search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேமுதிக ஆர்ப்பாட்டம்"

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது.
    • தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    மின் கட்டண உயர்வு, ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது ஆகியவற்றை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின் கட்டண உயர்வும், மின் வெட்டும் வழக்கமாகி விடுகிறது. ரேசன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் சரியான முறையில் கிடைப்பது இல்லை. மாதம் தோறும் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக கூறிவிட்டு ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக தே.மு.தி.க. இதுபோன்ற போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவோம்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார்.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், சூரியா, பிரபாகரன், மாறன், செந்தில் குமார், பழனி, வேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் செழியன், மகாதேவன் மற்றும் தே.மு.தி.க.வினர் கலந்து கொண்டனர்.

    கோவையில், துணை செயலாளர் பார்த்தசாரதி, தர்மபுரியில் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    • ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு வருகிற 28-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மக்கள் நலனுக்காக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும், அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க கோரியும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு வருகிற 28-ந் தேதி காலை 11 மணி அளவில் தே.மு.தி.க. சார்பில் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதில் ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே தே.மு.தி.க. சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு:

    தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின்சார உயர்வு மற்றும் உணவு பொருள் மீதான ஜி.எஸ்.டி.வரி உயர்வை மத்திய- மாநில அரசுகள் திரும்ப பெற வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே தே.மு.தி.க. சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.அனகை முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில தொழில்சங்க பேரவை செயலாளர் காளிராஜன், தம்பி முருகன், முகிலரசன், கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கறீம், நகர செயலாளர்கள் முருகம், ரங்கன், எம்.ஜி.மூர்த்தி, பிரபு, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லயன் நாகராஜ், கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் எத்திராஜ், ராமதாஸ், ஜெயபால், கவுன்சிலர் தனலட்சுமி முருகன், அலாவுதீன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×