search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்கள்"

    • முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.
    • ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

    வீட்டில் இருந்தவாறு குறைந்தபட்ச வருமானத்திலிருந்து அதிகபட்ச வருமானம் வரை தரும் பெண்களுக்கு ஏற்ற பிசினஸ்.

    இன்று அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. இதனாலையே பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்து முடித்துவிட்டு வருமானம் ஈட்டுவதற்கான வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

    மேலும் வீட்டிலேயே கடுமையான உழைப்பை செலுத்திய பெண்களால் பிறகு வேலைக்காக வெளியே செல்வது இயலாத காரியம் என்பதால் வீட்டில் இருந்தவரை வருமானம் ஈட்டும் தொழில்களை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குறைந்த நேரத்தில், முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.

    • இந்த நிலையில் வீட்டில் இருந்தவாறு அதிக வருமானத்தை பெற பெண்களுக்கு ஏற்ற தொழில்கள், வீட்டிலேயே பேக்கரி தொடங்கி சாக்லேட், கேக் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம், குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு வகைகள், முறுக்கு தயாரித்து வியாபாரம் செய்யும் பெண்கள் சீசனுக்கு மட்டும் இல்லாமல், முழு நேரத் தொழிலாக ஹோம் பேக்கரி தொடங்கி பயன்பெற முடியும்.


    • கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்டம், அலங்கார பொருட்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும், தேவையான உபகரணங்களை வாங்கிக் கொண்டு பணிகளை மேற்கொண்டால் போதிய வருமானம் கிடைக்கும்.

    • சிறிய நகை உற்பத்தி, செயின், கம்மல் போன்ற பல்வேறு வகைகளில் நகை வடிவங்களை சிறிய அளவில் வீட்டிலிருந்தவாரு தயாரித்தால் அக்கம் பக்கத்தினரிடம் விற்பனை செய்தே வருமானம் ஈட்ட முடியும்.


    • வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் டைப்பிங் வர்த்தக நடவடிக்கையாக பயன்படுத்த முடியும். கணினியில் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் கொண்ட பெண்களுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.

    • தமிழ்நாட்டில் தற்போது அதிகப்படியான பெண்கள் வீட்டில் தையல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தையல் தொழில் செய்யும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.


    • மெழுகுவர்த்தி மற்றும் அலங்கார விளக்குகள் ஆகியவற்றை வீட்டிலேயே மிக எளிமையாக தயாரிக்கலாம். இவையும் பயன்தரும் வணிக நடவடிக்கைகள் ஆகும். மேலும் ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

    • தற்போது ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால் வீட்டில் ஆர்கானிக் சோப்பு மற்றும் ஆர்கனைச் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதும் ஏற்ற வணிக நடவடிக்கையாகும்.


    • மேலும் தற்போதைய நவீன சமூகத்தில் அழகு கலை பெண்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் வீட்டிலேயே அழகு கலை சார்ந்த செயல்பாட்டை செய்யும் பெண்கள் அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர் வீடு தேடி சென்று சில மணி நேரங்கள் செலவிட்டு அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். இவ்வாறான வணிக நடவடிக்கைகள் தற்போது பெண்களுக்கு ஏற்ற முக்கியமான பிசினஸ்க்காக உருவெடுத்து இருக்கின்றனர்.

    • தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.
    • 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்–சங்கத்தின் தஞ்சை மாவட்ட 13- வது மாநாடு தஞ்சாவூர் கீழராஜ வீதியில் உள்ள மாவட்ட அலுவலகம் சிங்காரவேலர் நினைவரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. மாநாட்டின் தலைமை குழுவாக மாவட்ட தலைவர் சேவையா, துணைத் தலை–வர்கள் சாமிக்கண்ணு, பரிமளா ஆகியோர் தலைமை வகித்தனர்.

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் 13-வது மாவட்ட மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணை தலைவர் முத்துக்குமரன் வாசித்தார். மாநாட்டில் மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன் வரவேற்று பேசினார். ஏ. ஐ. டி.யூ.சி தேசிய செயலாளர் வகிதா நிஜாம் மாநாட்டினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் தில்லைவனம் முன் வைத்தார். மாவட்ட பொரு–ளாளர் கோவிந்தராஜன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    மாநாட்டினை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.

    பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்நாதன், தீர்மானங்களை வாசித்தார். மாநில செயலாளர் சந்திர–குமார் மாநாட்டினை நிறைவு செய்து உரை–யாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் மணி மூர்த்தி நன்றி கூறினார்.

