என் மலர்
நீங்கள் தேடியது "ஷ்ரேயாஸ் ஐயர்"
- ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பந்து கூட சந்திக்கவில்லை.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 243 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் முதலாவதாக பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது அதிரடியாக விளையாடி அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசியில் ஒரு ஓவர் மீதம் இருந்தது. ஷ்ரேயாஸ் சதம் அடிக்க அதிக வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி ஓவரை முழுவதும் ஷஷாங்க் சிங் விளையாடி ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு பந்து கூட கொடுக்காமல் 5 பவுண்டர்கள் விளாசினார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி வெளியில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
யாராக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தால் ஒரு ரன் எடுத்து கொடுத்து அவரை சதம் அடிக்க முயற்சி செய்யும் வீரர்கள் மத்தியில் இவர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்ட்ரைக் மாற்றதது குறித்து ஷஷாங்க் சிங் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், உங்களுக்கு ஸ்ட்ரைக் வேண்டுமா என ஸ்ரேயஸிடம் நான் கேட்பதற்கு முன்பாகவே "எனது சதத்தை பற்றி நீ கவலைப்படாதே. எல்லா பந்துகளையும் அடித்து விளையாடு. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இது ஒரு அணியை சார்ந்த விளையாட்டு என ஷ்ரேயஸ் கூறிவிட்டார். ஆனால் அதுபோன்ற தருணங்களில் சுயநலமின்றி செயல்படுவது மிகவும் கடினமான ஒன்று. ஐபிஎல்-ல் சதம் விளாசுவது எளிதான விஷயம் அல்ல என ஷஷாங்க் கூறினார்.
- ஐபிஎல் 2025 சீசனின் 5வது போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
- முதலில் ஆடிய பஞ்சாப் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் 243 ரன்களைக் குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் மிரட்டினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். கடைசி கட்டத்தில் இறங்கிய சஷாங்க் சிங் அதிரடி காட்டினார்.
இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 21 பந்தில் 81 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து, 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
- இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என அறிவோம்.
- பயிற்சியாளருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.
சண்டிகர்:
ஐ.பி.எல். 2025 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:
வரும் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன்.
இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிவோம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும்.
நான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன்.
நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.
அவர் அனைவரையும் ஆதரிக்கிறார். சில இடங்களில் சீனியர்-ஜூனியர் கலாசாரம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் நான் அவருடன் முதல் முறையாகப் பணியாற்றியபோது, நான் ஒரு சிறந்த வீரர் என்ற உணர்வை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.
அவருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது. முடிவு இங்கும் அங்கும் சென்றாலும் அவரது மனம் ஊசலாடுவதில்லை. அவர் அதே வழியில் சிந்திக்கிறார். மேலும் அவர் வெற்றி பெற விரும்புகிறார்.
கோப்பையை வெல்வதே முக்கியம். இதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.
- ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதம் மற்றும் 14 அரை சதங்களும் அடித்துள்ளது
- இந்த வருடம் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 721 ரன்களை 60 ரன்கள் சராசரி உடன் எடுத்துள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாகவே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த பின்னர் மூன்றாவது வீரராக களம் புகுந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் மறுமுனையில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
இறுதியில் 102 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 82 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை முக்கியமான நேரத்தில் பறிகொடுத்தார். இறுதியில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத ஒரு வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். அதன்படி இதுவரை இந்திய அணிக்காக 38 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 1534 ரன்களை 49 ரன்கள் சராசரி உடன் அடித்துள்ளார்.
அதோடு அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதம் மற்றும் 14 அரை சதங்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்திய வீரர்களில் வெகுவிரைவாக 1500 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்தவர்கள் சாதனையில் முதல் இடத்தில் இருந்த கே.எல் ராகுலை பின்னுக்கு தள்ளி அவர் சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிவேகமாக 1500 ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் கே.எல் ராகுல் 36 இன்னிங்ஸ்களில் முதலிடத்தில் இருந்த வேளையில் அதனை ஷ்ரேயாஸ் ஐயர் நேற்றைய போட்டியின் மூலம் 34-இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார்.
இவர்கள் இருவரை தொடர்ந்து ஷிகார் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் 38 இன்னிங்ஸ்களில் 1500 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 721 ரன்களை 60 ரன்கள் சராசரி உடன் எடுத்துள்ளார். இதில் 6 அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்டர் கவாஸ்கர் கோப்பையின் போது முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், பாதியிலேயே வெளியேறினார்.
- ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகினார்.
மும்பை:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் திட்டத்தில் தொடக்கத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். அணியின் பேட்டிங் வரிசையே ஆட்டம் காணும் சூழல் உருவாகியுள்ளது.
ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்தது.
