என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை கஸ்தூரி"

    • டெங்கு, மலேரியா உங்கள் குடும்பத்திலேயே முற்றியிருக்கிறதே. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?
    • கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்று கலைஞர் அன்றே சொன்னார்.

    சென்னை:

    சனாதனதர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகையும் சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

    டெங்கு, மலேரியா உங்கள் குடும்பத்திலேயே முற்றியிருக்கிறதே. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி சனாதனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதலில் உண்டியலில் இருந்து கையை எடுங்க.

    கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்று கலைஞர் அன்றே சொன்னார். இதைத்தான் சொன்னார் போலும்.

    சனாதன எதிர்ப்பில் தி.க.வை. போல் தி.மு.க.வும் உறுதியாக இருந்தால் முதலில் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். ஏனெனில் பல சனாதனவாதிகள்தான் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திராவிட விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதார மணம் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா?
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

    சென்னை:

    சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனாவுடன் ஒப்பிட்டு அதை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சனாதன தர்மம் எய்ட்ஸ், தொழுநோய் போன்றது என்று விமர்சித்தார்.

    இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி கூறியதாவது:-

    இளவரசருக்கு டெங்கு, கொரோனா... ஆ.ராசாவுக்கு எய்ட்ஸ், தொழுநோய் பொருத்தம்தான். அட மாநாடு வேணாம்யா... திராவிட விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதார மணம் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா?

    பிடிக்காத விஷயத்தை தானே எதிர்க்க முடியும். தேர்தலுக்கு தேர்தல் இந்த மாதிரி எதையாவது பேசுவார்கள். தேர்தலுக்கு முற்றிய சனாதனிகளிடம் போய் நிற்பார்கள். அவர்களின் கூட்டணி தலைவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    காலை தந்தை (மு.க.ஸ்டாலின்) 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்தார். மாலையில் தனயன் சனாதனத்தை ஒழிப்பேன் என்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். முதலில் அதை ஒழித்துவிட்டு வரட்டும். அப்போது முதல் ஆளாக நானே கைதட்டி வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
    • இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்க கூடாது என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி வருமாறு:-

    ஜனநாயக நாட்டில் தேர்தலை மக்கள் புறக்கணிக்கவே கூடாது. அதற்கான விழிப்புணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டின் 2-ம் பெரிய கட்சியான அ.தி.மு.க.வே தேர்தலை புறக்கணிக்கிறது என்பது எனக்கு ஏற்புடையது இல்லை. அவர்கள் போட்டியிட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்பது தமிழ்நாட்டில் இது முதல் தடவை என்று நான் நினைக்கிறேன். எனவே இது எனக்கு ஏற்க முடியாத ஒரு அறிவிப்பாக இருக்கிறது. இதை எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற பலரது விருப்பமாக இருக்கிறது.

    தி.மு.க. இருக்கும் இடத்தில் அ.தி.மு.க. அதை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் அது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய ஒரு அ.தி.மு.க.வாக இருக்கும். அவர்கள் ஒதுங்கிப்போவது என்பது கண்டிப்பாக பா.ஜ.க. தான் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி, நாங்கள் 3-வது இடத்துக்கு வந்து விட்டோம் என்று அவர்களே வாக்குமூலம் கொடுப்பது போல் இருக்கிறது. என்னாலும், என்னைப்போல் இருப்பவர்களாலும் அதை ஜீரணிக்கவே முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
    • வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன்.

    சென்னை போயஸ் கார்டனில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்பேது அவர் கூறியிருபு்பதாவது:-

    தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

    தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறிவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.

    நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்.

    மற்ற சமூகங்களையும், பிராமணர்களையும் இழிவுபடுத்தியபோது மக்கள் புரட்சியாக எடுத்து கொண்டனர்.

    வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன். பொய்களுக்கு அச்சப்படுபவர் நான் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று கஸ்தூரி பேசியது சர்ச்சையானது.
    • என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர் என்று கஸ்தூரி ஆதங்கம்

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடிக்க, இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.

    நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தெலுங்கு மக்களை இழிவாக பேசிய நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக பிரமுகரான அமர் பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தெலுங்கு சமூகத்தின் உணர்வுகளை அவமரியாதை செய்யவோ அல்லது புண்படுத்தவோ துணிந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும், குறிப்பாக தமிழக அரசியல் சூழலில். தெலுங்கு சமூகத்தின் பெருமை மற்றும் மதிப்புகள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. மேலும் எங்கள் கவுரவத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

    என் தோழி நடிகை கஸ்தூரியின் கருத்து எல்லை மீறிவிட்டது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த வித அவமரியாதையையும் தெலுங்கு சமூகம் பொறுத்துக்கொள்ளாது" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். 

    • அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று கஸ்தூரி பேசியது சர்ச்சையானது
    • என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர் என்று கஸ்தூரி ஆதங்கம்.

