என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் தா.மோ.அன்பரசன்"
- புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
சென்னை:
சட்டசபையில் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகன், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் அளித்து கூறியதாவது:-
சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ம் இடத்தில் உள்ளது. கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப் பழம்-முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, பெரம்பலூர் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாகவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி பனங் கருப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், செட்டிநாடு கைமுறுக்கு-சீடை, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டறை கருவாடு-பனங் கற்கண்டு ஆகியவற்றிற்க்கு எம்.எஸ்.எம்.இ. துறையின் மூலம் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளுக்கு புவி சார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் .
தீப்பெட்டி தொழிலை பொருத்தமட்டில் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் 566 நிறுவனங்களும் கோவில்பட்டியில், சுமார் 400 நிறுவனங்களும், தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதோடு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த தீப்பெட்டி களின் தனித்துவத்தை உலகம் முழுவதும் அறிய செய்யவும், விற்பனையை அதிகரிக்கவும் எம்.எஸ். எம்.இ. துறையின் சார்பில் ஆல் இந்தியா சேம்பர் ஆப்-மேட்ச் பேக்டரி சிவகாசி, தமிழ்நாடு சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சிவகாசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான செலவினத்தில் 50 சதவிகிதத் தொகையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் மானியமாக வழங்கப்படும் என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் சங்க உறுப்பினர்கள் தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், சிவகாசி, சாத்தூர், கோவில்பெட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யபடும் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆவணங்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. எழுந்து இதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், வரலாற்று ஆவணத்தை அளித்தால் ஆய்வு செய்து, சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
- தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
- சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
சென்னை:
போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெறும்.
இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது.
பல்லாவரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதை பெற்றுக்கொண்டார்.
- சிறந்த மாநகராட்சிகள் பிரிவில் மதுரை 3-வது இடத்தை பிடித்துள்ளது.
காந்திநகர்:
பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காக பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழகத்திற்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். இந்த விருதை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டு வசதி மாநாட்டில், பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக்கொண்டார்.
'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு 3-வது இடத்தையும், சிறந்த மாநகராட்சிகள் பிரிவில் மதுரை 3-வது இடத்தையும், சிறந்த பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சி 5-வது இடத்தையும் பிடித்துள்ளன.
- தீனதயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜான திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சீரான மின் விநியோகம்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் 26,230 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், நமது பாரத நாட்டின் 75-வது சுதந்திரதின அமுத பெருவிழாவினை முன்னிட்டு, "ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @ 2047" நிகழ்ச்சியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம்.. இப்பெரு விழாவினை முன்னிட்டு ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் @ 2047 என்ற நிகழ்ச்சி எல்லா பகுதியிலும் கொண்டாடி வருகிறது. தீனதயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜான (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana Scheme) திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க பயன்பெறும் திட்டமாகும்.
மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் இதர பயன்பாட்டிற்கும் தடையில்லா மின்சாரம் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் கிராமத்தில் மின் விநியோக பயன்பாட்டிற்காக, நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.34.83 கோடி மதிப்பில் 2 புதிய 33 KV துணை மின் நிலையங்கள் காஞ்சிபுரம் மற்றும் திருமுக்கூடல் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 26,230 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். மேலும், இதே திட்டத்தின் மூலம் மாகரல், பெருநகர், பரந்தூர் மற்றும் நெல்வாய் ஆகிய 4 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 36,333 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் (Integrated Power Development Scheme) கீழ் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் 2 புதிய 33 KV துணை மின் நிலையங்கள் ரூ.30.46 கோடி மதிப்பில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் 43,081 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் மா.சுதாகர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, கூடுதல் தலைமை பொறியாளர் கி.சண்முகம், மாவட்ட நோடல் அலுவலர் அகஸ்டின் ரேமண்ட் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.