search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரியில் மூழ்கி பலி"

    • 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விடுமுறை தினத்தையொட்டி ஏரியில் குளிக்க வந்தபோது, 2 பெண்கள், ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளனர். அதன்படி, ரேவதி, சிவஸ்ரீ, திர்ய தர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்
    • உடலை மீட்டு விசாரணை

    வாணாபுரம்:

    வாணாபுரம் அடுத்த குங்கிலியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 42) தொழிலாளி.

    இவரது உறவினரான விழுப்புரம் மாவட்டம் கண் டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (37) தொழிலாளி ஆகியோர் கொட்டையூரில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்கசென்றனர்.

    நீண்ட நேரம் ஆகியும் இரு வரும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர் கள் ஏரிக்குச் சென்று பார்த்தனர். ஆனால் அவர்களை அங்கு இல்லை.

    ஏரி கரையில் இருவரது உடைகள் மற்றும் செல்போன் செருப்பு உள்ளிட்டவைகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அப்பகுதியில் அவர்களை தேடி பார்த்தனர். அவர்கள் கிடைக்காததால் வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைய டுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முரு கன், இன்ஸ்பெக்டர் செல்வ. நாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீ சார், தண்டராம்பட்டு தீய ணைப்பு வீரர்கள் ஏரிக்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் னெ்பதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இன்று காலை உறவினர்கள் அந்த பகுதி மக்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் 2 பேரின் உடல் வாணாபுரம் போலீசாருக்கு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து ஏறியில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடை விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்த பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    கர்நாடகா மாநிலம் பத்ராவதி அடுத்த காளங்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 மகள்களும், பிரேம் (வயது 11) என்ற மகனும் உள்ளார்.

    மாணவன்

    பிரேம் அதே பகுதியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். ரேகாவின் பெற்றோர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கலைஞர் நகரில் வசித்து வருகின்றனர்.

    கோடை விடுமுறை என்பதால் பிரேம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தாத்தா மூர்த்தியின் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு அருகே அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பிரேம் மாயமானார்.

    இதனையடுத்து மூர்த்தி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடினர். மாணவன் கிடைக்காததால் மூர்த்தி நேற்று மாலை குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயமான பிரேமை தேடி வந்தனர்.

    இவர்கள் வசிக்கும் அதே பகுதி அருகே அம்மணாங்குப்பம் ஏரி உள்ளது. இன்று காலை சந்தேகத்தில் மாணவனின் தாத்தா ஏரியில் இறங்கி தேடினார்.

    ஏரியில் பிணம்

    அப்போது மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிந்தது. பின்னர் மாணவனின் உடலை வெளியே கொண்டு வந்தார்.

    தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று பிரேமின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துணி துவைத்தபோது எதிர்பாராத விதமாக லாவண்யா தடுமாறி ஏரிக்குள் விழுந்துள்ளார்.
    • லாவண்யா பிணமாக மிதப்பது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு தகவல் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் கொடிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் லாவண்யா (வயது 18).

    இவர் துணி துவைப்ப தற்காக அருகேயுள்ள கரடிமலை ஏரிக்கு சென்றுள்ளார். அங்கு துணி துவைத்தபோது எதிர்பாராத விதமாக லாவண்யா தடுமாறி ஏரிக்குள் விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது.

    இதனால் நீரில் மூழ்கி லாவண்யா உயிரிழந்தார். துணி துவைக்க சென்ற பெண்ணை காணவில்லை என்று அவரது வீட்டில் தேடிவந்த நிலையில் ஏரியில் லாவண்யா பிணமாக மிதப்பது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×