என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாந்த்"

    • ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
    • தென் ஆப்பிரிக்கா மண்ணில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

    புதுடெல்லி:

    ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி குறித்து முன்னாள் வீரர்கள் ஆதரவும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங்கை 15 பேர் கொண்ட அணியில் எடுக்காதது குறித்து அஜித் அகார்கரை முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிழித்தெடுத்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் சிறப்பாக இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

    குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் கடைசி டி20 போட்டியில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தார். ரிங்கு 69 ரன்கள் குவித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது.

    இப்படிப்பட்ட வீரரை இந்திய அணியில் சேர்க்காதது அநியாயம். இந்த தேர்வு மிகவும் மோசமான முடிவு. அவர் இந்திய அணிக்காக உயிரை கொடுத்து விளையாடுகிறார். அவரை பழிகாடாக ஆக்கி விட்டார்கள். அவரை இந்திய அணியில் மீண்டும் சேர்ப்பது கடினம். ஐபிஎல் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்படது கடினம். இனி ரிங்கு சிங்கை மக்கள் மறந்து விடுவார்கள்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார். 

    • இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார்
    • நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார்.

    2024 தசரா அன்று தேவரா பாகம் 1- இன் டைட்டில் ரீவில் செய்தார்கள். இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் ஜூனியர் என். டி.ஆர் இரண்டாம் முறை இணைந்து பணியாற்றப் போகிறார். இதற்கு முன் 8 ஆண்டுகளுக்கு ம் உன் வெளியான் ஜந்தா கேரேஜ் படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்தார்.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இந்த படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர், சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியான 'Fear Song' என்ற பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தேவரா பாகம்-1' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.
    • கோலியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் சிறப்பாக விளையாடத் தொடங்குவார் என்று நம்புகிறேன்.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 147 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் 'சரண்' அடைந்ததுடன் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது.

    சொந்த மண்ணில் இந்திய அணி 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 'ஒயிட்வாஷ்' ஆனது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக சீனியர் வீரர்கள் 37 வயதான கேப்டன் ரோகித் சர்மா (6 இன்னிங்சில் 91 ரன்), விராட் கோலி (6 இன்னிங்சில் 93 ரன்) ஆகியோரின் பொறுப்பற்ற பேட்டிங்கே இந்திய அணியின் சொதப்பலுக்கு காரணம் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த தொடர் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

    இது தொடர்பாக இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்படாவிட்டால் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை நாம் இப்போதே யோசிக்க தொடங்கி விட வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித் சர்மா சோபிக்காவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.

    அதன் பிறகு ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். ஏற்கனவே அவர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று விட்டார். ரோகித் சர்மாவுக்கு தற்போது வயதாகி விட்டது. அவர் இளம் வீரர் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரு விஷயத்தில் ரோகித் சர்மாவை பாராட்டியாக வேண்டும். நியூசிலாந்து தொடரை இழந்ததும் தொடர் முழுவதும் தான் ஒரு கேப்டனாகவும், வீரராகவும் சரியாக செயல்படவில்லை என்ற உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். நம் மீது தவறு இருந்தால் அதை ஒப்புக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இது ஒரு மனிதனுக்கு நல்ல தகுதியாகும். தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதன் மூலம் அது அவருக்கு அதில் இருந்து மீள்வதற்கு உதவிடும் என்று கருதுகிறேன்' என்றார்.

    மேலும் ஸ்ரீகாந்த் கூறுகையில், 'விராட் கோலியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் சிறப்பாக விளையாடத் தொடங்குவார் என்று நம்புகிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் எப்போதும் நன்றாக ஆடுவார். அங்கு ரன் குவிப்பது அவரது பலங்களில் ஒன்று. அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இப்போதே கருத்து சொல்வது உகந்ததாக இருக்காது. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது' என்றார்.

    • லீக் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
    • முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

    பாகிஸ்தானில் அடுத்த மாதம் துவங்கும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடருக்கான எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளும், பி பரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இரண்டு பிரிவுகளிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். லீக் சுற்று போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

    இந்த தொடருக்கான லீக் சுற்று போட்டிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமுற்ற ஜஸ்பிரித் பும்ரா குணமடைய மார்ச் மாதம் ஆகும். இதனால், அவர் லீக் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

    ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை கொண்டுவரலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "இன்றும் புவனேஷ்வர் குமாரால் பந்தை இரண்டு புறமும் ஸ்விங் செய்து வீச முடியும். 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின்போது அவர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவரை இந்திய அணி தற்போது மறந்தே விட்டது."

    "என்னை பொருத்தவரை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமாரை கொண்டு வந்தால் அது அணிக்கு நல்லதாக இருக்கும்" என்றார்.

    • அறிமுக இயக்குனர் பா.ரஞ்சித்குமார் இயக்கும் படம் சம்பவம்.
    • இப்படத்தில் ஸ்ரீகாந்த், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு, கா ஆகிய படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் சம்பவம். இதில் ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்கின்றனர். இதன் முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    சம்பவம் திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.ரஞ்சித்குமார். இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் இணைஇயக்குனராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரிஸ் கவனிக்க இசை அம்ரீஷ் மற்றும் படத்தொகுப்பு சந்திரகுமார் கவனிக்கின்றனர்.


    உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு. இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×