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடிக்க இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.

    நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.

    அப்போது கஸ்தூரியிடம் குறுக்கிட்டு பேசிய பத்திரிகையாளர் ஒருவர், "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள்" என்று நீங்கள் பேசியதாக கூறினார்.

    அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, அப்படி எதுவும் தான் சொல்லவில்லை என்று மறுத்து பேசினார். நேற்று தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிவிட்டு இன்று கஸ்தூரி அப்படி எதுவும் தான் பேசவில்லை என்று மாற்றிப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கஸ்தூரி நேற்று தெலுங்கர்களை இழிவாக பேசிவிட்டு இன்று அப்படி பேசவே இல்லை என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று கஸ்தூரி பேசியது சர்ச்சையானது
    • என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர் என்று கஸ்தூரி ஆதங்கம்.

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடிக்க இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.

    நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து நான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அவரது அறிக்கையில், "இன்று எனது மிகவும் மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்கள் மீதும் நான் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தை பொறுமையாக எனக்கு விளக்கினார்.

    நான் என் பாரதத்தின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி. நான் எப்போதும் சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். தெலுங்கு மொழியோடு எனக்கு ஒரு சிறப்பு பந்தம் இருப்பது எனது அதிர்ஷ்டம்.

    நாயக்கர் மன்னர்கள், கட்டபொம்மன் மற்றும் தியாகராஜகிருதிகள் பாடிய பெருமைமிக்க நாட்களை ரசித்து வளர்ந்தள் நான். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் குடும்பத்தை கொடுத்துள்ளனர்.

    நான் கூறிய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களை குறித்து பேசியதே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்தை பற்றி நான் பேசவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது எனது நோக்கமாக இருந்ததில்லை. நான் கூறிய கருத்துக்காக வருந்துகிறேன். அனைவரின் நலன் கருதி, 3 நவம்பர் 2024 அன்று ஆற்றிய உரையில் தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய அனைத்து கருத்துகளையும் திரும்ப பெறுகிறேன்.

    அந்த உரையில் நான் எழுப்பிய சில மிக முக்கியமான விஷயங்களில் இருந்து திசை திருப்புவதற்கே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு சகோதரர்கள் தமிழ்நாட்டின் பிராமணர்களின் கண்ணியத்திற்கான போராட்டத்தில் அணி திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என கஸ்தூரி பேசியது சர்ச்சையானது.
    • தெலுங்கு மக்கள் குறித்து நான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடித்தது. தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிய கஸ்தூரி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, தெலுங்கு மக்கள் குறித்து நான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க போலீசார் முடிவு.
    • கஸ்தூரி தனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக கூறியிருக்கிறார்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களை பாது காப்பதற்காக வன்கொடுைம தடுப்பு சட்டத்தை போல புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தெலுங்கு சங்கம் சார்பில் எழும்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன்படி கஸ்தூரி மீது கலவரத்தை தூண்டுதல், 2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் கஸ்தூரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி குறிப்பிட்ட நாளில் நேரில் வரவழைக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையே கஸ்தூரி தனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருக்கிறார். இது பற்றியும் ஆலோசித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில், நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    இந்நிலையில், அரசு ஊழியர்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சுக்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட பிரிவினர் அதிக லஞ்சம் பெறுவதாக பேசிய நடிகை கஸ்தூரியின் தரம் தாழ்ந்த பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகளை வைத்து, குறிப்பிட்ட பிரிவுகளை சார்ந்த ஊழியர்களை கொச்சைப்படுத்துவதா ? என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், குறிப்பிட்ட பிரிவினர் மீது தவறான பிம்பம் ஏற்படும் வகையில் விதமாக பேசிய நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • இவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
    • நடிகை கஸ்தூரி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், நடிகை கஸ்தூரிக்கு நடிகர் எஸ்.வி. சேகர் கண்டனம் தெரிவித்தார்.

    சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்தது. மேலும், இவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக அவர் பெயரில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த நடிகர் எஸ்.வி. சேகர் நடிகை கஸ்தூரி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பொது வெளியில் நாம் பேசும் போது, என்ன பேசுகிறோம் என்பதை விட எந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு போக வேண்டும். மைக்கை பார்த்ததும், வியாதிக்காரன் வாந்தி எடுத்த மாதிரி எல்லாவற்றையும் பேசினால் தப்பு வரத்தான் செய்யும். கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். அவர்கள் பேச வேண்டுமெனில், பிரமாணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவதே தப்பு," என்று தெரிவித்தார்.

    • நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்த அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடிகை கஸ்தூரி மீது தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில், நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை, மதுரை, திருச்சியை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் நடிகை கஸ்தூரி மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், ஆண்டிப்பட்டியில் நடிகை கஸ்தூரி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×