2011ம் ஆண்டுக்கு பின் ஒரு உலகக்கோப்பையை கூட வெல்லாமல் உள்ள இந்திய அணிக்கு இந்த முறை மீண்டும் சொந்த மண்ணில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதற்காக தற்போது இருந்தே இந்திய அணி திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
ஆனால் இந்தியாவின் திட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர். பார்டர் கவாஸ்கர் கோப்பையின் போது முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், பாதியிலேயே வெளியேறினார். மேலும் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகினார். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
சற்று 50 கிரிக்கெட்டிற்கான இந்திய அணியின் வழக்கமாக 4வது இடத்தில் விளையாடுவது ஷ்ரேயாஸ் ஐயர் தான். கடந்தாண்டு அவர் தான் அதிக ரன்களை இந்தியாவுக்காக அடித்திருந்தார். விரைவில் அவர் குணமடைந்து அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் கோரி வரும் சூழலில் இந்தியாவின் திட்டத்தில் இருந்தே அவர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதுகுவலி பிரச்சினைக்காக லண்டன் புறப்படவுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து பழைய ஃபார்முக்கு வருவதற்கு குறைந்தது 4 - 5 மாதங்கள் வரை ஆகும் எனக்கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரை முடித்தவுடனேயே உலகக்கோப்பைக்கான திட்டத்தில் இந்திய அணி குதிக்கவுள்ளது. இப்படி இருக்கையில் ஷ்ரேயாஸ் ஐயரால் சரியான நேரத்தில் இந்திய அணியுடன் இணையமாட்டார். எனவே அவரின் 4வது இடத்தை இனி சூர்யகுமார் யாதவ் தான் பார்த்துக் கொள்ளவிருக்கிறார். 50 ஓவர் ஃபார்மெட்டில் இன்னும் ஃபார்முக்கு வராத சூர்யகுமார் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு தரவுள்ளதாகவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
- இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான அவர் 2019 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
- ஏப்ரல் 5-ம் தேதியன்று பெங்களூருவுக்கு எதிரான தன்னுடைய 2-வது போட்டியில் கொல்கத்தா மோதுகிறது.
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 கோப்பைகளை வென்று 3-வது வெற்றிகரமான அணியாக திகழும் கொல்கத்தா 2014-க்குப்பின் 3-வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் காயத்தால் வெளியேறியதால் நிதிஷ் ராணா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்றது. ஏப்ரல் 5-ம் தேதியன்று நடைபெறும் பெங்களூருவுக்கு எதிரான தன்னுடைய 2-வது போட்டியில் வெற்றி பாதைக்கு திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் விலகிய நிலையில் அவருக்கான மாற்று வீரரை கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் வாங்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான அவர் 2019 உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதுவரை 64 போட்டிகளில் 1522 ரன்களை 137.62 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார்.
மேலும் ஐபிஎல் தொடரில் 2017, 2018 ஆகிய சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடியிருந்த அவர் கடைசியாக 2021 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.
- ஷ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
- அவருக்கு 3 மாதம் ஓய்வு தேவை என்பதால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். 2019 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 4-ம் வரிசையில் இறங்குவதற்கு பரிசோதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவர்.
ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை பிடித்த அவருக்கு காயமடைவதுதான் பெரிய பிரச்னையாக இருந்தது. இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் 4-ம் வரிசைக்கான முதன்மை வீரர். மேலும் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்.
இந்நிலையில், முதுகுப்பகுதியில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே காயம் காரணமாக அவர் விளையாட வரவில்லை. இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. ஆகையால், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 3 போட்டியிலும் டக் அவுட்டானார்.முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார்.
இந்த நிலையில் தான் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அவருக்கு 3 மாதம் ஓய்வு தேவை என்பதால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.
எனினும், வரும் அகடோபர் மாதம் தொடங்க இருக்கும் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை தொடரில் கண்டிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2023-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் நிதிஷ் ராணா கேப்டனாக செயல்பட்டார்.
- 2024-ம் ஆண்டு கேகேஆர் அணியின் துணை கேப்டனாக ராணா நியமனம்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனை கேகேஆர் அறிவித்துள்ளது.
அதன்படி கேகேஆர் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக 2023-ம் ஆண்டு ஐயர் விளையாடவில்லை. அதனால் அந்த சீசன் முழுவதும் கேப்டனாக நிதிஷ் ராணா செயல்பட்டார்.
காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்காத ஐயர், 2023-ம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பையில் களமிறங்கினார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 2023 உலகக் கோப்பையிலும் அவர் இடம் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில் மீண்டும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஷ்ரேயாஸ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- ஷ்ரேயாஸ் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று என்சிஏ மருத்துவர் நிதின் படேல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஷ்ரேயாஸ் மோசமான ஆட்டம் காரணமாக எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த வாய்ப்பு இளம் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ற வகையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, விதர்பா, மும்பை, பரோடா, சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச அணிகள் முன்னேறி இருந்தன. மேலும் மும்பை அணி காலிறுதிப்போட்டியில் பரோடா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஷ்ரேயாஸ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் இஷான் கிஷன் உள்பட பல முன்னணி வீரர்கள் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்து ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாக பிசிசிஐ அதிருப்தி தெரிவித்திருந்தது.
