என் மலர்
நீங்கள் தேடியது "சிங்கம்புணரி"
- மேலாடையின்றி புனித நீராடி வினோத வழிபாடு.
- 108 முறை நான்கு திசைகள் நோக்கி பூமியை தொட்டு கும்பிட்டனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற மலையாள சாத்தையா அய்யனார் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லியார், அய்யனார் சுவாமிகள் அருள்பாலித்து வரும் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் விழா 20 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதாவது இந்த திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட போட்டி, பிரச்சினை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக இக்கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடத்தப்படாமல் இருந்தது.
இதனால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பகையை மறந்து பாரம்பரிய முறைப்படி இந்த ஆண்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக 20 ஆண்டு பகையை மறந்து ஊரே ஒன்றுபட்டு பங்குனி பொங்கல் நடத்த முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் மலையாள சாத்தையா அய்யனார் கோவில் அருகே உள்ள செவந்தான் ஊரணியில் ஆண்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் புனித நீராடினர்.
பகை ஏற்பட்ட போது ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர். அந்த சாபம் நீங்குவதற்காக கிராமத்தினர் இந்த புனித நீராடலில் ஈடுபட்டனர்.
அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் வரிசையாக கைகளை கட்டிக்கொண்டு நின்றவாறு புனித நீராடி 108 முறை நான்கு திசைகள் நோக்கி பூமியை தொட்டு கும்பிட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஊர் மந்தையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய முறைப்படி வரிசையாக தலையில் பொங்கல் கூடை சுமந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மலையாள சாத்தையா அய்யனார் கோவிலை வந்த டைந்தனர். பின்னர் அங்கு அனைவரும் பொங்கல் வைத்தனர்.
பின்னர் ஸ்ரீவில்லியார் சுவாமிக்கு மஞ்சிகள் கட்டிய பசுமாடுகள் காளைகள் ஆங்காங்கே வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த பங்குனி பொங்கல் விழாவில் கிராம பொதுமக்கள், பரம்பரை அறங்காவலர்கள், அனைத்து கோவில் பூசாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மத நல்லிணத்தித்திற்கு அடையாளமாக கரிசல்பட்டி இஸ்லாமியர்கள் அய்யனார் கோவிலுக்கு இந்து பாரம்பரிய முறைப்படி தேங்காய், பழம், தலைவாழை இலை சீர் எடுத்து வருகை தந்து பூசாரியிடம் வழங்கினர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி பொங்கல் திருவிழா நடந்துள்ளதால் வரும் காலங்களில் தங்கள் கிராமம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் உள்ளனர்.
- சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் இடத்தை ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.
- காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை களில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை போன்ற மருத்துவமனை களில் மட்டுமே டயாலிசிஸ் பிரிவு சிகிச்சைக்கான தனி பிரிவு உள்ளது.
ஆனால் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் டயாலிசிஸ் சிகிச்சை முறை செய்து கொள்ள வேண்டிய நோயாளிகள் மதுரை, சிவகங்கை போன்ற நகரங்க ளுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.
எனவே சிங்கம்புணரி பகுதியில் உள்ள டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளி களுக்காக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையில் டயாலிசிஸ் பிரிவு சிகிச்சை கொண்டுவர அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
அதன்அடிப்படையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்க ளவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் பொது நிதியின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொள்ள மாநிலங்கள் அவை உறுப்பினர் ப.சிதம்பரம் தலைமையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணி நடைபெற்றது.
முன்னதாக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் அய்யன்ராஜ் வரவேற்றார். மருத்துவ மனை வளாகத்தை ஆய்வு செய்த ப.சிதம்பரம் டயாலிசிஸ் சிகிச்சைக்கான புதிய கட்டிடம் கட்டப்படும் இடம் குறித்து தலைமை மருத்துவர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை செய்தார்.
ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, பேரூராட்சி கவுன்சிலரும் சிங்கம்புணரி நகர காங்கிரஸ் தலைவரு மான தாயுமானவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் காங்கி ரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.
- சிங்கம்புணரி அருகே 2 இடங்களில் மலைப்பாம்புகள் பிடிபட்டன.
- மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் வெப்பமான பகுதிகளை தேடி பாம்புகள் இடம் பெயர்ந்தது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மகங கன்டான் கோவில்பட்டி குடியிருப்பு பகுதி அருகில் முட்புதரில் மலைப்பாம்பு பதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் நிலைய அதிகாரி பிரகாஷ் தலைமை யிலான வீரர்கள் விரைந்து வந்தனர். முட்புதரில் பதுங்கியிருந்த 5 அடி நீள முள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து சாக்கு பையில் போட்டனர்.
அதே போன்று சிங்கம்பு ணரி- சுக்காம்பட்டி சாலை யில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். ஒரே நாளில் இரண்டு இடங்களில் பாம்புகள் பிடிபட்ட தால் பொதுமக்கள் பீதி அடைந் துள்ளனர். பின்னர் அந்த பாம்புகளை தீயணைப்புத்து றையினர், வனத்துறையின ரிடம் ஒப்படைத்தனர்.
மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் வெப்பமான பகுதிகளை தேடி பாம்புகள் இடம் பெயர்ந்து வருவதால் வீடுக ளுக்குள் புகும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.
- கடையை எப்போ திறப்போம்னு காத்திருக்கும்.
- எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடும்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஒரு மளிகை கடையில் மாடுகள் தினமும் கடையை எப்போ திறப்போம்னு காத்திருந்து, கதவை திறந்ததுமே உள்ளே நுழைந்து அதற்கு தேவையானதை சாப்பிட்டு எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடுமாம்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் மாசிலாமணி கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரியில் பஸ்ஸ்டாண்டிற்கு எதிரில் மளிகை கடை நடத்திவருகிறேன். மாடுகள் நாங்கள் தினமும் கடை திறப்பதற்கு முன்பே கடைக்கு வந்து காத்து நிற்கும். நாங்கள் கடையை திறந்ததும் முதல் ஆளாக கடைக்குள் நுழைந்து அதற்கு தேவையான பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு எந்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்தாமல் வெளியே சென்றுவிடும்.
தினமும் இரண்டு மூன்று தடவை கடைக்கு வரும். நாங்கள் மாடுகளை தொந்தரவு செய்வதில்லை, நாங்கள் அந்த மாடுகளை சிவனாக பாவித்து அதனை தடுப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி மற்றும் அ.காளாப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, எஸ்.வி.மங்கலம், காளாப்பூர் பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
- சிங்கம்புணரி அருகே திருவிளக்கு பூஜை நடந்தது.
- விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இந்த கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இல்லாத வாழ்க்கை நிலைக்க கோரியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், விநாயகர் மந்திரம், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆரத்தியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.