என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெய்லர் கைது"

    • மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார்.
    • பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.

    மதுரை:

    மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். இதுவரை எனக்கு பள்ளி சீருடை அளவெடுக்க யாரும் வந்ததில்லை.

    சம்பவத்தன்று பள்ளியில் சீருடை அளவெடுக்க ஒரு ஆண் உள்பட 2 பேர் வந்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இது தொடர்பாக எனது வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் ஆண் டெய்லர் உள்பட 2 பேர் என்னிடம் அத்துமீறி அளவெடுத்தனர். அப்போது உடல் பாகங்களை தொட்டனர். எனவே அவர்கள் மீதும், உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தி ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தாமோதரன் மாணவி பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும்போது பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
    • நாளுக்கு நாள் தாமோதரனின் காதல் டார்ச்சர் அதிகரிக்கவே, மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கோல்டன் நகர் கருணாகர பிரிவு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 25), டெய்லர். இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலிக்க மறுத்து விட்டார். இருப்பினும் தாமோதரன் மாணவி பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும்போது பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

    நாளுக்கு நாள் தாமோதரனின் காதல் டார்ச்சர் அதிகரிக்கவே, மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் தாமோதரனுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்தநிலையில் மாணவி வீட்டில் தனியாக இருக்கும்போது உள்ளே புகுந்த தாமோதரன் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தாமோதரனை கைது செய்தனர்.

    ×