் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள்.

    • 10 நாட்களுக்கு அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவ விழாக்கள் நடக்கிறது
    • ஆகஸ்ட் 1-ந்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு காவிரியில் தீர்த்தவாரியும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகளும் நடக்கிறது.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்தநாயகி அம்மன் உடனாய ஐயாறப்பர் கோயில் அம்மன் சன்னதியில் ஆடிப்பூரம் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.

    முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து, கொடி திருவையாறின் கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி மற்றும் வடக்கு வீதி ஆகிய நான்கு ராஜவீதிகளில் மங்கள வாத்திய இசையுடன் முன்னே யானை ராஜநடையுடன் பவனி வந்து அம்மன் கோயிலை அடைந்தது.

    பின்னர், வேதபாராயனம், தேவாரம் மற்றும் திருவாசகம் பாடி, கொடி மர பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவ விழாக்கள் நடக்கிறது. இன்றிரவு வெள்ளிப்படிச் சட்டத்தில் அம்பாள் வீதி உலாவும், நாளை முதல் தினமும் காலையில் பல்லக்கிலும் இரவில் சேஷ வாகனம், காமதேனு, வெள்ளி ரிஷபம், அன்னம், சிம்மம் மற்றும் குதிரை ஆகிய வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி இரவு வீதி உலா நடக்கிறது.

    28- ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அன்றிரவு தருமையாதீன 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாள் சுவாமிகளின் அருளாசியுடன் ஐயாறப்பர் கோயில் சூரிய புஷ்கரணி பிரகாரத்தில் அப்பர் கயிலைக் காட்சி விழா நடக்கிறது. 31-ந்தேதி காலையில் அம்பாள் தேர்பவனி நடக்கிறது. மறுநாள் ஆகஸ்ட் 1-ந்தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு காவிரியில் தீர்த்தவாரியும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகளும் நடக்கிறது.

    அன்றிரவு இயல், இசை, நாடகம், தேவாரம், திருவாசகம் திருமுறைப் பாடல்கள் மற்றும் கயிலை வாத்திய இசை முழக்குகளுடன் அம்மன் கோயில் பிரகாரத்தை பக்தர்கள் ஏழுமுறை வலம் வரும் சப்த பிரதச்சனம் நடக்கிறது. ஆடிப்பூர விழா நாட்களில் மாலையில் அம்மன் கோயில் கொலு மண்டபத்தில் தமிழ்ச் சான்றோர்களின் ஆடிப்பூர அம்மன் பற்றிய ஆன்மீகச் சொற்பொழிவுகளும், இன்னிசை, பாடல் மற்றும் நாட்டியக் கலைநிக ழ்ச்சிகளும் நடக்கிறது.

    2-ந்தேதி பிராயச் சித்த அபிஷேகத்துடன் ஆடிப்பூரம் உற்சவம் நிறைவடைகிறது. இவ்விழா விற்கான ஏற்பாடுகளை தருமையாதீன 27-வது சந்நிதானத்தின் அருளாணைப்படி திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் செய்திருக்கிறார்கள்.

    ×