search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடவர் ஹாக்கி"

    • இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள பச்சமுத்து கலை அறிவியல் கல்லூரியில் முடிவடைந்தது.
    • இந்த கோப்பை தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.

    தருமபுரி, 

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் வருகிற 3.8.2023 முதல் 12.8.2023 வரை சென்னையில் நடைபெற உள்ளது.

    7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய நாடுகளின் அணிகள் பங்கு பெறுகிறது.

    இப்போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் கலந்து கொள்ள உள்ளார். 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் விளையாட்டிற்கு தமிழ்நாடு அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம் பல கோடிகள் செலவிடப்பட்டு செயற்கை புல் மைதானம் உலக தரத்திற்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது.

    7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசு கோப்பை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் பாஸ் தி பால் நிகழ்ச்சியை கடந்த 20-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பைக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தருமபுரி நகரில் இந்த பரிசு கோப்பை ஆக்கி வீரர்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள பச்சமுத்து கலை அறிவியல் கல்லூரியில் முடிவடைந்தது.

    அங்கு இந்த பரிசு கோப்பையை கலெக்டர் சாந்தி வரவேற்று பெற்றுக் கொண்டார். இந்த கோப்பை தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, கோவிந்தசாமி, வெங்கடேஷ்வரன், தருமபுரி மாவட்ட கபடி கழக தலைவர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. மாதப்பன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, முன்னாள் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், தருமபுரி மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் மாரியப்பன், செயலாளர் குமார் மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தருமபுரி சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோற்று வெள்ளி வென்றது.
    • இதனால் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

    இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இன்று விளையாடியது.

    இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.

    • அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3 கோல்கள் அடித்தது.
    • தென் ஆப்பிரிக்க அணி 2 கோல்கள் போட்டது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான ஆக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை எதிர் கொண்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங், அபிஷேக் மற்றும் ஜுக்ராஜ் சிங் ஆகியோரின் கோல்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.  

    ×