என் மலர்
நீங்கள் தேடியது "பயோ மைனிங்"
- குப்பையை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
- தற்போது 3 லட்சம் டன் வரை அகழ்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 6 தொகுதிகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை:
வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை முழுவதும், கடந்த 40 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பை கிடங்கை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
எந்தவித விதிமுறை அறிவியல் முறையையும் பின்பற்றாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகம் அங்கு குப்பை கொட்டி வந்ததால், குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.
இனிவரும் காலங்களில் குப்பைகளை கொட்ட மாற்று இடம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி காற்று மாசு, நிலத்தடி நீர் மாசுபடுதல் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சுமார் 343 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சுமார் 66.52 லட்சம் டன் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க மாநகராட்சி திட்டமிட்டு ரூ.648 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள அரசிடம் நிர்வாக அனுமதியும் பெற்று இருந்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது குப்பையை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன் கூறியதாவது:-
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 லட்சம் டன் வரை அகழ்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 6 தொகுதிகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
சில ஆரம்பகால நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அவை இம்மாத இறுதிக்குள் சரி செய்யப்பட்டுவிடும். அதன் பின்னர் மார்ச் 1-ந்தேதி முதல் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டன் குப்பைகளை கையாளும் திறனுடன் பணிகள் வேகமெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.10 கோடி செலவில் குப்பையை அகற்றும் பணி நடந்து வருகிறது.
- மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநக ராட்சிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.74.54 கோடி வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளார் கள். நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் ஒருவருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் ஆம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.296 கோடியில் வேலை நடந்து வருகிறது.
அந்தப் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. பாதாள சாக்கடை பணி 17 வார்டு பகுதிகளில் முடிந்துள்ளது. மற்ற வார்டுகளில் பணிகள் நடந்து வருகிறது.
நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதியில் கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலைகள் ரூ.3.50 கோடியில் அழகுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கோணம் தொழில்கல்வி நிலையம் அருகே ரூ.2.50 கோடி செலவில் நவீன படிப்பகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 பூங்காக்கள் ரூ.1 கோடி செலவில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதேபோல் சுகாதாரத் துறையில் தொல்லைவிளை, கிருஷ்ணன் கோவில் ஆகிய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.3 கோடியில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் 10 இடங்களில் நலவாழ்வு மையங்கள் ரூ.2.50கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு இடங்களில் பணி முடியும் தருவாயில் உள்ளது.
சரலூர் மீன் சந்தையில் ரூ.1.5 கோடி செலவில் நவீன வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், வடசேரி ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் ஆகிய 3 பஸ் நிலையங் களும் ரூ.8.35 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளது. வீடு இல்லாமல் சாலையோரம் தூங்கு பவர்கள் தூங்கும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் செட் அமைக்கப்பட உள்ளது.
வலம்புரிவிளையில் உள்ள உரக்கிடங்கு பயோ மைனிங் முறையில் ரூ.10 கோடி செலவில் குப்பையை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த வருட இறுதிக்குள் இந்த பணிகள் முடிந்து விடும். ரூ.10.50 கோடி செலவில் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப் பட்டுள்ளது. அது விரைவில் திறக்கப்பட உள்ளது.
கலெக்டர் அலுவலக சந்திப்பில் அமைக்கப்படும் ரவுண்டாவினை தொடர்ந்து செட்டி குளத்திலும் ரவுண் டான அமைக்கப்பட உள்ளது. மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு எந்த வித பாரபட்சமின்றி அகற் றப்படும். மாநகர பகுதி யில் உள்ளச் சாலை கள் அனைத்தும் இரு வழிச்சாலை களாக ஆக்கி னால் மட்டுமே போக்கு வரத்து நெருக்கடி குறையும்.
முதற்கட்டமாக செட்டிகுளம் முதல் சவேரி யார் கோவில் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக ஆக்கப்பட உள்ளது.இதை தொடர்ந்து மணிமேடை சந்திப்பு முதல் வடசேரி வரையும் இருவழிப்பாதை ஆக்கப்பட உள்ளது. நாகர்கோவில் மாநகரத்தை மாசில்லா மாநகரமாக மாற்றும் பணி தொடங்கப்பட உள்ளது.
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கல்லூரி மாண வர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகு மக்கள் அதனை பின்பற்ற வில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
கோட்டார் ரோடு ரூ.20.60 லட்சம் செலவில் சாலை போடப்பட உள்ளது. மாநகர பகுதியில் வாகனம் நிறுத்தும் வகையில் நவீன வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்படும். தமிழக அரசு பல திட்டங்களை குமரிக்கு வழங்கி வரு கிறது. அந்த வகையில் அற நிலையத்துறை கோவில் களை மராமத்து செய்ய ரூ.5.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஆணையர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.