என் மலர்
நீங்கள் தேடியது "ஆதித்தனார் கல்லூரி"
- 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு டைசின் கம்பூயீட்டிங் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடைபெற்றது.
- பிரான்சிஸ் டேவின் போன்வி 7 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பாக பல துறைகளை சேர்ந்த 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு டைசின் கம்பூயீட்டிங் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கணிப்பொறியியல் துறை தலைவர் வேலாயுதம் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கணிப்பொறியியல் துறை சேர்ந்த ஞானமூர்த்தி, பரமேஸ்வர், பால சதீஷ், கங்காதரன், கார்த்திக் சிவராம், கணிதத் துறையை சேர்ந்த மகாராஜா, பேச்சிமுத்து மற்றும் கணிப்பொறியியல் துறை சுயநிதிப்பிரிவை சேர்ந்த விமல், ஈஸ்வர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
டைசின் கம்பூயூட்டிங் நிறுவனத்தின் தலைமை முதன்மை அதிகாரியும், நிறுவனருமான சுவிச்சர்லாந்தை சேர்ந்த பிரான்சிஸ் டேவின் போன்வி தேர்வான 7 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார். தேர்வானவர்களை கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
- பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
- பேச்சு போட்டியில் ஆங்கிலத்துறை மாணவி லிபியா நாராயணி முதல் பரிசு பெற்றார்.
திருச்செந்தூர்:
மும்பை சுயசார்பற்ற நிறுவனங்களின் அமைப்பாளர் ஷெரப் 56-வது நினைவுநாளையொட்டி அகில இ்ந்திய அளவில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் பேச்சு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் சி.ரமேஷ் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பொருளியல் துறையின் உதவி பேராசிரியை முருகேஸ்வரி நன்றி கூறினார். போட்டியில் நடுவர்களாக பொருளியல் துறை இணை பேராசிரியர் மாலைசூடும் பெருமாள், உதவி பேராசிரியர் கணேசன் மற்றும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ராஜ் பினோ ஆகியோர் செயல்பட்டனர்.
பேச்சு போட்டியில் முதுகலை 2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி லிபியா நாராயணி முதல் பரிசாக ரூ.2500-ம், இளங்கலை பொருளியல் 3-ம் ஆண்டு மாணவர் செல்வம் 2-ம் பரிசாக ரூ.1,500-ம், இளங்கலை 3-ம் ஆண்டு வணிக நிர்வாகவியல் மாணவர் முகமது செய்க் மபாஷ் 3-ம் பரிசாக ரூ.1000-ம் பெற்றுக் கொண்டனர். மாணவி ஆஷா மற்றும் மாணவர் கார்த்திக் ராஜ் ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பொருளியல் துறையின் உதவி பேராசிரியர் வீ.சிவ இளங்கோ தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவ செயலர்கள் ஜெப்ரின் ஆகாஷ் மற்றும் முகுந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
- ஆதித்தனார் கல்லூரியில்மொபைல் போன் பழுதுநீக்கும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
- நியூடெக்னாலஜிஸ் பயிற்சி நிறுவனம் பயிற்சியை நடத்தியது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இன்ஸ்டியூசன் இன்னோவேசன் கவுன்சில் சார்பாக மொபைல் போன் பழுதுநீக்கும் பயிற்சி பட்டறை கடந்த 7-ந் தேதி முதல் 2 நாட்கள் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில் கவுன்சில் அமைப்பாளர் நித்யானந்த ஜோதி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வரும், கவுன்சில் தலைவருமான து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, கவுன்சில் செயல்பாடுகள் குறித்து பேசினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நியூடெக்னாலஜிஸ் பயிற்சி நிறுவனம் பயிற்சியை நடத்தியது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் தலைமையில், அந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பொறியாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ெமாபைல் போன் உதிரி பாகங்கள் மற்றும் அதன் இயக்கங்களை தெளிவாக மாணவர்களுக்கு விளக்கி கூறினர். இதில் 60 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனையின் பேரில் பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் வாசுகி மற்றும் பேராசிரியைகள் முருகேஸ்வரி, ஸ்ரீதேவி, தீபாராணி, பேராசிரியர்கள் தர்மபெருமாள், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கல்லூரி வளாகத்தில் 75 மரக்கன்றுகளை நட்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண். 48, 231 சுயநிதிப்பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் 1 மற்றும் 2 அணிகள், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மன்றம், மதர்சமூக சேவை நிறுவனம் ஆகியவை சார்பில் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் விழாவை தொடங்கி வைத்து, இந்திய சுதந்திர அமுத பெருவிழாவை நினைவு கூறும் வகையில் கல்லூரி வளாகத்தில் 75 மரக்கன்றுகளை நட்டார். நாட்டு நலப்பணித்திட்டம் சுயநிதிப்பிரிவு அணி எண்.231 திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். மதர்சமூக சேவை நிறுவனத்தலைவர் ராஜ்கமல் கலந்து கொண்டு, பசுமை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசினார். விழா ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்.48-ன் அதிகாரி கவிதா, இளையோர் செஞ்சிலுவை அணி எண்.1 திட்ட அதிகாரி மோதிலால் தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதிதேவி நன்றி கூறினார். கல்லூரி பேராசிரியர்களான அந்தோணி சகாய சித்ரா, ராஜ்பினோ, சிங்காரவேலு, சிரில்அருண், கரோலின் கண்மணி ஆனந்தி, திருச்செல்வன், ரூபன்சேசு அடைக்கலம், சுமதி, செந்தில்குமாரி, டயனா ஸ்வீட்லின், கருப்பசாமி, சிவந்தி, வானொலி தொழிற்நுட்ப கலைஞர் கண்ணன், ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- பொருளியல் துறையை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வினாடி-வினா, கட்டுரை, பேச்சுப்போட்டி, குழு நடனம் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை மற்றும் சமூக ரெங்கபுரம் பைன்டெக் நிறுவனம் சார்பில், பொருளியல் மன்ற கலை இலக்கிய விழா நடந்தது. இதில் பொருளியல் துறையை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் வினாடி-வினா, கட்டுரை, பேச்சுப்போட்டி, குழு நடனம், கழிவுகளில் இருந்து கலை, அடுப்பில்லா சமையல் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளை பொருளி யல் துறை தலைவர் சி.ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் படி வினாடி-வினாவில் பொருளியல் இளங்களை 3-ம் ஆண்டு மாணவர்கள் செல்வம், ஞான அபினாஷ் முதல் பரிசு பெற்றனர்.
கட்டுரைப்போட்டியில் எம்.பில். மாணவி சன்மதி முதல் பரிசும், பேச்சுப்போட்டியில் 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர் செல்வம் முதல் பரிசை பெற்றார்.
கழிவுகளில் இருந்து கலை என்ற போட்டியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி வேலம்மாள் என்ற பொன்திவ்யா முதல் பரிசும், பாட்டுப்போட்டியில் எம்.பில். மாணவி சன்மதி முதல் பரிசும், அடுப்பில்லா சமையல் போட்டியில் முதுகலை 2-ம் ஆண்டு பொருளியல் மாணவர்கள் சுந்தர்ராஜ், ஆகாஷ் முதல் இடத்தை பிடித்தனர்.
பேராசிரியர்கள் முத்துக்குமார், மாலைசூடும் பெருமாள், கணேசன் மற்றும் உமா ஜெயந்தி ஆகி யோர் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.
பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். விழா அமைப்பாளர் உதவி பேராசிரியர் ச.சிவமுருகன் வரவேற்று பேசினார். தமிழ்த்துறை தலைவர் கு.கதிரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உதவி பேராசிரியர் பே.மருதையா பாண்டியன் விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உதவி பேராசிரியர் வீ.சிவ இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், தமிழ்த்துறை தலைவர் கு.கதிரேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அசோகன், பிரியதர்ஷினி மற்றும் மாணவ செயலர்கள் ஜெப்ரின் ஆகாஷ், முகுந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.உதவி பேராசிரியர் சி.முரு கேஸ்வரி நன்றி கூறினார்.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.
- கருத்தரங்கில் 32 ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத் துறை சார்பில் ' இன்றைய நடைமுறை வாழ்வில் இயற் கணிதம் மற்றும் பகுப்பாய்வு கணிதம்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்த ரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, அன்றாட வாழ்வில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் ஜோசப் கென்னடி கலந்து கொண்டு, எண் அமைப்பு மற்றும் புலங்கள் என்ற தலைப்பில் பேசினார். இதில் ஆய்வு மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
கருத்தரங்கில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பரணிதர் கலந்து கொண்டு, குவிந்த தொடர்கள் குறித்தும், கணிதத்துறை பகுப்பாய்வு செய்து கற்பது குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் 32 ஆய்வு மாணவர்கள், தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இந்த கட்டுரைகள் ஐ.எஸ். பி.என். எண் கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டது. கருத்த ரங்கின் பொறுப்பாளராக கணிதத் துறை பேராசிரியை செண்பகா தேவி செயல் பட்டார். இதில் 19 கல்லூரி களை சேர்ந்த பேராசிரி யர்கள், ஆய்வு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கை கணிதத்துறை தலைவர் வழிகாட்டுதல்படி, துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
- ஆதித்தனார் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்
- போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கண்காட்சியில் கிடைக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் நெல்லையில் உள்ள சி.ஆர். புத்தக ஏஜென்சி தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் அனைத்து துறைகளை சேர்ந்த புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கண்காட்சியில் கிடைக்கிறது.