    மாநாட்டில், ஒன்றிய அரசு தொழிற்சங்க சட்டங்கள் சுருக்கி திருத்தியதை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும், உடன–டியாக பட்டு கைத்தறிவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், போக்குவரத்து, மின்வாரியம், நுகர்பொருள், ஆவின் உள்ளிட்ட மத்திய ,மாநில பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், தனியார்மய நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும், சிறு குறு தொழில்களை மேம்–படுத்தவும், பாதுகாக்கவும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

    மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டு வரி, குடிநீர் வரி உயர்வுகளை திரும்பப் பெற வேண்டும், கட்டுமானம், உடலுழைப்பு, கைத்தறி, ஆட்டோ உள்ளிட்ட நல வாரியங்களை பாதுகாப்பதுடன் நல–வாரியங்களில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தஞ்சாவூரை மையமாக கொண்டு சட்ட கல்லூரியை உருவாக்க வேண்டும்

    பாரதிதாசன் பல்கலைக்–கழகத்தில் உள்ள உறுப்பு கல்லூரிகளை பிரித்து தஞ்சையை மையமாகக் கொண்டு தனிப் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும், தெரு வியாபாரிகளை கணக்கில் எடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும், திலகர் திடல் அம்மா மாலை நேர காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு மின் வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், தஞ்சாவூரில் நவீன கட்டமைப்புடன் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மாநாட்டில் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

    • 42 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கி பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் மூலம் தலா ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டாரம் புதுக்குடி ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக பாரம்பரிய தொழிலான பாசிமணி, வளையல், காது வளையம் போன்ற தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் வங்கி மூலம் தனிநபர் கடன் உதவி கோரி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகு மூலம் மேற்கூறிய தொழில்களை மேம்படுத்த நோக்கில் வங்கி மூலம் தனிநபர் கடன் உதவி கோரிய விளிம்பு நிலை மக்களை நேரில் கள ஆய்வு செய்து 42 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கி பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாரத மாநில வங்கிகளின் மூலம் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு 18 நபர்களுக்கு தனிநபர் கடன் மாவட்ட தொழில் மைய பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் மூலம் தலா ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருவாய் ஆதாரத்தைப்பெருக்க, கிராமங்களில் இயங்கும் நிறுவனங்களிடம் ஒருமுறை நிறுவன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • உரிமம் புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்கப்படாததால், பல ஊராட்சிகள், வறுமை நிலையில் உள்ளன.

    திருப்பூர் :

    ஊராட்சிகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட இனங்கள் மட்டுமே முக்கிய வருவாய் இனமாக உள்ளன. வருவாய் ஆதாரத்தைப்பெருக்க, கிராமங்களில் இயங்கும் நிறுவனங்களிடம் ஒருமுறை நிறுவன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அந்நிறுவனங்கள், ஆண்டுதோறும், உரிமக்கட்டணம் செலுத்தி, உரிமம் புதுப்பிப்பு செய்து கொள்ள வேண்டும். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சி நிர்வாகங்கள், உரிமக்கட்டணம் வசூலிப்பதில்லை. புற்றீசல் போல நிறுவனங்கள் உருவாகிய பின்பும் கூட, உரிம புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்கப்படாததால், பல ஊராட்சிகள், வறுமை நிலையில் உள்ளன.

    இந்நிலையில் நிறுவனங்களிடம் இருந்து உரிமம் புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில் உடுமலை ஒன்றியத்தில், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் எந்திரம் நிறுவி தொழில் உரிமம் வழங்க, திருத்திய உரிமக்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஒன்று முதல் 5 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 50 ரூபாய், 5 முதல் 10 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 100 ரூபாய், 10 முதல் 25 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 80 ரூபாய்,25 முதல் 50 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத் திறனுக்கும் 70 ரூபாய், 51 முதல் 100 குதிரைத் திறன் வரை, ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 60 ரூபாய், 100 முதல் 200 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும், 40 ரூபாய்,201 முதல் 500 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 30 ரூபாய், 501 குதிரைத்திறனுக்கு மேல் ஒவ்வொரு குதிரைத் திறனுக்கும் 20 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல எந்திரம் ஒன்றுக்கு 50 ரூபாய், ஆய்வுக்கட்டணம் 3,000 ரூபாய், வரைபடக் கட்டணம், 500 ரூபாய், நிலம் கட்டணம் 2,000 ரூபாய் என வசூலிக்கப்படவுள்ளது.எனவே கிராம ஊராட்சி பகுதியில் இயங்கும் நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் வாயிலாக நோட்டீஸ் அனுப்பப்படவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×