search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 பேர் கைது"

    • தாக்கு தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக்கோரி சாமிநாதனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளி களை கைது செய்வதாக உறுதி அளித்த தின் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அய்யன்கோவில் தெருவை சேர்ந்த நாரா யணன் மகன் சாமிநாதன்(35). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பின ருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சாமிநாதன் அங்குள்ள பகவதியம்மன் கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றார்.

    அப்போது ஒரு கும்பல் சாமிநாதனை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்க ளுடன் கடுமையாக தாக்கினர். இதில் சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே தாக்கு தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக்கோரி சாமிநாதனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளி களை கைது செய்வதாக உறுதி அளித்த தின் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது. இந்நிலை யில் சாமிநாதனை அரிவா ளால் வெட்டிய சந்தன காளை, சூரியபிரகாஷ், சந்தோஷ், பழனிக்குமார், நாக ஜெயராம், குபேந்திரன், பாண்டி, ஒண்டி, பால்பாண்டி, செந்தில், எர்ணக்காளை ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பணிக்கம்பாளையம் பாரத் நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பாரத் நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பெருந்துறை போலீசார் அங்கு சென்று கண்காணித்ததில் பாரத் பகுதியில் உள்ள முள்புதர் பகுதியில் சேவல் சண்டை நடைபெற்றது. இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனிஷ் பர்மன் (30), அனோகேஷ் பைடியா (27), கமலேஷ் பைடியா (21), நஸ்ருதின் கைன் (23), முபாரக் பிஸ்வாஸ் (24), பெய்ஜிகாஜி (34), தன்மேஸ் மண்டல் (23), ரஹி மண்டல் (33), அபிக்ஜித் தாஸ் (26), தப்லு மகாஜன் (24), மனோப் மண்டல் (34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 4 சேவல்கள், பணம் ரூ. 4,720 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.39 ஆயிரத்து 260 மற்றும் 5 மோட்டார் சைக்ள்கள், 9 செல்போன்கள், 15 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தேவப்பா என்பவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் 11 பேர் சூதாடி கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மல்லன்குழி கிரா மத்தை சேர்ந்த பிரசாந்த் (29), ஜெகதீஷ் (50), ராமண்ணா (45), பிரபாகரன் (23), தோவப்பா (35), கல்மண்புரத்தை சேர்ந்த மல்லேதேவர் (40), தமிழ்புர த்தை சேர்ந்த சித்தமல்லு (35), அருள்வாடி சித்தமல்லு (35), சிவசங்கர் (40), சுப்பிர மணி (42), சுப்பிரமணி (45) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரத்து 260 மற்றும் 5 மோட்டார் சைக்ள்கள், 9 செல்போன்கள், 15 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நான்கு மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் முறியடிப்பு.
    • அசாம் காவல்துறை, மத்திய விசாரணை அமைப்புகள் இணைந்து கூட்டு நடவடிக்கை.

    சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாக கருதப்படும் அல்கொய்தா மற்றும் பங்களாதேஷில் இயங்கும் அன்சருல்லா பங்களா அணி ஆகியவற்றுடன் தொடர்படையே 11 பேரை, அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் மதரசா பள்ளியின் ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    அந்த மாநிலத்தின் பார்பெட்டா, குவகாத்தி, கோல்பாரா மற்றும் மொரிகான் மாவட்டங்களில் இந்த பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

    மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சியால் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ×