என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீரன் சின்னமலை"

    • இன்றளவும் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் சிறந்து விளங்குகிறது.
    • வேளாண் குடும்பத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து உயர்ந்துள்ளேன்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூரில் கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமண மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலை திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

    தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்க செயலர் எம்.கே.சேகர் வரவேற்றார். தீரன் சின்னமலை முழு திருவுருவ வெண்கல சிலையை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் திறந்து வைத்து அவர் பேசியதாவது:-

    கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்டவர் தீரன் சின்னமலை. தீரன் சின்னமலையின் வரலாற்று குறிப்புகள் வெளிநாட்டினர் பலர் தங்களின் பயண குறிப்புகளில் குறிப்பிட்டு உள்ளனர். கொங்கு நாட்டின் குறுநில மன்னராக இருந்த தீரன் சின்னமலை ஆட்சியில் அமைதியான வாழ்வும், தொழில், மருத்துவம், வேளாண் பணிகளில் சிறந்து விளங்கியுள்ளது. இன்றளவும் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் சிறந்து விளங்குகிறது.

    வட மாநில மக்கள் கூட கொங்கு மண்டலத்தை நோக்கியே வருகை தருகின்றனர்.கொங்கு மண்ணில் ஆதிக்க மனப்பான்மை எப்போதும் இல்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமும் எப்போதும் இல்லை. வேளாண் குடும்பத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து உயர்ந்துள்ளேன்.

    எனவே, கிராமப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நன்றாக படித்து, வேலை வாய்ப்பு களை பெற்று சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிலை திறப்பு விழா மலரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.சின்ராஜ் வெளியிட முதல் பிரதியை கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் ஆர்.தேவ ராசன் பெற்றுக்கொண்டார்.

    விழா தொகுப்பினை தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவர் வே.சந்திர சேகரன், பொருளர் எஸ்.எம்.தங்கராசு ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த விழாவில் கர்நாடகா மாநில உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை ஆணையர் ஆர். இராமச்சந்திரன், தமிழ்நாடு சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலருமான செ.முத்துசாமி, ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பெருந்துறை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எல்.சென்னியப்பன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் ஜி.அசோகன், தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, காலை 9.30 மணியவில் முளைப்பாலிகை ஊர்வலத்தை கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் உ.தனியரசு தொடக்கி வைத்தார்.

    இந்த ஊர்வலத்தில் வழக்கறிஞர் ஜீ.வி. பிரகாசம் சர்ச்சில், நாகராசன், திருப்பதி கவுண்டர், பொன்.வெங்கடாசலம்சின்னசாமி, தமிழரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தில் நையாண்டி மேள நிகழ்ச்சியும், கேரளா செண்டை மேள நிகழ்சி நடைபெற்றது.

    சிலை திறப்பு விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலா ளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச்செயலாளர் பி. தங்கமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கும், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது உருவப் படத்திற்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச்செயலாளர் பி. தங்கமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொன்னையன் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விடுதலை வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை.
    • வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்.

    தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள் போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். இதில் இந்தியாவை கட்டியாண்ட ஆங்கிலேயரை அதிர செய்த விடுதலை வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை.

    'தீர்த்தகிரி கவுண்டர்' என்றும், 'தீர்த்தகிரி சர்க்கரை' என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை , வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர்.

    பல்வேறு போர்க் கலைகளை கற்று தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளை தனது படைகளுக்கு கற்று தந்து, இந்திய விடுதலைப்போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார்.

    ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் 3 முறை வெற்றியும் கண்டார்.

    கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 -ந்தேதி, 1756-ம் ஆண்டில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

    இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றை கற்று தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார்.

    பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளை தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.

    தீரன் சின்னமலை பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால் அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும்.

    ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற தீரன் சின்னமலை, அவ்வரிப்பணத்தை பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார்.

    இதை தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, "சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல் அவர் 'தீரன் சின்னமலை' என்று அழைக்கப்பட்டார்.

    தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார்.

    அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7-ந் தேதி, 1782ம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் ஆட்சி பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.

    ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையை திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், தீரன் சின்னமலையுடன் கூட்டணி அமைத்தார்.

    அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த 3 மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து வெற்றிவாகை சூடியது.

    3 மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளை கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம் நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார்.

    என்னதான் நெப்போலியன் உதவிப் புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரதிருஷ்டவசமாக, கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் , நான்காம் மைசூர் போரில் மே மாதம் 4 ந் தேதி, 1799 ம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.

    திப்பு சுல்தான் வீரமரணத்திற்குப் பின்னர், ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் தீரன் சின்னமலை தங்கியிருந்தார். திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை பட்டாலிக்காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார்.

    பின்னர், கி.பி 1799ல் தனது படைகளை பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்.

    லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய அவர், ஜூன் மாதம் 3 ந் தேதி, 1800 ம் ஆண்டில், கோவை க்கோட்டையைத் தகர்க்க திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

    1801ல் பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ்வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்த சின்னமலை வெற்றிக் கண்டார். அந்த வெற்றியை தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கு மிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறி குண்டுகள் வீசி வெற்றிக்கண்டார்.

    ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனிய செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர்.

    கைது செய்து அவர்களை சங்ககிரிக் கோட்டைக்கு கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள் ஆடி 18-ம் பெருக்கு நாளான 1805ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன் தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.

    அவரது நினைவை போற்றும் வகையில் தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது.ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 'தீரன் சின்னமலை மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஜூலை மாதம் 31 -ந்தேதி 2005 ம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 'தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

    விடுதலை போரில் விடிவெள்ளியாக திகழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளன்று நினைவு நாள் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை தீரன் சின்னமலையின் 219-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

    • பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு நாள் நிகழ்ச்சி.

    பல்லடம் :

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 217வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்,பல்லடம் பஸ் நிலையம் முன்பு அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளரும்,மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட அவை தலைவர் ராமசாமி,ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், பூபதி, நகர தலைவர் ஆறுக்குட்டி,நகர செயலாளர் வெங்கடேஷ்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீரக்குமார், ஒன்றிய துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி,மற்றும் மாணவரணி, இளைஞரணி, நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல பல்லடம் கடைவீதியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தீரன் சின்னமலை நினைவஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்ட துணைத்தலைவர் சிட்டிசன் ஈஸ்வரன், நகரத் தலைவர் வடிவேலன், மூத்த நிர்வாகி ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓடாநிலையில் தீரன்சின்னமலை முழுஉருவச்சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • தீரன்சின்னமலை வாரிசுதார்கள் மற்றும் ஓடாநிலை பகுதி மக்களுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தீரன்சின்னமலை மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தீரன்சின்னமலை முழுஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பழனி சாதுசுவாமிகள் திருமட மடாதிபதி சாது சண்முக அடிகளார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தீரன் சின்னமலை முழு உருவச்சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    தீரன் சின்னமலை முழு உருவச்சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஓடாநிலை அருகே தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில் நடந்த தீரன்சின்மலை 217-வது நினைவேந்தல் நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின்னர் தீரன்சின்னமலை வாரிசுதார்கள் மற்றும் ஓடாநிலை பகுதி மக்களுக்கு கவர்னர் சான்றிதழ் வழங்கினார்.

    அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

    நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் சிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் நினைவு நாளில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. இந்திய சுதந்திரத்துக்காக தீரன் சின்னமலை தனது உயிரை தியாகம் செய்தவர். நமது நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்வை இழந்தவர்களையும், ரத்தம் சிந்தியவர்களையும் மறக்க கூடாது. நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை நாம் ஒருபோதும் மறக்க கூடாது. தீரன் சின்னமலைக்கு நாம் நன்றி செலுத்தும் வகையில் சிறந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.

    நண்பர்களே, தமிழ் மிகவும் பழமையான மொழி. மிகவும் அழகான மொழி. தமிழ் மக்களைப்போன்று நானும் தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. விரைவில் நானும் உங்களைப்போன்று சரளமாக தமிழில் பேசுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    ×