அதிலும் பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியளில் இடம்பிடித்திருந்த வீரர்கள் இவ்வாறு செய்து வருவது வருத்தமளிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சில காட்டமான கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது ஷ்ரேயாஸ் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியது சர்ச்சையான நிலையில், அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும் படி என்சிஏவிற்கு பிசிசிஐ உத்திரவிட்டிருந்தது.
அதன்படி என்சிஏ மருத்துவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக ஷ்ரேயாஸ் காயத்தை காரணமாக கூறி ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் ஷ்ரேயாஸ் மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விகுறியாகும் என கருதப்படுகிறது.
- இஷான் கிஷன் ரஞ்சி தொடரில் விளையாடாமல் பாண்ட்யாவுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயராகி வருகிறார்.
- ஷ்ரேயாஸ் முதுகு வலி காரணமாக ரஞ்சி தொடரில் இருந்து விலகினார்.
இந்திய அணியின் இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பிசிசிஐ மத்திய ஒப்பந்தகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன் பிறகு சில தொடர்களில் இஷான் கிஷன் களற்றி விடப்பட்டார். மேலும் இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடச் சொல்லி பிசிசிஐ வலியுறுத்தியுறுத்தியது. ஆனால் அவர் ரஞ்சி தொடரில் விளையாடாமல் ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயாரியாகி வந்தார்.
இவரை போல ஷ்ரேயாஸ் அய்யர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும் படி என்சிஏவிற்கு பிசிசிஐ உத்திரவிட்டிருந்தது.
அதன்படி என்சிஏ மருத்துவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தான் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஆகிய இருவரும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விகுறியாகி உள்ளது.
2022-23 மத்திய ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, இஷான் கிஷன் சி பிரிவிலும் ஷ்ரேயாஸ் அய்யர் பி பிரிவிலும் இடம்பிடித்துள்ளார்கள்.
- கிரேடு ஏ+ பிரிவில் சீனியர் வீரர்களான ரோகித், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.
- இளம் வீரரான ஜெய்ஸ்வால் கிரேடு பி பிரிவில் இடம் பிடித்துள்ளார்.
2023- 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியீட்டது. இதில் 2 முக்கிய வீரர்களான இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பிசிசிஐ புறகணித்துள்ளது.
கிரேடு ஏ+ பிரிவில் சீனியர் வீரர்களான ரோகித், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் உள்ளனர். கிரேடு ஏ பிரிவில் தமிழக வீரர் அஸ்வின், சமி, சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளனர்.
கூடுதலாக, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள், விகித அடிப்படையில் தானாகவே கிரேடில் சேர்க்கப்படுவார்கள். உதாரணமாக, துருவ் ஜூரல் மற்றும் சர்பராஸ் கான், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர், அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் 5வது டெஸ்டின் பிளேயிங் 11-ல் இடம்பெற்றால், கிரேடு 'சி'-ல் சேர்க்கப்படுவார்கள்.
ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள் மற்றும் வித்வத் கவேரப்பா ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்களையும் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
அனைத்து வீரர்களும் தேசிய அணியில் விளையாடத காலங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. பரிந்துரைத்துள்ளது.
இளம் வீரரான ஜெய்ஸ்வால் கிரேடு பி பிரிவில் இடம் பிடித்துள்ளார்.
கிரேடு ஏ+ (ரூ. 7 கோடி)
ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா
கிரேடு ஏ (ரூ.5 கோடி)
அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா
கிரேடு பி (ரூ. 3 கோடி)
சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ஜெய்ஸ்வால்
கிரேடு சி (ரூ.1 கோடி)
ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாகுர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார்.
- ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் திறமையான கிரிக்கெட் வீரர்கள்.
- அவர்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன்.
ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர்கள் வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர் கிரேட் பி பிரிவிலும், இஷான் கிஷான் கிரேட் சி பிரிவிலும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் பிசிசிஐ-யின் இந்த முடிவு சர்ச்சையாக மாறிவரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானின் எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் திறமையான கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன்.
ஹர்திக் போன்ற வீரர்கள் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றால், அவரும் அவரைப் போன்றவர்களும் தேசிய கடமையில் இல்லாதபோது வெள்ளை பந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டுமா? இது அனைவருக்கும் பொருந்தவில்லை என்றால், இந்திய கிரிக்கெட் எதிர்பார்த்த முடிவுகளை அடையாது.
என்று பதான் கூறியுள்ளார்.