என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஈரோட்டில் இன்று"
சூரம்பட்டி:
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் புத்தக திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக இந்த புத்தக திரு விழா உள்ள நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு புத்தக திருவிழா 18 வது ஆண்டாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை )முதல் வருகிற 16 -ந் தேதி வரை இந்த புத்தக திரு விழா நடக்கிறது .
இதன் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் .அமைச்சர் முத்துசாமி, தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் எஸ். கே .எம் மயிலானந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள் . மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசுகிறார்.
இந்த விழாவை சென்னை யில் இருந்து முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ .ஆகியோர் வாழ்த்து பேசுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்