இந்த கண்காட்சி தொடக்க விழாவில் மூத்த பேராசிரியர் முனைவர் பாலு, உடற்கல்வி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ், உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் நூலக உதவியாளர் சரவணமுத்து, முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். கண்காட்சி நாைள மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
- சாதனை படைத்த தொழில் அதிபர்களோடு மாணவர்கள் கலந்துரையாடினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி- புத்தாக்க மையம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவு வளர்ச்சி- புத்தாக்க மையமும் இணைந்து இ்றுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வளர்ச்சி கருத்தரங்கம் நடத்தியது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் எஸ்.காயத்ரி தொழில் திட்டமிடல் மற்றும் புதிய தொழிைல தொடங்குவதில் உள்ள சவால்கள், அதை எவ்வாறு எதிர் கொண்டு வெற்றியடைவது என்பது பற்றி விளக்கி பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மைய உதவி இயக்குனர் ஜீ.அகிலா தொழில் முனைவோர்களுக்கு அரசு ஏற்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பின் நெல்லை மாவட்ட துணை இயக்குனர் ஜெரினாபூபி அரசு தொழில் தொடங்க வழங்கும் நிதியுதவி மற்றும் சலுகைகள் குறித்து பேசினார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் பகுதியில் சாதனை படைத்த தொழில் அதிபர்களோடு மாணவர்கள் கலந்துரையாடினர்.
இதில் திருச்செந்தூர் கே.சின்னத்துரை அன்கோ உரிமையாளர் ஜெ.முருகன், விவேகா கட்டுமான உரிமையாளர் பொறியாளர் கே.நாராயணன், வீ.ஆர்.கே. லிங்சின் உரிமையாளர் கே.பி.ரவிச்சந்திரன் மற்றும் மிஸ்டர் கிட்டுக் கிச்சன் உரிமையாளர் எஸ்.சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். முன்னதாக தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் புத்தாக்க மைய ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம் வரவேற்றார். தொழில் முனைவோர் மையத்தின் இயக்குனர் மாலைசூடும் பெருமாள் நன்றி கூறினார்.
கருத்தரங்க ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின்படி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் புத்தாக்க நிலையத்தின் இயக்குனர் மகேஷ் குற்றாலம் மற்றும் அதன் கள இயக்குனர் சுவேதரன் வழிகாட்டுதலின்படி பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவி, முருகேஸ்வரி, மருதையா பாண்டியன், ராஜ்பினோ, செல்வகுமார், கருப்பசாமி, திலிப்குமார், சிரில் அருண், ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் பாலு, முத்துக்குமார், ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், அந்தோணி சகாய சித்ரா, கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
- ஆதித்தனார் கல்லூரியில் வருடத்திற்கு 2 முறை ரத்த தான முகாம் நடத்தப்படுகின்றது.
- ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மாணவர்கள் ரத்ததானம் செய்கின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் சார்பாக வருடத்திற்கு 2 முறை ரத்த தான முகாமானது ஆதித்தனார் கல்லூரியில் நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு முகாமிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்கின்றனர். அது மட்டுமல்லாது எப்பொழுதெல்லாம் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுகின்றதோ, அப்பொழுது மாணவர்கள் மருத்துமனைக்கும் நேரடியாகச் சென்று ரத்ததானம் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மாணவர்கள் ரத்ததானம் செய்கின்றனர். மாணவர்களின் தன்னலமற்ற இந்த சேவையைப் பாராட்டும் வகையில் ஆதித்தனார் கல்லூரியில் ரத்த தான கழகத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் டி.பொன்ரவி, மருத்துவர் பாபநாசகுமார் மற்றும் மருத்துவர் சசிகலா முன்னிலையில் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் மற்றும் கல்லூரிச் செயலர் ஜெயக்குமார், ரத்ததான கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி சகாய சித்ரா மற்றும் சி.மோதிலால் தினேஷ் ஆகியோரைப் பாராட்டினர்.
- ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 வகையான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
- வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு,கல்லூரியின் முதல்வர் வைஸ்லின் ஜிஜி பரிசு கோப்பைகளை வழங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அகதர உள் மதிப்பீட்டு குழு சார்பில் கலாசார போட்டிகள் கடந்த 13-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இளங்கலை மாணவ பிரிவு மற்றும் முதுநிலை மாணவ பிரிவுகளில் தனித்தனியே பாட்டுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் போட்டி, குழு நடன போட்டி, புகைப்பட போட்டி, குறும்பட போட்டிகள் என மொத்தம் 14 வகையான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் வைஸ்லின் ஜிஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். முன்னதாக ஆதித்தனார் கல்லூரியின் 2022-2023-ம் ஆண்டுக்கான கலைத்திறன் போட்டிகளின் பொறுப்பாளர் ஸ்ரீதேவி வரவேற்றார். ஆதித்தனார் கல்லூரியின் செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். உள்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் வேலாயுதம், ரமேஷ் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- இஸ்ரோ தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
- படைப்பாற்றல் மிக்க நபராக மாறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையில்லை என்று விஞ்ஞானி மந்திரமூர்த்தி கூறினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 58-வது கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது.
இஸ்ரோ தலைமை விஞ்ஞானி
கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
ஆமதாபாத் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) செயல்பாட்டு மைய தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஊக்கப்பரிசு
டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும், 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கும், விருது பெற்ற பேராசிரியர்களுக்கும் ஊக்கப்பரிசுகளை வழங்கினார். பின்னர் தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி பேசியதாவது:-
நான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் பிளஸ்-2 படிப்புக்கு பிறகு உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை இக்கல்லூரி எனக்கு வழங்கியது.
நல்ல மாணவராக இருந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, சரியான பாதையை தேர்ந்தெடுத்து தேவையான உழைப்பை வழங்கியது எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது.
வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக சிக்கலானது, சவால்கள் நிறைந்தது. அதேபோன்று வெற்றிக்கான வழிமுறையை தேர்ந்தெடுப்பதும் மிகவும் முக்கியம். நாம் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும்.
கடின உழைப்பு
விஞ்ஞானியாகவோ அல்லது எந்த துறையிலும் ஒரு படைப்பாற்றல் மிக்க நபராக மாறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையில்லை. முறையான கல்வி, ஆழ்ந்த சிந்தனைத்திறன் உள்ளவர்கள் நிச்சயம் எந்த துறையிலும் சிறந்த வல்லுனராகலாம். மாணவர்கள் எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நாம் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தாலும், எந்த சூழ்நிலையிலும் அது நம்மை பாதிக்கக்கூடாது. கடின உழைப்பையும், அறிவாற்றலையும் கொண்டு வெற்றி பெற வேண்டும். நம்மை பலவீனப்படுத்தும் நிகழ்வுகளை அறிவாற்றலால் முறியடியுங்கள். எந்த பின்பலமும் இல்லாத சூழ்நிலையில் இருந்து முன்னுக்கு வந்த நானும் இதற்கு சிறந்த உதாரணம்.
நுணுக்கமான அறிவு
மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் எந்த விஷயத்தையும் ஏற்று கொள்ளாதீர்கள். வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களை கற்றுக் கொண்டால், அது எப்போதும் கை கொடுக்கும். கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் கல்லூரி பருவத்திலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து துறைகளிலும் நுணுக்கமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே இன்றைய தேவையாக இருக்கிறது. கல்வியின் பயன் அதிகம் இருந்தாலும், அறிவை மேம்படுத்துதலே முதன்மையானது. சவாலான வாழ்க்கையின் பிரச்சினைகளை நுட்பமான அறிவு கொண்டு வெல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆண்டு மலர் வெளியீடு
விழாவில் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் ஆண்டு மலரை வெளியிட, அதனை விஞ்ஞானி மந்திரமூர்த்தி பெற்றுக்கொண்டார். கல்லூரி பொருளியல் துறை தலைவர் ரமேஷ் வாழ்த்தி பேசினார்.
விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நூலகர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார்.
- கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை வேதியியல் துறை சார்பில் "சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். முதுநிலை வேதியியல் துறை தலைவர் கோகிலா வரவேற்றார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை இணை பேராசிரியர் எஸ்.சபியா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு "செம்பை உயிரியல் வாழ்க்கையோடு இணைத்தல்" என்ற தலைப்பில் பேசினார். திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியின் பேராசிரியர் ஆர்.செல்வின் ஜோசிபல் "விசிபில் லைட் ட்ரைவன் டைட்டானியா பேஸ்டு நானோ காம்போசைட் சிஸ்டம் பார் என்விரான்மென்ட்ஸ் அப்ளிகேஷன்ஸ்" என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் கோகிலா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராகவும், பேராசிரியர்கள் ஆல்வின் ஜெயதுரை, மூகாம்பிகை ஆகியோர் கருத்தரங்க அமைப்பாளராகவும் செயல்பட்டனர்.
கருத்தரங்கில் ஆதித்தனார் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் அந்தோணி முத்துபிரபு, ஆய்வக உதவியாளர் ஐகோர்ட் மகாராணி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.